

அவர் முதல்வராக இருந்தவர். சட்டமன்றத்துக்குள் ஆண் தலைவர்களின் படங்கள்தாம் நிரம்பியிருக்கின்றன. ஒரு பெண் தலைவரின் படம் இடம்பெறுவதில் என்ன தவறு' என்றார். படத்திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாகத் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரும் அறிவித்த பிறகு, விஜயதரணி எடுத்த நிலைப்பாட்டை அதிர்ச்சியுடன் கவனிக்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள். 'விஜயதரணிமீது நடவடிக்கை உறுதி' எனத் தெரிவித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.

அதன்பிறகு, வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அவரைக் குற்றவாளி என அறிவித்தது. ஆனால், இறந்துவிட்டதால் அந்தத் தண்டனையைச் செயல்படுத்த முடியவில்லை. அவர் நிரபராதி எனக் கூறவில்லை. அவர் நிரபராதி என்றால் சசிகலாவை எப்படித் தண்டிக்க முடியும்? ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் சிறையில்தான் இருந்திருப்பார். ஜெயலலிதாவும் சசிகலாவும் கூட்டு சேர்ந்து ஊழல் செய்தனர் என்றுதான் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஜெயலலிதா புனிதமானவர்; சசிகலா குற்றவாளி என்று சொல்வதைவிட ஒரு மோசடி எதுவும் இருக்க முடியாது. இருவரும் சதி செய்துதான் சொத்து சேர்த்தார்கள்; ஒரே வீட்டில் இருந்துகொண்டு கூச்சமில்லாமல் ஊழல் செய்தார்கள் என்று நீதிமன்றம் கூறியது. அப்படிப்பட்டவருக்குப் புனித வேடம் போடும் வேலையை விஜயதரணி செய்வதைவிட இழிவான அரசியல் இருக்க முடியாது" என்றார் கொதிப்புடன்.
கோபண்ணாவின் கருத்து குறித்து நம்மிடம் பேசிய விஜயதரணி எம்.எல்.ஏ, "ஜெயலலிதாவைக் குற்றவாளி எனக் கொச்சைப்படுத்துக் கூடாது. அவர் ஒரு பெண் என்பதால் இதைச் சொல்கிறேன். நான் மறைந்த தலைவர்களைப் பற்றித்தான் பேசுகிறேன். அந்தவகையில் இந்திராகாந்திக்குப் பிறகு, ஜெயலலிதாவை முன்னிறுத்திப் பேசினேன். உயிருடன் உள்ள தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர் சோனியா காந்தி. அவர் தாமதமாக வந்தாலும் என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தைத் தந்தவர் அவர். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்தக் கட்சியில் 23 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறேன். அதைக் கருத்தில் கொண்டுதான் எனக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்தார். அதை நான் பெருமையாகப் பார்க்கிறேன். தன் கணவரைக் கொன்றவருக்குக்கூட இரக்கத்தைக் காண்பித்த பண்புள்ள தலைவர் சோனியா காந்தி. நான் சொல்வது ஆளும்கட்சிக்குச் சாதகமான கருத்து அல்ல.
ஜெயலலிதா படம் திறக்கவில்லையென்றால், எதிர்காலத்தில் எந்தப் பெண் தலைவரின் படமும் இடம் பெறப் போவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். பெண் தலைவரை அங்கீகாரப்படுத்தும் பணியில் தி.மு.க-வும் ஈடுபட்டிருக்க வேண்டும். அ.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சேருமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்யும். அதில் கருத்துச் சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஜெயலலிதா படத்திறப்பு விழா குறித்து கருத்துச் சொன்னதற்காக என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதை நிச்சயம் எதிர்கொள்வேன். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியோடு தான் இருந்த படங்களைப் போயஸ் தோட்டத்து வீட்டிலும் அலுவலத்திலும் வைத்திருந்தார் ஜெயலலிதா. அவர் இறக்கும் வரையில் இந்தப் படங்கள் அவரது அறையை அலங்கரித்தன. பிரதமர் மோடி வந்தபோதும், அந்தப் படங்களை அவர் அகற்றவில்லை. அந்தத் துணிச்சல் எனக்குப் பிடித்திருந்தது. எங்கள் கட்சியின் தலைவர்களைப் பெருமைப்படுத்தியவர் அவர். அப்படிப்பட்டவரின் படத்தைத் திறப்பதில் என்ன தவறு. மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தவர், இறந்துவிட்டார். அவருக்கான அங்கீகாரத்தைக்கூடவா நான் மறுக்க வேண்டும்" என்றார் நிதானமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக