செவ்வாய், 24 ஏப்ரல், 2018

கனடா வேன் மோதி 10 பேர் உயிரிழப்பு.. 15 பேர் படுகாயம் ..

மாலைமலர் :கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய
விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.t; கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று டிரக் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. அந்த டிரக்கை ஓட்டியவர் அந்த இடத்தில் இருந்து டிரக் உடன் தப்பியோடினார். அவரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக டொரோண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: