செவ்வாய், 4 மார்ச், 2014

பட லொக்கேஷன் பார்க்க சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த் very important

சென்னை: லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், தற்போது லொகேஷன் பார்க்கவே சிங்கப்பூர் சென்றதாகவும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் சமீபத்தில் சிங்கப்பூர் சென்றார். உடன் அவர் மனைவியும் சென்றிருந்தார். அங்கு மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்து கொண்டதாகவும், ஒரு மாதத்துக்கு அங்கு தங்கியிருந்து அவர் சிகிச்சைப் பெற்றாக வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய விஜயகாந்த். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- ‘சகாப்தம்' என்ற படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை பார்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றிருந்தேன்.அவனவன் கூட்டணிக்காக லோ லோன்னு அலையறான் இவரு சிங்கப்பூர் லொகேஷனுக்கு மசாஜ் செய்யபோயிட்டார் .வெளங்கிடும் தமிழ்நாடு 
ஆனால், அதற்குள் என்னை பற்றி கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி விட்டார்கள். நானும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். கூட்டணி பற்றி யாரிடமும் பேசலாம். ஆனால், நான் கூட்டணி பேசும்போது உங்களை வைத்துக்கொண்டு தான் பேசுவேன்' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்து தமிழக சட்டசபையில் அறிவித்தார்கள். அப்போது, மத்திய அரசு முடிவு செய்யாவிட்டால் நாங்கள் விடுதலை செய்வோம் என்று கூறினார்கள். இப்போது என்ன ஆகிவிட்டது? பதில் சொல்லுங்கள்? இவ்வாறு அவர் கூறினார் dinakaran.com/

கருத்துகள் இல்லை: