திங்கள், 16 பிப்ரவரி, 2015

இலங்கை அதிபர் பயணிகள் விமானத்தில் டெல்லி வந்தார் ~ அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்!


அண்மையில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்றார். இதையடுத்து முதல் வெளிநாட்டு பயணமாக அவர் இந்தியா வந்துள்ளார். 4 நாள் பயணமாக அவர் இந்தியா வந்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் டெல்லி வந்தார். விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த அவரை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சிறிசேனாவுக்கு அரசு முறை வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கிறார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: