ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

இடைதேர்தல்களின் பாஜகவின் தொடர் தோல்வி சொல்லும் செய்தி ?

பத்து மாநிலங்களில் 3 மக்களவை, 33 சட்டப்பேரவை  தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதன் முடிவு பாஜகவுக்கு  கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., ராஜஸ்தான், குஜராத்  மாநிலங்களில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில்,  மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த சமாஜ்வாடி, காங் கிரஸ்  கட்சிகள் இடைத்தேர்தலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளன.  மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய  பாஜக,  உத்தரகாண்ட், பீகார்,  மத்தியப் பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா சட்டப்பேரவை  இடைத்தேர்தல்களில் பின்னடைவை சந்தித்தது. உத்தரகாண்டில் 3  தொகுதியிலும் தோற்றது. பீகார், ம.பி., பஞ்சாப், கர்நாடகாவில் 18ல் 8  தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 10  மாநிலங்களில் காலியாக உள்ள 3 மக்களவை, 33 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 13ஆம் தேதி நடந்தது. 
உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி  தலைவர் முலாயம் சிங் யாதவ் ராஜினாமா செய்த மெயின்புரி  தொகுதியில் அவரது பேரன் தேஜ் பிரதாப் சிங் யாதவ் 3.21 லட்சம்  வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தெலங்கானாவில் டிஆர்எஸ்  கட்சி தலைவரும் முதல்வருமான சந்திர சேகர ராவ் ராஜினாமா செய்த  மேடக் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட பிரபாகர் ரெட்டி  5,71,800 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சட்டப்பேரவை  முடிவுகள்: சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும்  பின்னடைவை தந்துள்ளன. 23 தொகுதியில் போட்டியிட்ட பாஜக 13ல்  தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக பொதுத் தேர்தலில், 80 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை  கைப்பற்றி சாதனை படைத்த உ.பி.யில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இங்கு 11 தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் 8 தொகுதிகளை  சமாஜ்வாடி கைப்பற்றி உள்ளது. இதே போல, ராஜஸ்தானில் ஆளும்  பாஜக வசம் இருந்த 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் 3  தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. தெற்கு கோட்டா  தொகுதியை மட்டுமே பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது. மோடியின்  குஜராத் மாநிலத்திலும் காங்கிரஸ் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.  இங்கு இடைத்தேர்தல் நடந்த 9 தொகுதியில் 3ல் காங்கிரஸ் வெற்றி  பெற்றுள்ளது. 6 தொகுதிகளை பாஜக கைப்பற்றி உள்ளது. அசாமில் 3 தொகுதிகளில் ஏஅய்யுடிஎப், பாஜக, காங்கிரஸ் தலா 1  தொகுதிகளை கைப்பற்றி உள்ளன.
இதுதவிர, ஆந்திராவின் நந்திகாமா  தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சவுமியாவும், திரிபுராவின்  மானு தொகுதியில் மார்க்சிஸ்ட்டின் பிரபாத் சவுத்ரியும் வெற்றி  பெற்றனர்.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் 25 தொகுதிகளை கைப்பற்றி 2வது இடத்திற்கு வந்தது. நாடாளுமன்றத்தேர்தல் வாக்குகளை கணக்கில் கொண்டால் இது பாஜகவிற்கு சரிவைக் கொடுத்த தேர்தலாகும். முக்கியமாக நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளில் பாதியைக்கூட காஷ்மீர் பகுதியில் பிடிக்கமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து 2015 பாரதீய ஜனதாவிற்கு பெரும் சரிவாக பலத்த அடியாக டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இது பிரதமர் ஆன பின்னர் மோடி முதல் முறையாக சந்திக்கும்  படுதோல்வி என்று கருதப்பட்டாலும், காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் வாக்குகள் சரிவே தோல்விக்கு அச்சாரமிட்டுவிட்டது  என்று கருதப்படுகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் டில்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க முடியவில்லை. தற்போதைய தேர்தலிலோ 3 இடங்களைக் கைப்பற்றுவதற்கே பெரும்பாடாகி விட்டது viduthalai.in

கருத்துகள் இல்லை: