புதன், 17 டிசம்பர், 2014

லிங்காவை இணையத்தில் விமர்சிப்பதை தடுக்குமாறு போலீஸ்ஸில் புகார்!

லிங்கா படத்தை வேண்டுமென்றே மோசமாக விமர்சிக்கிறார்கள், தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். அந்த இணையதளங்கள் மீதும், நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் போலீஸில் புகார் தந்துள்ளார். இணைய பயன்பாடு அதிகரித்த பிறகு அதிகம் பாதிக்கப்பட்டது சினிமாக்காரர்கள். அவர்கள் எந்தப் படத்திலிருந்து கதையை, காட்சியை உருவினாலும் உடனடியாக அதனை ஆதாரத்துடன் நிரூபித்து அவர்களின் அறிவுஜீவி முகமூடியை கிழித்துவிடுகிறார்கள். அவர்களின் பில்டப் பேச்சுகளை கிண்டலடிப்பதுதான் பலரின் நிரந்தர பொழுதுபோக்கு.லிங்கா படத்தை மட்டும் விடுவார்களா? பல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகள். அதை கட்டுப்படுத்ததான் போலீஸ் ஸ்டேசனுக்கு ஓடியிருக்கிறார்கள்.  tamil.webdunia.com  லிங்கா  ஏழாவதுமனிதன்  எந்திரன் போன்ற  படங்கள்   எல்லாம்  பொய்யான  பில்டப்  பண்ணியே வசூலை அள்ளிய   படங்கள்தான்  இதில்  ஷங்கரும்  ரஜனியும் கமழும்  ரொம்பவே  துட்டு பார்த்தவர்கள்.  ருசி கண்ட பூனைகள்  சும்மா இருக்குமா? மீண்டும் மீண்டும்  புதிது புதிசாக பலகாரங்கள் செய்து அநியாய  விலையில்  டிக்கெட்டுக்களை  விற்று  ... ம்ம்ம் 

கருத்துகள் இல்லை: