புதன், 6 மார்ச், 2019

ரூ.5,010 கோடியில் சாலை திட்டங்கள்… பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

Lok Sabha Elections 2019: Prime Minister Modi Participates in the grand Vandaloor Public meeting tamil.oneindia.com -alagesan : சென்னை: தமிழகத்தில் ரூபாய் 5,010 கோடியில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளாம்பாக்கம் வந்தடைந்தார். அங்கு முதலில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூபாய் 5,150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், தமிழகத்தில் ரூ. 5, 010 கோடியில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

சிவகங்கையில் சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீ நிதி போட்டி?

அட்மின்-ஸ்ரீநிதி
பணி ராஜினாமா tamil.oneindia.com - hemavandhana.: சென்னை: சிவகங்கை தொகுதியை பொறுத்தவரை இப்போதைக்கு ஹாட் நியூஸ் என்ன தெரியுமா? வரும் தேர்தலில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட போவதில்லை என்று பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு இந்த முறை திமுக தரப்பில் அதாவது கூட்டணி சார்பாக கார்த்திக் சிதம்பரத்தை களமிறக்க போவதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது சிதம்பரம் மருமகள் ஸ்ரீநிதி போட்டியிட போவதாக ஒரு புதிய தகவல் கிளம்பியுள்ளது. சிதம்பரம் தொகுதியில் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என்று தொகுதிவாசிகளும் கருதுகிறார்களாம். இதனாலதான் அந்த முடிவுக்கு ப.சிதம்பரம் வந்திருப்பதாக ஒருதகவல் கூறுகிறது. இதை தவிர மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது, ப.சிதம்பரம், கார்த்தி மீது சில புகார்கள் உள்ளன. சிபிஐ விசாரணையும் நடந்து வருகிறது.
இவர்களை எப்படியாவது கைது செய்ய பாஜக அரசு மும்முரம் காட்டி வருகிறது. இவர்கள் மட்டும் என்றில்லை, ஆ.ராசா உள்ளிட்டவர்களை குறி வைத்து பாஜக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

மினிமம் பேலன்ஸ்.. வங்கிகளின் அறிவிப்பு! மினிமம் பேலன்ஸ். வட்டிவிட்டு சம்பாதிக்கும் வங்கிகள்

tamil.indianexpress.com :வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கை, சராசரி மாதாந்திர தொகையில் வைத்திருக்க வேண்டும் என வங்கிகள் கேட்டுக் கொண்டுள்ளன.பொது வங்கியான, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி ஆகிய வங்கிகள் அவர்களது சராசரி தொகையை நிர்ணயம் செய்து விட்டன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ)
மெட்ரோ மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் ’சேவிங்ஸ் பேங்க்’ எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் 3000 ரூபாயை தங்களது கணக்கில் சராசரி பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.சிறு நகரங்களில் வசிப்போருக்கு 2000 ரூபாயும், கிராமங்களில் வசிப்போர் 1000 ரூபாயும் சேமிப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என இதன் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் பேங்க்
இந்த வங்கியில் சேவிங்ஸ் பேங்க் கணக்கு வைத்திருக்கும், மெட்ரோ, நகர்புற மற்றும் சிறு நகர வாடிக்கையாளர்கள் 2000 ரூபாயை, குறைந்த பட்ச காலாண்டு சேமிப்புத் தொகையாக பராமரிக்க வேண்டும்.
கிராமங்களில் வசிப்போர் குறைந்த பட்சமாக 1000 ரூபாயை சேமிப்புத் தொகையாக மெயிண்டைன் செய்ய வேண்டும் என pnbindia.in தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா . 32 மாணவிகள் மீது இளைஞர் பாலியல் வன்முறை ,, கொலை...

love
manவெப்துனியா :ஆந்திராவில் 20 வயது கும்பல் 32 மாணவிகளை கற்பழித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. >ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஸ்தலமான பவுத்ராம குகைக்கோவிலுக்கு காதல் ஜோடிகள் வருகை எப்பொழுதும் அதிகமாக இருக்கும். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் தனிமையை விரும்பும் காதல் ஜோடிகள் அங்கு வருவர். விடுமுறை நாட்களில் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். மற்றபடி வார நாட்களில் அங்கு பெரிய அளவில் ஆள் நடமாட்டம் இருக்காது.
இந்நிலையில் சமீபத்தில் அந்த குகைக்கு நவீன் - ஸ்ரீ என்ற இளம்காதல் ஜோடி ஒன்று சென்று அங்கு தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு சென்ற மர்மகும்பல், நவீனை அடித்துப்போட்டுவிட்டு அந்த பெண்ணை பலவந்தமாக கற்பழித்ததோடு அவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பித்து

தேமுதிக... பாஜகவின் அங்கம்தான் ... பாஜகவின் trojan horse தான் தேமுதிக

தேமுதிக + பாஜக ஒலிபெருக்கிகள்
தேமுதிகவுக்கு பெரிய வாக்கு வங்கி இருப்பது போலவும் எல்லா கட்சிகளும்
அவர்களை நோக்கியே இருக்கிறது என்பது போல எல்லாம் பொய்யான தோற்றங்களை ஊடகங்கள் எல்லாம் சொல்லி வைத்தது போல் கதை அளந்து கொண்டிருக்கிறார்கள் . 
இது முழுக்க முழுக்க பாஜகவின் செயல்திட்டம்தான். தேமுதிக ஏற்கனவே
பாஜகவிடம் கரைந்து போய்விட்டது . 
அமித் ஷாவோடு மிகவும் நெருங்கிய தொடர்பில் பிரேமலதாவும் சுதீசும் நீண்ட காலமாக உள்ளார்கள்.  கடந்த தேர்தலிலும் பாஜகவின் சொல் கேட்டுத்தான் அரசியல் கூட்டணியை அமைத்தார்கள் . இப்பொழுதும் பாஜகவின் செயல்திட்டத்தை அரங்கேற்றி தங்களது அரசியல் எதிரகலத்தை வளமாக்க முயல்கிறார்கள் . 
தமிழக தேர்தலில் தோற்றாலும் ராஜ்யசபா . மத்திய அமைச்சு பதவிகள் இதர சலுகைகள் போன்றவை கிடைக்கும் .எல்லாவற்றையும் விட வேண்டிய அளவு பணம் கிடைக்கும் என்பது தான் பிரேமா சுதீஷ் போன்றோரின் உள்ளக்கிடக்கை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது . விஜயகாந்த் இனி அரசியல் செய்யவோ சுயமாக செயல்படவோ முடியாது.பாஜகவின் பக்க பலத்தில்தான் இவர்களின் அரசியல் எதிர்காலம்.

மின்னம்பலம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 6) சென்னை வரவுள்ள நிலையில், அதற்குள் மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படவுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு மூன்றாவது முறையாக இன்று தமிழகம் வரவுள்ளார். முன்பு வந்தபோது அரசு நிகழ்ச்சிகளிலும் பாஜகவின் பொதுக் கூட்டத்திலும்

புல்வாமா தாக்குதல்: இந்திய ஊடகங்கள் கேட்கத் தவறிய கேள்விகள்

Savukku : அதிகாரபூர்வத் தகவல் தொடர்பைக் குறைத்து, சமூக ஊடகங்களின் மூலம் அதிகாரபூர்வமற்ற செய்திகளை அதிகளவில் வெளியிட்டதன் மூலம், பல கேள்விகளுக்குப் மத்திய அரசு விடையளிக்கவில்லை.
ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டால் தேசத்துரோகிகளா? அதுவும் சிக்கலான ஒரு நேரத்தில், போர் சமயத்தில்? அல்லது, அவர்கள் கேல்வி கேட்காமல் இருந்தால், அவர்கள் தொழில்முறைத் தன்மை சந்தேகத்திற்குரியதா? அசாதாரணமான இரு வாரங்களின் முடிவில், தெற்காசியாவில் அணுசக்தி கொண்ட இரண்டு நாடுகள் போரின் விளிம்பில் சந்தித்துக்கொண்டதன் பின்னணியில் இக்கேள்விகளை எழுப்புகிறேன்.
காஷ்மீரில் உள்ள புல்வாமா என்னும் ஊரில் பிப்ரவரி 14 அன்று நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், 40 ரிசர்வ் காவல்துறை வீரர்களின் மரணத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் முக்கியமான ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி செய்திகள், இதுவரை எட்டாத உற்சாகத்தையும் பரவசத்தையும் அடைந்துள்ளன.

NDTV : விமானப்படை தாக்கியதில் பாகிஸ்தான் மக்கள் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை'

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இந்தியா மிராஜ் ரக விமானங்கள் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை பாலகோட்டில் வீசின.
 ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 14-ம்தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
புல்வாமாவில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தாக்குதல் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது- பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை மிகவும் துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இது ஒரு ராணுவ தாக்குதல் அல்ல. தீவிரவாதிகளின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மட்டுமே அழிக்கப்பட்டனர். மக்களில் எவரும் கொல்லப்படவில்லை.

இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து ! 42 ஆண்டுகால வர்த்தக சலுகையை அதிபர் டொனால்ட் டிரம்ப் .... US to end preferential trade status for India, Turkey


US to end preferential trade status for India, Turkey Donald Trump set to open a new front in trade wars with a plan to end preferential trade treatment for India and Turkey.
தினத்தந்தி :நியூயார்க், அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதால் இந்தியா மீது அந்நாட்டு அதிபர் கோபம் கொண்டுள்ளார்.
மேலும் இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தையும் அவர் ரத்து செய்ய முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மதுபானங்கள், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 150 சதவீதம் வரை கடுமையான வரி விதிப்பதாக அண்மையில் டிரம்ப் புகார் கூறியிருந்தார்.
இருநாடுகள் இடையில் இறக்குமதி, ஏற்றுமதி வரி வேறுபாட்டால் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று விமர்சித்திருந்தார்.
இதன் அடுத்த நடவடிக்கையாக இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்பதை ரத்து செய்துள்ளது.

பொள்ளாச்சி 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது! வீடியோ


tamilnews 18 : பொள்ளாச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்த வழக்கில், தேடப்பட்டு வந்த திருநாவுக்கரசை போலீசார் கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்யும் ஒரு கும்பலே செயல்பட்டு வந்துள்ளது.
வீடியோவை காட்டி மிரட்டி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டுவதே அந்த கும்பலின் வாடிக்கை. இதுதொடர்பாக 19 வயது மாணவி ஒருவர் புகார் அளித்ததையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமானது.
இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய நபரான திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த விவகாரத்தில் பல முக்கிய அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், இன்று ஆஜராக உள்ளதாகவும் திருநாவுக்கரசு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் திருப்பதியிலிருந்து கார் மூலம் பொள்ளாச்சி வநத அவரை, மாக்கினாம்பட்டி என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர். ரகசிய இடத்தில் திருநாவுக்கரசிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், இன்று மாலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

செவ்வாய், 5 மார்ச், 2019

BBC :இந்துக்களை இழித்து பேசிய பாகிஸ்தான் அமைச்சர் பதவி நீக்கம் .. இம்ரான் கான் அதிரடி


PTI Punjab government has removed Fayyaz Chohan from the post of Punjab Information Minister following derogatory remarks about the Hindu community. Bashing someone’s faith should not b a part of any narrative.Tolerance is the first & foremost pillar on which #Pakistan was built.
இந்து மதத்தவர்களை தரக்குறைவாகப் பேசிய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் கலாசார துறை அமைச்சர் ஃபாயஸ் உல் ஹாசன் சோஹன் பதவி நீக்கப்பட்டுள்ளார். இப்பிரச்சனையில் சோஹன் பதவி விலகியதை மாநில முதல்வரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒரு காணொளி மூலமாக செய்தி அனுப்பியுள்ள செய்தி தொடர்பாளர் ஷபாஸ் கில், ''இந்நிகழ்வு துரதிருஷ்டவசமானது. சோஹன் சொன்ன கருத்தில் இருந்து பஞ்சாப் அரசு விலகி நிற்கிறது. அது பஞ்சாப் அரசின் கருத்தல்ல'' என்றார். இந்துக்கள் உள்பட எந்த சிறுபான்மையினரையும் அவமதிக்கும், புண்படுத்தும் கருத்துக்களையோ செயல்களையோ, பஞ்சாப் அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் கூறியதாக அவர் தெரிவித்தார்.

சபை நாகரீகம் மறந்த இளையராஜா.. நடிகை ரோகினியை அவமானப்படுத்தினார் .. வீடியோ


tamilthehindu :‘இளையராஜா 75’ நிகழ்ச்சியில் நடிகை ரோகிணியிடம் இளையராஜா கடுமையாக நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். கடந்த பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, சன் டிவியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பானது. அதில், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை ரோகிணியிடம் இளையராஜா கடுமையாக நடந்துகொண்டதைப் பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பகுதியை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இளையராஜா செய்தது தவறு என்று தெரிவித்தனர்.

அதிமுக - தேமுதிக இழுபறி .. வறுத்தெடுக்கும் பிரேமலதா ..

டிஜிட்டல் திண்ணை: கூட்டணி: விஜயகாந்த், எடப்பாடி பேசியது என்ன?மின்னம்பலம் : “திமுக கூட்டணி முடிவாகிவிட்டது. 20 தொகுதிகளில் திமுக என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆக திமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்பதும் உறுதியாகிவிட்டது.
தேமுதிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை தொடர்ந்து மின்னம்பலத்தில் எழுதி வருகிறோம். எடப்பாடியும், பன்னீரும் கூட்டணி தொடர்பான
பேச்சுவார்த்தைகளில் ரொம்பவே தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இன்று காலை, தலைமைச் செயலகத்தில் 500 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கும் விழா நடந்தது. அந்த விழாவுக்குப் பிறகுதான் அன்புமணி தலைமைச் செயலகத்துக்கு வந்து முதல்வரை பார்த்துவிட்டுப் போனார்.
அதன் பிறகு பன்னீர் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் நீண்ட நேரம் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, ‘எனக்கு இப்போ வரைக்கும் வந்திருக்கும் ரிப்போர்ட் படி நம்ம கூட்டணி ரொம்பவும் ஸ்டிராங்காதான் இருக்கு. நாம அவங்களைப் பார்த்து பயப்பட தேவை இல்லை. பாமகவை நிறைய விமர்சனம் பண்றாங்க. விமர்சனம் பண்ற யாரும் வன்னியர்கள் கிடையாது. பாமகவுக்கு விழப்போவது வன்னியர்களின் ஓட்டு மட்டும்தான். அது நமக்கு வந்தால் போதும்.

BBC : திமுக தொகுதி பங்கீடு நிறைவு: மு.க.ஸ்டாலின்... விபரம் ...

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். மதிமுகவுடனான தொகுதி பங்கீட்டிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறாக கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகளும், இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1 தொகுதியும், கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு 1 தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 1 தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.
திமுக தொகுதி பங்கீடு
காங்கிரஸ் 10
சி.பி.ஐ 2
சி.பி.எம் 2
விடுதலை சிறுத்தைகள் 2
ம.தி.மு.க 1
கொங்கு நாடு மக்கள் கட்சி 1
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1
இந்திய ஜனநாயகக் கட்சி 1
மதிமுகவுக்கு மக்களவையில் ஒரு தொகுதியும், மாநிலங்களவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

என்ன அநியாயம் இது? மாக்சிஸ்ட் ரங்கராஜன் எம்பி க்கு மீண்டும் ராஜ்யசபா வேண்டுமாம்?


மார்க்சிஸ்ட் கேட்ட ராஜ்யசபா: மறுத்த திமுக!மின்னம்பலம் : திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்று (மார்ச் 5) ஒருவழியாக முடிந்துவிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியும், மதிமுகவும்தான் இன்று உடன் படிக்கையில் கையெழுத்திட்டன. மற்ற கட்சிகளுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலேயே உடன்பாடு எட்டிவிட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் இன்று மூன்றாவது கட்டமாகவும் பேசிய பிறகே இரு இடங்கள் என உறுதி செய்யப்பட்டது.
இந்த தாமதத்துக்கு காரணமென்ன என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது புதிய தகவல்கள் கிடைத்தன.
“நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் உடன்பாடோடு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டுப் பெறும் வழக்கம் இந்தத் தேர்தலில் பரவலாகிவிட்டது. அதிமுக அணியில் பாமக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற்றது. திமுகவோடு பேச்சு நடத்திய தேமுதிகவும் 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்டது.

தமிழை குழிதோண்டி புதைக்க நியமிக்கப்பட்ட பத்மபூஷன் நாகசாமி

நாகசாமி
Sundar P : இந்திய அரசால் “பத்ம பூசன்” விருதளிக்கப்பட்டுள்ள
தொல்லியலாரும், பார்ப்பனருமான இரா நாகசாமி, தன் The Mirror of Tamil and Sanskrit” என்னும் நூலில் முன்வைத்துள்ள முடிவுரைகள்:
1. தமிழ், தன் ஆற்றலால் செவ்வியல் மொழி ஆகவில்லை. சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிட மிருந்து கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் மொழி எனப்படுகிறது.
2. தொல்காப்பியம் இலக்கண நூலன்று; பரத முனிவரைப் பின்பற்றி எழுதப்பட்ட ,நடனப் பாடல்களுக்கான கருத்தமைந்த தொகுப்பு அது.
3. சிலப்பதிகாரம் வரலாற்றுக் காபியமன்று; அது முழுவதும் புனைந்து கட்டப்பட்ட ஒரு புனை கதை இலக்கியம். அது முழுவதும் நாட்டியப் பாடல்களின் தொகுப்பு.
4. தமிழ் எழுத்துகள் பிராமி என்ற கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்து வடிவமைக்கப்பட்டன.
5. தமிழர் 'பா'வும் பரத முனிவரின் ‘யமகம்’ என்ற மடக்கணியைக் கொண்டே வளர்ந்துள்ளன.
6. தமிழர்கள் வேதக் கடவுளர்களையே வணங்குகின்றனர்.
7. தமிழர்க்கெனத் தனி வாழ்வுநெறி இல்லை. வடமொழி, வேதநெறி மரபு வாழ்வையே பின்பற்றி வாழ்கின்றனர்.
8. தமிழரின் கலை , இசை, நடனம், இலக்கியம், எல்லாம் கடன் பெற்றவையே!
9. காலந்தோறும் தமிழ், சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிலிருந்தே கடன் பெற்று வளர்ந்துள்ளது.

ஈஷா நவராத்திரி விழாவில் நடனம் ஆடிய நடிகைகள்


மாலைமலர் :கோவையில்
நடைபெற்ற ஈஷா நவராத்திரி விழாவில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால், அதிதிராவ் ஆகியோர் நடனம் ஆடியிருக்கிறார்கள். கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, 25-ம் ஆண்டு மகாசிவராத்திரி விழா ஆதியோகி சிலை முன்பு நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரி பியூஸ் கோயல், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நாகராஜன் எம்.பி., ஜனாதிபதியின் மனைவி சவிதா கோவிந்த், மகள் சுவேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடிகர் ராணா, நடிகைகள் சுஹாசினி, இந்தி நடிகை சுகி சாவ்லா, தமன்னா, காஜல் அகர்வால், அதிதிராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை.!. வைகோ.. 22 ஆண்டுகளுக்கு பின் மாநிலங்கள் அவைக்கு

THE HINDU TAMIL : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்குவது என முடிவானது. மனநிறைவோடு இதை ஏற்றுக்கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.
திமுகவில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இடதுசாரிகளுக்கு தலா 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி, முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக இருப்பது மதிமுகவும், மமகவும் மட்டுமே. மமகவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கேட்டு வருவதால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. ஆனால் திமுக கூட்டணியிலேயே பிரதான கட்சி என கருதப்படும் மதிமுக ஏற்கெனவே தங்களுக்கு ஐந்து தொகுதிகள் வேண்டும் என்று கூறி வந்தது.
மதிமுகவுக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டது. மற்ற கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதி ஒதுக்கிய நிலையில் மதிமுகவுக்கும் 2 தொகுதி என்பது வைகோவுக்கு சற்று வருத்தத்தைத் தந்துள்ளதாகக் கூறப்பட்டது. இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை முடிந்து மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடந்தது.

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி!

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி!
மின்னம்பலம் : அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிகளை இறுதி செய்யும் பணிகளில் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை இணைந்துள்ள நிலையில், தேமுதிக இன்று கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் நாளை தமிழகம் வரவுள்ளதையடுத்து, இன்று மாலைக்குள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் அதிமுக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 4) இரவு புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அங்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்குவது எனவும், இரட்டை இலை சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதிமுக வாக்காளர்களுக்கு லஞ்சம் .. 2 ஆயிரம் வழங்குவதை தடுக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்தில் ஆர் எஸ் பாரதி ... திமுக மனு

தினகரன் : சென்னை: வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறி அதிமுகவினர் வாக்குசேகரிப்புக்காக 2 ஆயிரம் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி புகார் மனு தந்துள்ளார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க. கொள்கை பரப்புத் துணைச் செயலாளரான வைகைச் செல்வன் பொதுக் கூட்டம் ஒன்றில் 28.2.2019ல் பேசிய போது, மாநில அரசால் வழங்கப்படும், தமிழக முதல்வரால் சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட நிதி உதவியான 2000 உள்பட 3,000மும் சுமார் 3 கோடி வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 கோடி பேர் தங்களுடைய வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அளிப்பார்கள்.
எனவே தங்கள் கட்சி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பகிரங்கமாகப் பேசியுள்ளார். வைகைச்செல்வனின் பேச்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது அந்தப் பேச்சு இத்துடன் சி.டி.யாக இணைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால், வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர் களுக்கு 2,000 நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட உடனேயே, சில அரசியல் கட்சிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது முற்றிலும் தேர்தல் ஆதாயம் பெறுவதற்காகவே செய்யப்படுகிறது.

நீலகிரி மீண்டும் ஆ.ராசா.. தூத்துக்குடி கனிமொழி .....

மக்களவை தேர்தலில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுவை தாக்கல் செய்தார்.
tamil.thehindu.com : நீலகிரி மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக, பாஜகவும் அதே தொகுதியில் போட்டி யிட ஆர்வம் காட்டி வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆ.ராசா, தனி தொகுதியாக இருந்தவரை சொந்த தொகுதியி லேயே போட்டியிட்டு வந்தார். தொகுதி மறுவரையறைக்கு பிறகு பெரம்பலூர் பொது தொகுதியாக மாற்றப்பட்டது.
எனவே, பொது தொகுதியாக இருந்து தனித் தொகுதியாக மாறிய நீலகிரியில் 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2014 தேர்தலில் 2-வது முறையாக நீலகிரியில் போட்டி யிட்ட ஆ.ராசா தோல்வி அடைந்தார். அறிமுகமே அல்லாத அதிமுக வேட்பா ளர் சி.கோபாலகிருஷ்ணன் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தற்போது 3-வது முறையாக நீலகிரியில் போட்டியிட ஆ.ராசா விருப்ப மனு அளித்துள்ளார்.

திமுக கூட்டணி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ,, ஒப்பந்தம் கைச்சாத்து

DMK and Viduthalai chiruthaigal Katchi having dialogue for constituency sharingtamil.oneindia.com - veerakumaran.: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கிய திமுக- வீடியோ சென்னை: திமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது. தேர்தலில் 2 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டு வந்தது. இது தொடர்பாக உடன்பாடு ஏற்படாத நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இதன் ஒரு பகுதியாக இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இரு கட்சி தலைவர்கள் நடுவே நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொல்.திருமாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். அங்கு திமுக சார்பில் தொகுதி பங்கீடு குழுவைச் சேர்ந்த துரைமுருகன், டிஆர் பாலு, எ.வ.வேலு உள்ளிட்டோருடன், திருமாவளவன் மற்றும் விசிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் இந்த ஆலோசனையின் போது உடன் இருந்தார்.

இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை பறிக்க டிரம்ப் முடிவு

இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை பறிக்க டிரம்ப் முடிவுதினத்தந்தி : வாஷிங்டன், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரை வரி விதிப்பதாகவும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படுவது இல்லை என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்ய டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதேபோல், துருக்கிக்கு வழங்கப்பட்டு இருந்த வர்த்தக சலுகையையும் பறிக்க உள்ளது. டொனால்டு டிரம்ப் உத்தரவின் படி, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகைகளை ரத்து செய்ய இருப்பதாக அமெரிக்க வர்த்த அலுவலக தலைமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது<

ஈரோடு பிரப் சாலையின் பெயரை மாற்றக்கூடாது ..மீனாட்சி சுந்தரனார் சாலை என மாற்ற எடப்பாடி அரசு ...

Between 1894 and 1933, Anthony worked for the London Christian Missionary Society in India,
where as a Reverend he helped establish 94 schools, 20 churches and two hospitals. Between 1927 and 1933, Anthony built a beautiful Christian church in Erode, India (known as “Brough Church” in his memory) and Gosh (CSI) Hospital located on Brough Road in Erode. Anthony's wife, Rosetta, died in 1928 in Erode, India. In 1935, Anthony married Jessie Winifred Inglis in Erode. In 1936, Anthony died in Norton, Somerset, England; and was buried in the Canford Cemetery on Canford Lane in Westbury-on-Trym, Bristol, England.
Kathiravan Mayavan : ஈரோடு நகர கிருஸ்துவர்கள் மற்றும் பொது மக்கள் சுமார் 500
பேர் திரண்டு வந்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பிரப் சாலையின் பெயரை மாற்றக்கூடாது என்று மனு அளித்தனர்.!
கடந்த 28 /02 2018 அன்று ஈரோடு வந்த முதல்வர் எடப்பாடியார் மேம்பாலத்தை திறந்து வைத்தது விட்டு பிரப் சாலை இனி மீனாட்சி சுந்தரனார் சாலை என்று ஏதோ கட்சிகாரர்களின் குழந்தைக்கு பெயரை வைப்பதைப் போல வைத்து விட்டு சென்று விட்டார்.
இதை கேள்விப்பட்ட 7 மணி நேரத்தில் பிரப் மெட்ரிகுலேசன் தாளாளர் மனக்கவலையில் இறந்தே போய் விட்டார்.

விருதுநகர் வைகோ போட்டியிட்டால் வி.வி.ஐ.பி. தொகுதியாகி விடும்..

nakkheeran.in - சி.என்.ராமகிருஷ்ணன் : திருப்பரங்குன்றம், திருமங்கலம்,
விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி ஆகிய ஆறு சட்ட மன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது விருதுநகர் மக்களவைத் தொகுதி. இதன் சிட்டிங் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ்ணன், "ஒரு நல்ல எம்.பி. என்று தொகுதியில் நான் பெயர் எடுத்திருக்கின்றேனா என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக எனக்குக் கெட்ட பெயர் இல்லை'’என்கிறார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மாவட்ட ஜெ.பேரவை செயலாளருமான ரவீந்திரநாத் குமார், தேனி தொகுதியில் போட்டியிடுவார் என்ற பேச்சிருந்தாலும், அவருடைய இன்னொரு சாய்ஸாக இருக்கிறது முக்குலத் தோர் மெஜாரிட்டியாக உள்ள விருதுநகர் தொகுதி.
1999-ல் தன் தந்தை ஜஸ்டிஸ் ராமசாமிக்கு இத்தொகுதியில் போட்டியிடவாய்ப் பளித்து, தன்னையும் 1991-ல் சரத்சந்திர சின்ஹா இந்திய காங் கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தி, விருதுநகர் எம்.எல்.ஏ. ஆக்கிய ஜெயலலிதாவின் பாச மறிந்து, எடப்பாடி எப்படி யும் தனக்கு சீட் தருவார் என்ற நம்பிக்கையில் இருக்கி றார்
நடிகை ஸ்ரீதேவியின் மைத்துனரான சஞ்சய் ராமசாமி. மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா, மகன் ராஜ் சத்யனை எம்.பி. ஆக்கிப் பார்க்கவேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.
திருமங்கலம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராமலிங்கமும் ஆர்வம்காட்டி வருகிறார். ‘"விருதுநகர் தொகுதியில் நிற்பதற்கு எங்களிடம் வேட்பாளர் இருக்கிறார். பா.ம.க. மாநில பொருளாளரான கவிஞர் திலகபாமாவுக்கு சீட் தந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார்'’என்று பா.ம.க.வும் இத்தொகுதியைக் கேட்டு வைத்திருக்கிறது.

பேரறிவாளன், நளினி... 7 பேரும் மார்ச் 10ம் தேதி விடுதலை... ? உச்சக்கட்ட பரபரப்பு ..

மத்திய அரசின் முட்டுக்கட்டை
tamil.oneindia.com - sherlinsekar-lekhaka.: சென்னை: சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் வருகிற 10 ம் தேதி அவர்கள் விடுதலையாக வாய்ப்புள்ளதாகவும் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் அவர்களின் தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.
இப்படியாக நீண்டு கொண்டிருந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் நீண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக இவர்களது விடுதலை குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூற அப்போதைய முதலைமைச்சர் ஜெயலலிதா இவர்களை விடுவிக்க முடிவு செய்ததோடு அமைச்சரவையின் முடிவை மத்திய அரசுக்கு அனுப்பியும் வைத்தார்.