வியாழன், 6 மார்ச், 2014

கூட்டணியில் இல்லை என்பதை அம்மா தன் வாயால் சொல்லவேண்டும்


சில நாட்கள் முன்பு, 40 தொகுதிகளிலும் அதிமுக நின்றால் கூட அவர்தான் எங்கள் பிரதமர் என்று தா பாண்டியன் சொன்னாரே....கூட்டணியில் இல்லை என்பதை அம்மா தன் வாயால் சொல்லவேண்டும் என்று தாபாண்டியன்அழுதிருக்கிறார்.

ஜெயலலிதாவின் பின்னால் போன பலபேரின் வரலாறு இதுதான். வைகோவிடம் கேட்டால் இன்னும் உணர்சிகரமாக சிவாஜி பாணியில் அழுது காட்டுவார். என்ன செய்வது இனம் இனத்தை நாடும். நன்றியோடு நாய் போல சேவகம் செய்தீர்கள் ஆனாலும் நீங்கள் ஒன்றும் நல்லவர்கள் இல்லையே ? அதானால் உங்களுக்காக அனுதாபம் கொள்ள முடியவில்லை . சந்தர்ப்பவாத அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா 

கருத்துகள் இல்லை: