சனி, 4 பிப்ரவரி, 2017

அழகிரி வீட்டு விசேசம் எல்லா உறவினர்களும் கலந்து கொண்டனர் .. ஸ்டாலின் வரவில்லை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதிக்கு கடந்த 2009ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.  கடந்த பல ஆண்டுகளாக மகனுக்கு வாரிசு உருவாக வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தில் இருந்தார் அழகிரி. இந்நிலையில் கர்ப்பினியாக இருக்கும் மறுமகள் அனுசுயாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சென்னை அடையாறில்  உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு கலாநிதிமாறன், தயாநிதிமாறன், செல்வி, முரசொலி செல்வம், ராஜாத்தி அம்மாள் , கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், கீர்த்திகாஉதயநிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். கட்சிப்பிரமுகர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை. மு.க.ஸ்டாலின் இந்த விஷேசத்திற்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு கடைசிவரை இருந்தது.  ஆனால் வரவேயில்லை. – முகில் nakkeeran</

கருத்துகள் இல்லை: