வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

30 ஆயிரம் ஆண்டுகளாக பனியில் உறைந்த தாவரத்தை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்

மாஸ்கோ, பிப். 22-  ரஷியாவின் சைபீரியா பகுதி பனிபிரதேசமா கும். இங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'சலேனே ஸ்டெனோ பில்லா' என்ற அரிய வகை தாவரம் இருந்தது. தற்போது அவை அழிந்து விட்டது. இந்த நிலையில் சைபீரியாவின் கொலிமா ஆற்றங்கரையில் ஒரு அணில் இறைக்காக நிலத் தில் தோண்டியபோது சலேனேஸ்டெனோபில்லா' குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் விதைகள் கிடைத்தன.
அவற்றை உயிரி இயற் பியல் துறை விஞ்ஞானி டேவிட் கிலிசின்ஸ் தலை மையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த தாவரம் அழிந்த நிலையில் சைபீரியா பனிக்கட்டிக்குள் 30 ஆயி ரம் ஆண்டுகள் உறைந்து கிடந்தது கண்டுபிடிக் கப்பட்டது. அதில் உள்ள பிளா சென்டல் திசுக் களை எடுத்து பரிசோதனை கூடத்தில் வைத்து விஷே சமான சத்துக்கள் நிறைந்த கலவையில் ஊறவைத் தனர். பின்னர் அவற்றை தரமான விதைகளாக மாற்றி மண்ணில் நட்டு பயிரிட்டனர்.

அதில், இருந்து செடி கள் முளைத்து அழகிய மலர்களாக பூத்தது. இதன் மூலம் 30 ஆயிரம் ஆண்டுகள் பனிகட்டிக் குள் உறைந்து கிடந்த தாவ ரத்துக்கு ரஷிய விஞ்ஞா னிகள் குழுவினர் உயிர் கொடுத்து மீண்டும் வளரசெய்துள்ளனர். இது உலக சாதனையாக கருதப்படுகிறது. இது குறித்து விஞ்ஞானி டேவிட் கிலிசின்ஸ் கூறும்போது, இந்த தாவரம் அதிக அளவிலான சர்க்கரை சத்து உடையது.
இத்தனை ஆண்டு காலம் பனிக்குள் உறைந்து கிடந்தாலும் அதுதான் இவற்றை உயிர் வாழ செய்துள்ளது என்றார். இந்த பரிசோதனை அழிந்து மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பல தாவரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க தூண்டு கோலாக உள்ளது என் றும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: