திங்கள், 20 பிப்ரவரி, 2012

நடராஜனை பார்க்க வந்த வக்கீல்கள் போலீசாருடன் வாக்குவாதம்


திருச்சி : சிறையில் அடைப்பதற்கு முன்பு நடராஜனைப் பார்க்க வந்த வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தஞ்சாவூர் அன்பு நகர் ராமலிங்கம் அளித்த நில அபகரிப்பு புகாரின் பேரில் சசிகலா கணவர் நடராஜன் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் 2வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் மாலதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர் நேற்று அதிகாலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது நடராஜனை அழைத்து வந்த போலீஸ் வாகனத்துடன், அவரது ஆதரவாளர்கள் தனியாக வந்தனர். வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு சிறையில் அவருக்கான அறை ஒதுக்கப்பட்டது.

மத்திய சிறை வளாகத்தில் உதவி ஆணையர் காந்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். நடராஜன் ஆதரவாளர்களின் வாகனங்கள் மத்திய சிறையின் முதல் நுழைவாயிலேயே நிறுத்தப்பட்டன. அப்போது வக்கீல்கள் சிலர் நடராஜனை பார்க்க வேண்டும் என்று சென்றனர். அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து வக்கீல்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஞாயிறு விடுமுறை என்பதால் யாரையும் பார்க்க முடியாது. நாளை மனு போட்டு பாருங்கள் என்று போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரின் வக்கீல்களையாவது பார்க்க அனுமதிக்கவேண்டும். அவரிடம் பேச வேண்டும் என்று வக்கீல்கள் கேட்டனர். யாரையும் அனுமதிக்க முடியாது. எங்களுடைய மேலதிகாரிகள் சொன்னால்தான் அனுப்புவோம் என்று கடைசிவரை போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் வக்கீல்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேலும் செய்திகள்

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!


வாசகர் பெயர்
நகரம்
மின்அஞ்கல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள் இல்லை: