திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்களின் கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பணியாற்றிய பல இடங்களில் சர்ச்சைவாதியாகவே இருந்துள்ளார்.
பக்தர்களை அடித்தவர்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முல்லை பெரியாறு அணை பிரச்னை வெடித்ததில் சபரிமலை ஐயப்பன் கோயில் சென்ற தமிழக வாகனங்கள் மீது கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்தது பிரானூர் எல்லையில் தமிழக பக்தர்கள் சாலை மறியல் செய்தனர். அப்போது, தென்காசியில் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய பாண்டியராஜன் ஐயப்ப பக்தர்களை தடியடி செய்து விரட்டினார். கேரளாவிலும் அடிக்கிறார்கள், தமிழ்நாட்டிலும் அடிக்கிறார்கள் என்று தமிழக பக்தர்கள் கதறியது வரலாறு..... மாமூல் வருமானம் தந்த ருசி பாண்டியராஜன் முகத்தில் தெரிகிறது













