செவ்வாய், 5 நவம்பர், 2013

காஞ்சி காமகோடி சங்கராச்சாரி மீதான சங்கரராமன் கொலைவழக்கு தீர்ப்பு 12ந் தேதி

புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம். வரும் 12ந் தேதி தீர்ப்பு வழங்க இருக்கிறது. சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்துவிட்டாலும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இ நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பு வழங்குவது குறித்து நீதிபதி கருத்து கேட்டதற்கு, தீர்ப்பை வழங்குவதில் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று சங்கரராமனின் மகன் கூறினார். இதையடுத்து கொலை வழக்கின் தீர்ப்பை வரும் 12ந் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: