செவ்வாய், 6 செப்டம்பர், 2016

ஜியோ கவர்ச்சியில் மயங்கி 4ஜி உபயோகிக்க முதல் ... பாட்டன் திருபாய் அம்பானியின் தில்லு முல்லுகளையும் கொஞ்சம் படியுங்க

No automatic alt text available.டுனிஷியா என்ற நாட்டிற்கு பெட்ரோல் பங்கில் வேலை செய்வதற்காக வட இந்தியாவை சேர்ந்த ஒருவர் பயணமாகிறார்.
முற்றிலும் வியாபார தந்திரங்கள் நிறைந்த அவர் அந்த நாட்டில் சென்றதும் தனக்கு கிடைத்த பெட்ரோல் பங்கு வேலையை கால் பங்கும் மீதி முக்கால் பங்கு நேரத்தில் அந்நாட்டின் சட்டத்தின் ஓட்டைகளை அறிந்து கொள்வதற்காக செலவிடுகிறார்.
ஒருகட்டத்தில் ஓட்டைகளையும் பாதாளங்களையும் கண்டறிந்த அவர் தான் வேலை செய்த ஊர் மக்களிடம் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட நாணயத்தை கொண்டு வருவீர்களேயானால் இருமடங்கு பணம் தருகிறேன் என்று உறுதியளிக்கிறார்.

கூலி இல்லாமல் செய்யும் வேலை

charuonline.com   இந்தக் கட்டுரையில் உள்ள விஷயங்களை நான் பத்திரிகைகளில் எழுத முடியாது.  எனவே இங்கே எழுதுகிறேன்.
நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்து இருக்கலாம்.  இந்த இணைய தளத்தில் சமீப காலமாக என்னுடைய அக்கவுண்ட் நம்பரை நான் கொடுப்பதில்லை.  யாரிடமும் பணமும் கேட்பதில்லை.  காரணங்கள் இரண்டு.  ஒன்று, அனாவசியமாக இண்டர்நெட் பிச்சைக்காரன் என்ற அவப்பெயர் ஏற்படுகிறது; இரண்டாவது, யாரும் பணமும் அனுப்புவதில்லை.  இந்த இரண்டாவது காரணம்தான் பிரதானமான காரணம்.  யாராவது ஒருவர் ஐநூறு ரூபாயோ நூறு ரூபாயோ அனுப்புவார்.  எனக்கு அந்தப் பணத்தால் எந்தப் பயனும் இல்லை.
சமீபத்தில் தமிழ் ஸ்டுடியோஸ் அருண் ராமன் ராகவை ஒரு திரையரங்கில் திரையிட்டார்.  கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட வடிவத்தில்.  அனுராக் காஷ்யப்போடு ஒரு கலந்துரையாடலும் இருந்தது.  இதற்கு ஒரு ஆளுக்கு 500 ரூ வசூலிக்கலாம்.  ஏனென்றால், அனுராகை வரவழைக்கவே எக்கச்சக்க செலவு.  விமானம், விடுதி என்று.  விழாவுக்கும் சேர்த்து சுமார் ரெண்டு லட்சம் செலவு.  ஆனால் ராமன் ராகவ் திரையிடலை அவர் இலவசமாக நடத்தினார்.

இலங்கை ... மலேரியா முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடு .. உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

The World Health Organization on Monday certified Sri Lanka as a malaria-free nation, in what it called a “truly remarkable” achievement.
மலேரியா காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடு இலங்கை என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.ஹெச்.ஓ.) அறிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மாலத்தீவுகளுக்குப் பிறகு இத்தகைய சிறப்பை இலங்கை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. கொசுக்களின் மூலம் பரவும் மலேரியா காய்ச்சல், உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் நோயாக உள்ளது. கடந்த 1970, 80-ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பல பகுதிகளில் மலேரியாவின் தாக்கம் தீவிரமாக இருந்தது. அதன் பிறகு அந்நாட்டு அரசு மேற்கொண்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகளின் காரணமாக மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி படிப்படியாகக் குறைந்தது. இந்த நிலையில், மலேரியா காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக-கர்நாடக எல்லைகளில் இரு மாநில பேருந்துகள் நிறுத்தம்.. காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு எதிரொலி

சேலம், காவிரியில் தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன் எதிரொலியாக தமிழக-கர்நாடக எல்லைகளில் இரு மாநில பஸ்களும் நிறுத்தப்பட்டன.விவசாயிகள் போராட்டம்; தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை கண்டித்து கர்நாடக விவசாயிகள் சாலை மறியல் உள்பட பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் தமிழக அரசு பஸ்கள் நேற்று கொளத்தூர் அருகே உள்ள பாலாறு சோதனைச்சாவடியுடன் நிறுத்தப்பட்டன. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.

ராகுல் காந்தி 9 பேரை நேர்காணல்.. TN காங்கிரஸ் தலைவர் பதவி... விஜயதரணி தகவல்...

சென்னை: விரைவில் தமிழக காங்கிரசுக்கு தலைவர் நியமிக்கப்படுவார் என்றும், 9 பேரை அழைத்து ராகுல் காந்தி நேர்காணல் நடத்தினார் என்றும் விஜயதரணி எம்எல்ஏ கூறியுள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 145வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு முன்னாள் தலைவர் குமரி அனந்தன், விஜயதரணி எம்எல்ஏ, பொது செயலாளர் சிரஞ்சீவி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் என்.ரங்கபாஷ்யம், முன்னாள் எம்எல்ஏ பலராமன் ஆகியோர் மலர் தூவி மரியாதை ெசலுத்தினர். நிகழ்ச்சியில் எம்.ஆர்.ஏழுமலை, சூளை ராஜேந்திரன் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். (பீட்டர்அல்போன்ஸ்?) 

அதிகாலை வீடு தேடிவரும் பேப்பர்கள்.... நிம்மதியான தூக்கம் தூங்கி பல வருசமாச்சு !

வினவு.காம் :அதிகாலையில் செய்தித்தாள்களின் விநியோக வேலை விடியலைத் தவறவிடும் சோம்பேறி திலகங்கள் அறியாத ஒன்று காலையின் அழகு. இளங்கதிரவனுக்கு முந்தைய பனியொளியில் ஆரம்பிக்கிறது ஒரு நகரத்தின் வாழ்க்கை. இரவுப் பணி முடிந்து வரும் தொழிலாளிகள், ஊழியர்களையும், படப்பிடிப்பு வேலைக்காக அதிகாலை வரும் சினிமா – தொலைக்காட்சி தொழிலாளிகளையும் ஒருங்கே அரவணைக்கும் தேநீர்க் கடைகள். கூடவே சென்னை நகரெங்கும் ஆங்காங்கே மூடப்பட்ட கடைகளின் வாயிலிலே தினசரி கட்டுக்களை அடுக்கி பிரித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள்.
துவக்கம்!
காலையில் நீங்கள் வாசிக்கும் செய்தித் தாட்களை பெற்று பிரித்து கலந்து நடந்து உங்களிடம் சேர்க்கிறார்கள் இவர்கள்.

பாஜகவின் கல்வி மறுப்புக் கொள்கை ! புதிய கல்விக் கொள்கை... வினவு.காம்

டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன்ந்தியாவின் கல்விக் கொள்கையை மாற்றி அமைப்பதற்காக, மோடி அரசால் அமைக்கப்பட்ட டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவைத் தயாரித்து, அதனை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சில மாதங்களுக்கு முன்பு அளித்தது. இந்த வரைவை இன்றுவரை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடாத மைய அரசு, “தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள்” என்ற தலைப்பில் ஒரு சிறிய ஆவணத்தை மட்டும் வெளியிட்டு, அதன் மீது ஆகஸ்டு 16-ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என அறிவித்திருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன்
தேசியக் கல்விக் கொள்கையை மாற்றுவதற்கு அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் மருந்துக்குக்கூட கல்வியாளர் ஒருவரும் இடம் பெறவில்லை.

சட்டத்துக்குப் புறம்பான ‘பஞ்சாயத்து’: தற்கொலை செய்துகொண்ட தந்தை மரணத்துக்கு நீதி கேட்கிறார் மகள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நாகப்பன் என்பவர், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். நாகப்பனை தற்கொலைக்குத் தூண்டிய இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், தொலைக்காட்சி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாகப்பனின் மகள் ராதிகா புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மனுவில்,
“என்னுடைய தந்தை நாகப்பன். அவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நாகப்பன், லாரி டிரைவராக கடந்த இருபது ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். என்னுடைய தந்தைக்கும், தாய் அம்பிகாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்தனர். நான் வாரம் ஒரு முறை என் தந்தையை சந்திப்பேன். இந்நிலையில் என்னுடைய அம்மா அம்பிகாவின் தங்கையான ரேணுகா, சொத்து பிரச்னை தொடர்பாக நாகப்பனை சந்தித்து பேசினார்.

குழந்தைகள் காப்பாளரான குற்றவாளி: பதவியின் விலை 8 கோடி .

mathivananசி.மதிவாணன் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக கல்யாணி மதிவாணனை நியமனம் செய்ததை நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கல்யாணியைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு மேற்படி ஆணையம் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்டதுதான் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம். அது சட்டத்தின்படி உருவான ஆணையம். Commissions for Protection of Child Rights Act என்ற 2005 ஆம் ஆண்டு மத்திய சட்டத்தின்படி மாநில சட்டத்தை உருவாக்கி, பின்னர் அதற்கான விதிகளை உருவாக்கி ஆணையத்தை தமிழ்நாட்டில் அமைத்தது 2012வது ஆண்டில்தான். அதாவது ஆணையத்தை உருவாக்க 7 ஆண்டுகள் ஆகிப்போகின.
கல்வி உரிமைச் சட்டத்தின் அமுலாக்கத்தைக் கண்காணிக்கவும் சட்டம் தொடர்பாக எழும் பிரச்சனைகளை கையாளவும்தான் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. உதாரணமாக, தனியார் பள்ளியில் சட்டத்தின்படி ஏழை மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்றால் இந்த ஆணையத்திடம்தான் புகார் கொடுக்க வேண்டும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆணையத்தை உருவாக்க 7 ஆண்டுகள் ஆகின.

ஆம்புலன்ஸ் மறுப்பு : இரவு முழுவதும் உயிரிழந்த மகளுடன் கதறிய தாய்


உத்திரப்பிரதேச மாநிலம், பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இம்ரனா. இவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது இரண்டரை வயது மகளான குல்நாதை மீரட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்துவிட்ட துயரம் ஆறாமல் தாய் அழுது கொண்டிருந்தநிலையில் குழந்தையின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் 2,500 ரூபாய் கேட்கப்பட்டது. அதை கொடுக்க அவரிடம் பணம் இல்லை. இதனால் இரவு முழுவதும் ஆஸ்பத்திரி வளாகத்தில் மகள் உடலுடன் இம்ரனா இருந்தார். மறுநாள் காலையில் சிலரின் உதவியால் ஆம்புலன்ஸ் மூலம் மகளின் உடலை ஊருக்கு இம்ரனா கொண்டு சென்றார். இந்த தகவல் வெளியானதை அறிந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டு இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன்தான் அம்மாநிலத்தில் மேல்சிகிச்சைக்காக மகனின் உடலை ஆஸ்பத்திரியில் உள்ள மற்றொரு பிரிவுக்கு தோளில் தூக்கி சென்றபோது, மகன் தோளிலே இறந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.nakkheeran.in

திங்கள், 5 செப்டம்பர், 2016

இயக்குனர் ராஜுமுருகன் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா கல்யாணம்


இயக்குனர் ராஜூ முருகன் அண்மையில் எடுத்த ஜோக்கர் திரைப்படமும் தமிழகத்தில் புரட்சியை செய்து வருகிறது. இந்நிலையில், சன் டிவியில் தொகுப்பாளிணியாக இருந்த ஹேமா சின்ஹாவை இவர் நேற்று திருமணம் செய்துக்கொண்டார். இது ஒரு காதல் திருமணம், பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி இருவரும், திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இவர்களது திருமணம் மிக எளிமையாக, பெசண்ட் நகர் முருகன் கோயிவில் நடைப்பெற்றது. இத்திருமணத்தில், அவரது நண்பர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

சிறுநீர் - ஒண்ணுக்கு போறதெல்லாம் கண்ணுக்கு தெரியாத பிரச்சனைகளில் ஒன்று

வினவு.com  :பொதுக்கழிப்பறைகள் கட்டாமல் தொழிலாளிகளுக்கு டாஸ்மாக்கும், முதலாளிகளுக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் கட்டி வைத்து தப்பு செய்யும் அரசுகளின் மேல்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேர்கடலை வறுத்து விற்கும் கடையது. கடையில் ஆள் இல்லை. வாங்குவதற்கு காத்திருந்தேன். ஐந்து நிமிடத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வந்தாள். முகம், கழுத்து, கை எல்லாம் தண்ணீரின் ஈரத்தால் நனைந்திருந்தது. அவள் அணிந்திருந்த மேற் சட்டை வேர்வையில் குளித்திருந்தது. முகத்தை துடைக்க கூட நேரமில்லாமலோ அல்லது எப்பொழுதும் பிசுபிசுக்கும் வேர்வையின் கசகசப்பு இல்லாத ஈரத்தின் குளுமை பிடித்திருந்ததாலோ கையை மட்டும் துடைத்து விட்டு திரும்பியவள் அறிமுகம் இல்லாத பெண்ணான என்னிடம் வேதனையை கொட்டி தீர்த்தாள்.
“இந்த லயன்ல உள்ள பத்து கடைக்கும் சேத்து ஒரு டாய்லட்டுதான். நான் ஒருத்திதான் பொம்பள, மத்த கடையில எல்லாம் ஆம்பளைங்க இருக்காங்க. அவங்களுக்கு ஒண்ணுக்கு வந்தா எந்த எடத்துலயும் போய்க்கிறாங்க. பொம்பள நாம அப்படி போக முடியுமா?

கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை?

மதிமாறன் :  காதலித்தால் ‘அப்பன் ஆம்பள’ வெட்டுறான். காதலிக்காவிடில் ‘ரவுடி ஆம்பள’ வெட்டுறான்.
அட கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை?
1 September
‘பெண்களுக்கு எதிரான ஈவ்டீசிங் போன்ற லீலைகளே கடவுளுக்கான அழகு. அதுதான் பெண்களை மயக்கும் வழி’ என்ற புராண, இதிகாச வழியாகச் சொல்லப்பட்ட ஆணாதிக்கக் கலை, இலக்கியங்களின் தொடர்ச்சியாகதான்;
கண்ணனின், முருகனின் வாரிசுகளாக எம்.ஜீ.ஆர், சிவாஜி – ரஜினி, கமல், – விஜய் , அஜித் – தனுஷ், சிம்பு என்று ஈவ்டீசிங் செய்து நாயகிகளை ‘மயக்கி’ கடவுள்களைப் போல் இளைஞர்களுக்கு வழி காட்டுகிறார்கள்.
2 September
‘மரியாதையா என்னை லவ் பண்ணு.. இல்ல தலையில கல்லைப் போட்டுக் கொன்னுடுவேன்.’ என்று மிரட்டிய ‘சேது’ பாலாவை விட,
காதலிக்க மறுத்தபோதும், பெண்ணின் நினைவுகளில் தாடி வளர்த்து அவளுக்காகத் தன் உயிரை தியாகம் செய்த ‘ஒரு தலை ராகம்’ டி. ராஜேந்தர் ஆயிரம் மடங்கு முற்போக்கானவர்.⁠⁠⁠⁠

காஞ்சனா தற்கொலை முயற்சிக்கு இது தான் காரணம்..! வெளிவராத தகவல்

விகடன்.காம் : தலைமை செயலகத்தில் திருவொற்றியூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காஞ்சனா, கடந்த 2ஆம் தேதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் காஞ்சனா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காஞ்சனாவின் தற்கொலை முயற்சிக்கு காவல்துறை கூறும் காரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து பெயரைக் குறிப்பிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் கடந்த 1999ம் ஆண்டு காஞ்னா, ஓமலூரில் சப்-இன்ஸ்பெக்டராக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். விளையாட்டு மீது அவருக்கு அளவுகடந்த ஆர்வம் இருந்தது. பல தடகள போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வாங்கி துறைக்கு பெருமை சேர்த்தார். இதுவரை ஏராளமான பதக்கங்களை பெற்றுள்ளார். தற்போது தண்டையார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.

எஸ். ஆர். எம்.நிறுவனம், நியூஸ் 7 பரஸ்பர குற்றச்சாட்டு... .. அவதூறு பரப்புகிறார்கள்


thetimestamil.com :சர்வதேச தரம் கொண்ட எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் குறித்து பல்வேறு அவதூறுகளை நியூஸ் 7 தொலைக்காட்சி பரப்பி வருவதாக பதி‌வாளர் சேதுராமன் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தாடு பரப்பப்படும் இந்த அவதூறுகளில் துளியளவும் உண்மையில்லை என்றும் மிரட்டலையே தங்களது தொழிலாக கொண்டிருக்கும் சிலர் இவ்வாறான அவதூறுகளை நியூஸ் 7 தொலைக்காட்சியின் வழியே பரப்பி வருவதாகவும் பதிவாளர் கூறியுள்ளார். இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள அவர், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு சர்வதேச அளவில் பல்வேறு பிரபல நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள்:சாதாரண பள்ளி ஆசிரியர்
15 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு
அதிபதியானது எப்படி?

ஜோதிராவ் புலே மட்டுமே இந்திய வரலாற்றில் ஆசிரியர் என்ற சிறப்புக்குரியவர்- சர்வபள்ளி ராதாக்கிருஷ்ணன் அல்ல!

ராதாக்கிருஷ்ணன் இந்திய தத்துவவியல் மூலம் பார்ப்பன கருத்தியலுக்கு எதிராகத் தோன்றிய சமண, பௌத்த மதங்களை ‘இந்து’ என்கிற ஒரு குடையின் கீழ்கொண்டுவந்த திரிபு  வேலையைத் தொடங்கி வைத்தவர் . இந்த சாராங்களை உள்ள வாங்கிய இந்து மதம், சமண, பௌத்த கோட்பாடுகளை உள்வாங்கி தனதாக்கிக் கொண்டது.
thetimestamil.com :முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நல்ல ஆசிரியர் என்பதற்கான இலக்கணம் குறித்தும் அவர் மாணவர் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அவரவர் பாணியில் கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்கள். ஊடகமும் சமூக ஊடகங்களும் நிரம்பி வழிகின்றன. எந்த ஊடகமும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் சமுதாயத்துக்கும் மாணவர் சமுதாயத்தும் என்ன செய்தார் என்று எப்போதுமே சொல்வதில்லை.
ராதாகிருஷ்ணன் யார்?

93 விசாலி நெடுஞ்செழியன் மாமி மகளிர் ஆணைய தலைவி - தகுதியற்ற மருமகள் கல்யாணி மதிவாணன் குழந்தைகள் ஆணைய தலைவி

தமிழ்நாடு குழந்தைகள் உரிமை
பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவி, கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் காலியாக உள்ளது. மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் பதவி மிக முக்கியமானது. அது, சுமார் 5 மாதங்களாக காலியாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதேபோல், ஒரு வழக்கில் கருத்துக்கூறிய உயர் நீதிமன்றம், 2 மாத காலத்துக்குள் குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, அதே வழக்கு செப்டம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக கல்யாணி மதிவாணனை தமிழக அரசு நியமித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை:ஜியோ விளம்பரத்தில் பிரதமர்!


மின்னம்பலம்.காம் :கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோவுக்கான விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரத்தின் மேல்பகுதியில் ‘ஜியோ டிஜிட்டல் லைஃப்’ என்றும் அதற்குக்கீழே ‘இந்தியாவுக்கு சமர்ப்பணம், இந்தியாவில் உள்ள 1.2 பில்லியன் குடிமகன்களுக்கு சமர்ப்பணம்’ என்றும் வாசகம் இருந்தது. இந்த வாசகத்துக்குக்கீழ் இந்தியாவின் பிரதமர் நரேந்திர, மோடி நீலநிற உடை அணிந்தவாறு ஒரு புகைப்படம் இருந்தது. (ரிலையன்ஸ் ஜியோவின் லோகோவும் நீலநிறம் என்பது குறிப்பிடத்தக்கது.)
மோடியின் புகைப்படத்துக்குக்கீழ், ‘நமது பயணத்தில், வாழ்வை மாற்றும் தருணங்கள் சில வரும். அதுபோன்ற ஒரு தருணம்தான் நமது நாட்டின் மதிப்புக்குரிய பிரதமரின் ’டிஜிட்டல் இந்தியா’ திட்டம். டிஜிட்டல் இந்தியா திட்டம்மூலம் நாட்டின் 1.2 பில்லியன் மக்களை இணைக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் திட்டத்தை உணர்ந்து, அத்திட்டத்துக்கு ஜியோ சேவை சமர்ப்பிக்கப்படுகிறது.

உபி, டெல்லி அரசுகள் சமோசாவுக்காக மக்கனின் வரிப்பணம் விரயம்.

minnnambalam.com அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த 18 மாதங்களில் கெஜ்ரிவால் மற்றும் மந்திரிகளுக்காக சமோசா, தேநீருக்காக ரூபாய் ஒரு கோடி செலவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த விவேக் கர்க் என்பவர் அந்த மாநில மந்திரிகள் டீ மற்றும் சமோசாவுக்கு செய்துள்ள செலவு விவரங்களை தெரிவிக்குமாறு தகவல் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு டெல்லி அரசின் பொது நிர்வாகத் துறை துணைச் செயலாளர் கிருஷ்ணலால் அளித்த பதிலில், “டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தன்னை பார்க்க வந்த விருந்தினர்களுக்கு சமோசா, தேநீருக்காக மொத்தம் ரூ.47.29 லட்சம் செலவு செய்து இருக்கிறார்.

ஆப்கன் மாஜி அதிபர் கர்சாய்க்கு டில்லியில் பெண் குழந்தை பிறந்தது

புதுடில்லி:ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாஜி அதிபர் ஹமிது கர்சாய். இவருக்கு தலைநகர் புதுடில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது கர்சாய்க்கு நான்காவது குழந்தை ஆகும். இது குறித்து இந்தியாவிற்காக ஆப்கானிஸ்தான் தூதர் முகமது அப்தாலி கூறுகையில், “ஆப்கான் மாஜி அதிபர் ஹமிது கர்சாய் 4-வது குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். டில்லியில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சனிக்கிழமை காலை அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கர்சாய் சனிக்கிழமை அன்று மருத்துவமனைக்கு வருகை தந்து தனது குழந்தையையும், மனைவியையும் பார்வையிட்டார். புதிதாக பிறந்துள்ள குழந்தை லண்டன் நகருக்கு கொண்டு செல்லப்படுகிறது” என்றா    தினமலர்.com

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா : நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவேண்டும்.. கட்சிகளுடன் ஆலோசனை !

நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்: அனைத்துக் கட்சிகளுடன் நாளை ஆலோசனை: சித்தராமையா பேட்டிகர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றார்.  நக்கீரன்,இன்

பாயும் புலியும் தனி ஒருவனும்... ஒரேவிதமான கதை... ஒன்று வெற்றி ஒன்று தோல்வி! ஏன்?

kanavuthirutan.blogspot.com  : ஒரேவிதமான கதைக்களன் கொண்ட இரண்டு திரைப்படங்கள், அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகி, ஒன்று மிகச்சிறந்த வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்து கொண்டிருக்க.. மற்றொன்று முதல் காட்சியிலேயே மக்களை முகம் சுழிக்க வைத்துக் கொண்டிருக்கிறது… இரண்டுமே ஒரேவிதமான கதைக்களனை (கிட்டத்தட்ட) கொண்ட திரைப்படங்கள் தான். அப்படி இருந்தும் படத்தின் ரிசல்ட்டில் மட்டும் ஏன் இந்த வித்தியாசம்.?.தனி ஒருவனில் ஹீரோவான ஜெயம் இரவி ஒரு போலீஸ் அதிகாரி. IPS ஆக பணியில் சேர்வதற்கு முன்பே அவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி வகுப்பின் போதே, தனக்கான எதிரியை தானே தேர்ந்தெடுத்து, அவனை அழிக்க வேண்டும் என்பதனையே இலட்சியமாகக் கொண்டு, செயல்படவும் தொடங்கிவிடுகிறார். தனக்கான எதிரியாக மூன்று பேரை தரம்பிரித்து, அதில் மிகக்கொடூரமாக இருக்கும் ஒருவனை, தன் எதிரியாக தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கும் போது, அவர்கள் மூவரையுமே ஆட்டி வைக்கும் சக்திஆக இன்னொருவன் இருப்பது தெரிய வருகிறது. அவனையே தன் எதிரியாக தீர்மானிக்கிறார் இரவி.. அவர் தன் இலட்சியத்தில் ஜெயித்தாரா..? என்பது மீதிக்கதை..

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

சிறுவாணி:தமிழக அரசை பாராட்டும் வைகோ!

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடக அரசை வலியுறுத்தவும், சிறுவாணியில் அணை கட்ட வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரியும் மத்திய அரசிடம் வலியுறுத்த, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி உள்பட அனைத்துக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இதுவரை கூட்டவில்லை. மேலும், தமிழக அரசு அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுடன் ஒரு இணக்கமான சூழல் இல்லாததால்தான், தண்ணீர் பங்கீடு பிரச்னையில் தீர்வு காணப்பட முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றஞ்சாட்டுகின்றன.

வங்கதேசத்தில் ஜமாத் இஸ்லாம் பிரமுகர் மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார்!


minnambalam.com :வங்கதேசத்தின் தொழிலதிபரும் வங்கதேசத்தில் உள்ள பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத் இ இஸ்லாம் கட்சியின் முக்கியத் தலைவருமான மிர் காசிம் அலி நேற்று இரவு வங்கதேசத்தின் காசிம்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இது அவரது ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் தனி நாடாக உருவானபோது, அதை கடுமையாக எதிர்த்தவர் மிர் அலி. இந்தியா தன் சுயநலனுக்காகப் பாகிஸ்தானைத் துண்டாடுகிறது என்ற கருத்தை மிர் அலி கொண்டிருந்தார். பிரிவினையின்போது ஜமாத் இ இஸ்லாம் கட்சி உயர்நிலை குழு உறுப்பினர் மற்றும் ஊடக அதிபராக இருந்த மிர் அலி, இந்தப் பிரிவினைக்கு எதிராகப் போராடினார். இந்த போரில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டபோது அந்த வழக்கில் ஆறாவது போர்க்குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார் மிர் அலி. அவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

லண்டனில் மு.க.ஸ்டாலினுக்கு சிகிச்சை!


திமுக பொருளாளர் ஸ்டாலின், இன்று தன் குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக லண்டன் செல்கிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சிறுவாணி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு அணைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நேற்று ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டம் முடிவடைந்ததும் இரவு சென்னை திரும்பினார். இன்று ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ விமானம் மூலம் லண்டன் செல்கிறார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் செல்கின்றனர். தனிப்பட்ட பயணமாக ஸ்டாலின் லண்டன் செல்கிறார் என்றும் ஒரு வாரத்தில் அவர் சென்னை திரும்பி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிர கவனம் செலுத்துவார் என்றும் அறிவாலயத்தில் தகவல் தெரிவித்தனர்.