வியாழன், 18 டிசம்பர், 2014

அரவிந்தர் ஆசிரமம் மீது கல்வீச்சு ! தாயும் சகோதரிகளும் இறந்த செய்தி கேட்ட மக்கள் ஆத்திரம்!

ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும், அல்லது அரசு தரப்பில் எடுத்து நடத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கல் வீசப்பட்டது. இதில் ஆசிரம முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. இதனையடுத்து போலீசார் இந்த கும்பலை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
 புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி இருந்த பெண்கள் வெளியேற்றப்பட்டதால் மன விரக்தியில் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் 3பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 பேர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பீகாரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரி பெண்கள் 5 பேர் தங்கி இருந்தனர். அவர்கள் ஆசிரம விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, ஆசிரமத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் உத்தரவிட்டது.
5வது மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் :
இதனை எதிர்த்து 5 பேரும் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டிலும் முறையிட்டனர். ஆசிரம நிர்வாகத்தின் உத்தரவின்படி நடக்க வேண்டும் எனவும், 6 மாதத்திற்குள் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் விதித்த 6 மாத கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், 5 பெண்களில் ஒருவரான ஹேமலதா, ஆசிரமத்தின் 5வது மாடியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார். போலீசார் அவரை சாதுர்யமாக பேசி கீழே அழைத்து வந்தனர். பின்னர் அந்த 5 பேரும் அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆசிரமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டது.

பின்னர் பெற்றோர் உள்பட 7 பேரும் காலாபட்டு கடற்கரை பகுதிக்கு சென்று அங்கே கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றனர். ஆனால் இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் ராஜ்யஸ்ரீ, அருணாஸ்ரீ, சந்திராதேவி ஆகிய 3 பேர் கடலுக்குள் மூழ்கி இறந்து போயினர். மீதமுள்ள நான்கு பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆசிரமம் மீது கல்வீச்சு: 3 பேர் இறந்த செய்தி கேட்ட சிலர் ஆசிரமம் முன்பு கூடினர். ஆசிரமத்திற்கு எதிராக கோஷம் போட்டனர். ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும், அல்லது அரசு தரப்பில் எடுத்து நடத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கல் வீசப்பட்டது. இதில் ஆசிரம முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. இதனையடுத்து போலீசார் இந்த கும்பலை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. dinamalar.com

கருத்துகள் இல்லை: