ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

சந்தையூர்..... தீண்டாமை சுவர் இடிப்பது தான் தீர்வு " - தமிழ் தேசிய மக்கள் கட்சி



Kathiravan Mumbai :· தீண்டாமை சுவரும் இழுபறியும் சந்தையூர் போராட்டத்தில் இன்றோடு 12 வது நாள் மலையில் குடியேறும் போராட்டத்தில்... மக்களுடன் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் ன் அறவிவுறுத்தலின்படி ஆளுங்கட்சியினர் சிலர் சந்தையூர் மக்களிடத்தில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் ...
ஆட்சியும் அதிகாரமும் அருந்ததிய மக்களின் உணர்வுகளை சுயமரியாதை உணர்வுகளை மலுங்கடிப்பதற்கான பணியிலும்,போராட்டம் நீடித்துக்கொண்டே போனால் தங்களுடைய எல்லா உரிமைகளையும் போராட்டவழியிலே பெற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதிகார ஆதிக்க கும்பலுக்கு எதிராக மாறிவிடும் என்கிற காரணத்தாலும் சிலர் சந்தையூரில் வாழும் ஆதிக்க சமூகத்தை சார்ந்த ஊர் பெரியவர்களும் அதிமுக கட்சி காரர்களும் மக்களிடத்தில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து முகவருத்தத்துடன் சென்றனர்....

கருத்துகள் இல்லை: