புதன், 25 ஏப்ரல், 2018

இந்தியா சார்க் மாநாட்டில் பங்கேற்காது ?

தினமணி :சார்க் அமைப்பில், இந்தியா, வங்க தேசம், பூடான், ஆப்கானிஸ்தான்,
நேபாளம், மாலத்தீவுகள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடம்பெற்றுள்ளன. இந்த மாநாட்டில், இந்தியா பங்கேற்காது என தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளது. இந்திய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானில், நடைபெறுவதாக இருந்த சார்க் மாநாடு, இந்தியா புறக்கணித்ததன் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைில் 16 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்படனர், இதை தொடர்ந்து, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு இறங்கியது.

கருத்துகள் இல்லை: