வியாழன், 19 பிப்ரவரி, 2015

நீதிபதி குமாரசாமி : குன்ஹா கொடுத்த தீர்ப்பை தவிர வேறு வழியில்லையே? ஏனுங்க வேறு வழிதேடறதுதான் உங்க வேலையோ?

அப்பீல் வழக்கு விசாரணைதானே?''

""ஆமாங்க தலைவரே.. .. அப்பீல் கேஸை விசாரிக்கும் நீதிபதி குமாரசாமி தி.மு.க சார்பில் பேராசிரியர் அன்பழகனை மூன்றாவது பார்ட்டியா சேர்க்கக்கோரும் மனுவையும் ஏற்கலை. அரசு வக்கீலா பவானிசிங் நீடிக்கக் கூடாதுங்கிற மனுவையும் ஏற்கலை. அதனால ஜட்ஜ் நமக்கு சாதகமாகத்தான் இருப்பார்னு கார்டனுக்கு வேண்டிய வட்டாரம் ரொம்பவே நம்பிக்கைக் கொடுத்திருந்தது. அந்த நம்பிக்கை தகர்ந்து போற மாதிரி திங்கட்கிழமையன்னைக்கு ஓப்பன் கோர்ட்டிலேயே நீதிபதி குமாரசாமி சரமாரியா விளாசிட்டாரு.''"எதுக்காகவாம்?''

""இது அரசியல் ரீதியா பழிவாங்கும் வழக்குன்னு ஜெ. வக்கீல் குமார் சொல்ல, ஆதாரமில்லாம பேசாதீங்க. பழிவாங்கப் போடப்பட்ட வழக்கா 18 வருசமா நடக்குதுன்னு கேட்ட நீதிபதி, முதல்வருக்கு சம்பளம் எவ்வளவுன்னு கேட்டாரு. 1 ரூபாய்னு சொன்னதோடு, இந்த சம்பளத்துக்காகப் அவரைப் பாராட்டணும்னு ஜெ. தரப்பில் ஆஜரானவங்க வாதாடுனாங்க. அப்ப அங்கே இருந்த வக்கீலும் எம்.பி.யுமான நவநீதகிருஷ்ணன்கிட்டே உங்க சம்பளம் எவ்வளவுன்னு நீதிபதி கேட்டாரு. 1 லட்சத்து 8ஆயிரம் ரூபாய்னு அவர் சொல்ல, ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினாலும் பப்ளிக் சர்வண்ட்தான். அவங்க மேல 66 கோடி ரூபாய்க்கான சொத்து சேர்த்த வழக்குப் போடப்பட்டு, தீர்ப்பும் கொடுக்கப்பட்டிருக்குது. அந்த 66 கோடிக்கு கணக்கு காட்டுங்கன்னு கேட்டா இதுவரைக்கும் எந்த ஆதாரத்தையும் உங்க தரப்பில் காட்டல. 60 ஜட்ஜ்மெண்ட்டுகளை உங்க வாதத்திலே எடுத்து வச்சிருக்கீங்க. அதெல்லாம் பொருத்தமான ஜட்ஜ்மெண்ட்டா? நீங்களே யோசிங்கன்னு சொன்ன நீதிபதி அதற்கப்புறம்தான் சரமாரியா ஓப்பன் கோர்ட்டிலேயே பொரிஞ்சி தள்ளிட்டாரு.''"என்ன சொன்னாரு?''""20 நாளா நீங்க வாதம் செய்றீங்கன்னு ஜெ. தரப்பைப் பார்த்து சொன்ன நீதிபதி குமாரசாமி, ஸ்பெஷல்  கோர்ட்டிலே நீதிபதி குன்ஹா கொடுத்த ஜட்ஜ்மெண்ட் தப்புன்னு சொல்றமாதிரி ஒரு பாயிண்ட்டைக்கூட இது வரைக்கும் எடுத்துவைக்கலை. வழக்கில் சொல்லப்பட்டிருக்கிற கணக்கெல்லாம் தப்புன்னு சொல்றீங்களே தவிர, சரியான கணக்கு எதுன்னு காட்டலை. சரியான கணக்கை நானே ஒரு ஆடிட்டரை வச்சிப் பார்த்துக் குறேன். நீங்க இப்படியே வாதாடிக்கிட்டுப்போனா, ஜான்மைக்கேல் டி குன்ஹா கொடுத்த அதே தீர்ப்பை நானும் தருவதைத் தவிர வேறு வழியில்லைன்னு ஓப்பன் கோர்ட்டிலே சொல்ல, ஜெ. தரப்பு வக்கீல்கள் முகத்தில் பயங்கர ஷாக். நீதிபதியோட விளாசல் பற்றிய தகவல் கார்டனுக்குத் தெரிஞ்சதும், ரொம்ப அப்செட்டாகி, தங்களோட சட்ட டீம்கிட்டே ஆலோசனை நடந்திருக்குது. வழக்கு விசாரணை இதே ரீதியில் போனால், இந்த நீதிபதி..nakkheeran.in 

கருத்துகள் இல்லை: