சனி, 1 பிப்ரவரி, 2020

இயேசு சிலுவையில் அறையப்பட்டதன் பின்னணி..

Krishnavel T S  :  இயேசு சிலுவையில் அறையப்பட்ட கதை நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் அதன் பின்னணியில் வேறு ஒரு சுவாரசியமான சம்பவம் உள்ளது
பைபிளை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் ஒரு விஷயம் புரியும்
இயேசு பல இடங்களில் பல்வேறு விதமாக தனது பிரச்சாரங்களை செய்து வந்தாலும் இந்த யூத பூசாரிகளுக்கு பயந்துகொண்டு அவர் எப்போதுமே தனது பிரச்சாரங்களை மறைமுகமாகவே பேசுவார் செய்வார்
அர்த்தத்தை நேரடியாக சொல்ல மாட்டார் ஆனால் நிச்சயமாக ஒவ்வொரு முறையும் "நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன்" "I am telling you the truth "என்று ஒரு பன்ச் டயலாக்கை சேர்த்துக் கொள்வார்
ஒவ்வொரு முறையும் பிரச்சாரம் செய்யும்போது யூத பூசாரிகளும் காவலர்கள் வரும்போது பட்டென்று எஸ்கேப் ஆகி விடுவார் அந்த இடத்தைவிட்டு
ஆரம்பத்தில் வெறும் கருத்துக்களை மட்டும் பிரச்சாரம் செய்து வந்தார்
ஆனால் அவர் கருத்துக்களை ஒரு சாரார் ஏற்றுக்கொண்டாலும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை
எனவே எல்லோரையும் கவர சில வித்தைகளை செய்ய தொடங்கினார் அதன் ஒரு பகுதிதான் ஆட்களை செட்டப் செய்து முடவனை நடக்க வைத்தது குருடனை பார்க்கவைத்தது போன்றவை
இருப்பினும் மக்கள் அவரை தடாலடியாக திரும்பிப் பார்க்க வைக்க இறுதியாக ஒரு ஏற்பாடு செய்தார்

பெத்தானி கிராமத்தில் அவரது நண்பராக இருந்த ஒரு பெண், காதலியாகவும் இருக்கலாம், அவரது பெயர் மார்த்தா அவளுக்கு லாசரஸ் என்ற ஒரு தம்பியும் மேரி என்ற தங்கையும் உண்டு
பைபிளில் மொத்தம் மூன்று மேரி உண்டு முதலாவது இயேசுவின் தாய், இரண்டாவது அவரோடு எப்போதும் இருக்கும், ஒரு சேகரக்டரி என்று வைத்துக் கொள்ளலாம், அவர் பெயர் மேரி மேக்தலின், மூன்றாவது மார்தாவின் தங்கை மேரி.
இந்த மார்தா, ஏற்கனவே பேசிவைத்தது போல, தன் தம்பி லாசரஸ் இறந்துவிட்டதாக சொல்லி கல்லறையில் வைத்து மூடிவிடுகிறாள், யூதர் கல்லறை குகை வடிவில் இருக்கும், இப்போதைய கிறிஸ்தவர்கள் போல குழி தோண்டி புதைத்து சிமெண்ட் போட்டு பூசி போட மாட்டார்கள்.
4 நாட்களுக்கு பிறகு பெத்தாணி வருகிறார் இயேசு.
பரமபிதாவிடம் இயேசு வேண்டிக்கொள்ள லாசரஸ் கல்லறையில் (குகையில்) இருந்து உயிர்த்தெழுந்து வருகிறான்.
இயேசுவின் புகழ் யூதேயா நாடு முழுவதும் அதிர்கிறது.
இந்த நிகழ்வுக்கு மறுநாள் மார்தாவின் வீட்டில் இயேசு அமர்ந்திருக்கும்போது அவள் விலை உயர்ந்த வாசனை திரவம், இரண்டு பாட்டில்களில் எடுத்து வந்து அவரது கால்களில் ஊற்றி, தனது தலைமுடியால் அந்த வாசனை திரவியங்களை அவரது கால்களில் பூசி தேய்கிறாள்.
அப்போது அருகிலிருந்த யூதாஸ், இப்படித்தான் பொருள்களை வீணாக்குவதா இந்த இரண்டு புட்டி வாசனை திரவியங்களை விற்றால் 300 வெள்ளிக் காசுகள் நமது இயக்கத்துக்கு கிடைக்கும் என்று சொல்கிறான்.
அப்போது இயேசு இதைப்பற்றி எல்லாம் நீ பேசாதே என்று யூதாசை கண்டிக்கிறார்.
ஆயினும் தன் இயக்கத்துக்குள் ஒரு குழப்பம் வந்து விடக் கூடாது என்பதற்காக இயேசுவே லாஸ்ட் சப்பர் அதாவது இறுதி இரவு உணவு என்று சொல்லப்படும் நிகழ்வில் தன் சீடர்கள் அனைவரின் கால்களையும் தானே நீர் ஊற்றி கழுவி விடுகிறார்
பிறகு சொல்கிறார் நான் உங்களுக்கு செய்ததை நீங்கள் பிறருக்கு செய்யுங்கள் என்று சொல்கிறார்
யூதாஸ் தன் இயக்கத்தை விட்டு வெளியே செல்ல போகிறான் என்பதை புரிந்து கொண்ட இயேசுவே
அந்த இறுதி உணவின்போது சொல்கிறார் உங்களில் ஒருவர் என்னை காட்டி கொடுப்பீர் என்று
அப்போது வேறு ஒரு சீடர் நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்று கேட்கிறார் உடனே இயேசு
நான் இப்போது ரொட்டித்துண்டை கிரேவியில் முக்கி ஒருவருக்கு கொடுப்பேன் அவர்தான் என்று கேள்வி கேட்ட சீடரிடம் ரகசியமாக சொல்லிவிட்டு
ஒரு ரொட்டித்துண்டை கிரேவியில் முக்கி யூதாஸின் வாயில் ஊட்டிவிட்டு சரி யூதாஸ் நீ உன் வேலையை செய் என்று சொல்கிறார்
மற்ற சீடர்கள் எல்லோரும் யூதாஸ் தான் இயக்கத்தின் பொருளாளர் என்பதால் இயேசு அவரை வேறு ஏதோ பொருளை வாங்கிக்கொண்டு வரச் சொல்கிறார் என்று நினைத்துக் கொள்கிறார்கள்
யூதாசுக்கு மார்தா மேல ஒரு கண்ணா அல்லது இயேசு மேலே காண்டா என்று தெரியவில்லை
இதற்கு அடுத்தபடியாக மறுநாளே இயேசு எருசலேம் நகருக்கு செல்கிறார் அன்றிரவு யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுக்கிறான் அதுவும் முப்பது வெள்ளிக்காசுகள் வாங்கிக்கொண்டு.
இப்போது உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் யூதாஸ் எதற்காக இயேசுவை யூத பூசாரிகளிடம் போட்டுக் கொடுத்தான் என்பது
இன்னொரு முக்கியமான விஷயம் இயேசுவின் இயக்கத்தில் யூதாஸ் பொருளாளர் பதவியை வகித்தவர்.
மேலே சொன்ன சம்பவங்கள் புதிய ஏற்பாடு யோவான் 11ம் அதிகாரத்தில் உள்ளது.
இந்தப் பதிவு தோழர் இயேசுவைப் பற்றி மட்டுமே நான் சொல்கிறேன்
உங்களுக்கு வேறு ஏதாவது தோன்றினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல....

1 கருத்து:

Contrite Hearts சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.