திங்கள், 15 டிசம்பர், 2014

பிணைக்கைதிகள் மீட்பு: ஆஸ்திரேலிய போலீசார் அறிவிப்பு

துப்பாக்கி ஏந்தியவரின் பிடியில் இருந்த பிணைக்கைதிகள் மீட்பு: ஆஸ்திரேலிய போலீசார் அறிவிப்பு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள உணவகம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய நபரின் பிடியில் இருந்த பிணைக் கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். உணவகத்தில் அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது.காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் 16 மணி நேரமாக நீடித்த பதட்டம் முடிவுக்கு வந்தது.nakkheeran.in

கருத்துகள் இல்லை: