புதன், 25 ஏப்ரல், 2018

கர்நாடக தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை கிடையாது .. தேர்தல் ஆணையம் .

கர்நாடக தேர்தலில் போட்டி இடும் அதிமுக வேட்பாளர்கள் காவிரி நீர் கர்நாடகத்துக்கு போதிய அளவு இருந்தால்தான் தமிழகத்துக்கு தர முடியும் என்று கூறியுள்ளனர் 
வெப்துனியா :கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அதிமுக கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், கோலார் தங்க வயல், ஹனூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதற்காக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மட்டுமே அதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி எனவும், கர்நாடக மாநிலத்தில் அக்கட்சி அங்கீகரிக்கப்படவில்லை எனவும் தேர்தல் ஆணையம் காரணம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: