வியாழன், 19 பிப்ரவரி, 2015

திருக்குறளை வெறும் தியான/மந்திர சூத்திரமாக்க ஜெயமோகன் புறப்பட்டுவிட்டார் !

Jeyamohan :திருக்குறளை சமூகவயப்படுத்தும் ஒரு முயற்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. அது சிறந்த விஷயம்தான். அது பரவலாக மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டது. மக்களுக்குப்புரியக்கூடிய வகையில் உரைகள் எழுதப்பட்டன
ஆனால் அந்த உரைகள் வழியாக குறள் எளிமைப்படுத்தப்பட்டது. அல்லது அதன் பொருள் குறைக்கப்பட்டது. குறைந்தபட்ச அர்த்தம் மட்டுமே கொள்ளப்படும் நிலை உருவானது. இன்று அதிலிருந்து குறளை மீட்பது கடினம்
குறள் ‘சூத்திரம்’. எல்லா சூத்திரங்களும் தியான மந்திரங்களே. மனனம்- ஸ்வாத்யாயம்- தியானம் என்னும் மூன்றடுக்குப் பயில்முறைக்கு உரியவை. ஸ்வாத்யாயம் என்பது அதுவரையிலான அர்த்தங்களனைத்தையும் அறிவது. தியானம் என்பது தனக்கே உரிய அர்த்தத்தை அறிவது
அதற்குரிய வழிமுறைகள் சமண-பௌத்த- வேதாந்த முறைகளில் நீண்டநாட்களாக குருமுறையாக பயிலப்பட்டு வந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் எழுதவேண்டும் என எண்ணம் உண்டு
கீதை குறள் இரண்டுக்கும் இரு உரைகளை எழுதிமுடிக்கவேண்டும், அடடே இந்த கூறு கேட்ட ஆள் என்னதான் சொல்ல வாறாரு ? தனது  காலத்திலேயே  எப்படியாவது  திருக்குறளை வெறும் பார்ப்பன  காயலாங்கடைக்கு  அனுப்பி விடவேண்டும் என்று  துடியா துடிப்பது தெரிகிறது .  இவர் தூக்கி பிடிக்கும் சம்ஸ்கிருத மற்றும் பார்ப்பனீய கருத்துக்கள் எல்லாம் வேகம் வேகமாய் சாயம் வெளுக்க திருக்குறள் மட்டும் சுனாமியாக இவரை பயமுறுத்துகிறதோ ?

கருத்துகள் இல்லை: