செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016
சென்னையில் தொழில் அதிபர் கொலை நகை-பணம் கொள்ளை... மண்ணடியில் இரும்பு வியாபாரி
காலணி லேஸை கட்ட பாதுகாப்பு அதிகாரியை பணித்த அமைச்சர் (வீடியோ) !
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் எரிச்சல் அடைந்தார். ''நான் என்ன அவரை (பாதுகாப்பு அதிகாரியை) கட்டாயப்படுத்தினேனா? மிரட்டினேனா? அடித்து துன்புறுத்தினேனா? இதனை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்.'' என்றார்."
சுதந்திர தின உரையில் பலுசிஸ்தானுக்கு ஆதவராக பிரதமர் பேசியது ஏன்?People of Balochistan, Kashmir thanked me: Modi on India's Independence Day .
புதுடில்லி,: டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயனடையும் வகையில், ஆண்டுதோறும் தலா ஒரு லட்ச ரூபாய் வரையிலான, அவர்களின் மருத்துவச் செலவுகளை மத்திய அரசு ஏற்கும். கூட்டு பொறுப்பு: சமூக நீதி, கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். தலித், பழங்குடியினர் உள்ளிட்டோரை, நாட்டு வளர்ச்சியில் அரவணைத்து செல்ல வேண்டும். வலிமையான சமுதாயமே, வலிமையான இந்தியாவை உறுதி செய்யும்; சமூக நீதியே, வலிமையான சமூகத்தை உருவாக்கும்.
நாட்டின் பணவீக்கம், 6 சதவீதத்துக்கு மேல் போகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. முந்தைய அரசில், பணவீக்கம், இரட்டை இலக்கத்தை தாண்டி இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், புதிய இலக்காக, 4 சதவீதத்துக்குள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்படும்.
வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் விடுதலை.. கர்நாடக மைசூரு சிறையில் இருந்து...
மைசூரு: சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை கர்நாடகா அரசு விடுதலை செய்தது.
நாட்டின் 70 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகாவில் சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 348 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கர்நாடகா அரசு உத்தரவிட்டது. மைசூரு மத்திய சிறையில் இருந்து 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் வீரப்பன் கூட்டாளிகளான அன்புராஜ், தங்கராஜ், அப்பர் சாமி, சித்தன் ஆகிய நான்கு பேரும் இடம் பெற்றிருந்தனர். மைசூரு சிறையில் 4 பேரும் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கர்நாடகா அரசு உத்தரவிட்டதையடுத்து அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். தினமலர்.com
நாட்டின் 70 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகாவில் சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 348 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கர்நாடகா அரசு உத்தரவிட்டது. மைசூரு மத்திய சிறையில் இருந்து 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் வீரப்பன் கூட்டாளிகளான அன்புராஜ், தங்கராஜ், அப்பர் சாமி, சித்தன் ஆகிய நான்கு பேரும் இடம் பெற்றிருந்தனர். மைசூரு சிறையில் 4 பேரும் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கர்நாடகா அரசு உத்தரவிட்டதையடுத்து அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். தினமலர்.com
ஜல்லிகட்டு ஆபத்தான விளையாட்டு .. மேனகா காந்தி சென்னையில் அதிரடி!
ஆலந்தூர்,
ஜல்லிக்கட்டு போட்டி ஆபத்தான விளையாட்டு என மத்திய மந்திரி மேனகா காந்தி கூறினார்.
மேனகா காந்தி பேட்டி:
மத்திய மந்திரி மேனகா காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–
பெண்களுக்கு மகப்பேறுகால விடுப்பு தொடர்பான மசோதா மேல்–சபையில்
நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாதது வருத்தமளிக்கிறது. மேலும் ஒரு நாள்
பாராளுமன்றம் நீடிக்கப்பட்டு இருந்தால் இந்த மசோதா நிறைவேறி இருக்கலாம்.
குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேறும்.
யானைகள் இறப்பு:
நாட்டில் யானைகள் இறப்பு அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
தற்போது நாட்டில் 20 ஆயிரம் யானைகள் தான் உள்ளதாக கணக்கெடுப்புகள்
கூறுகின்றன. தமிழ்நாடு, அசாம், கேரளா போன்ற மாநிலங்களில் யானைகள் அதிகமாக
உள்ளது. யானைகள் அடிக்கடி ரெயில்களில் அடிபட்டு இறக்கின்றன. ஒரு நாளைக்கு
ஒரு யானை இப்படி இறப்பதாக தகவல். இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் பாஜகவுடன் சேர்வதற்காக காங்கிரசை தாக்குவதா ? ஜோதிமணி ஆவேசம் !
விவசாய சங்க தலைவர் மருத்துவர் சிவசாமி காலமானார்.. தமிழ உழவர் உழைப்பாளர் கட்சியை....

மண்ணை பீடித்திருக்கும் நோய்களை களைய, மண்ணுக்கான மருத்துவராக தன்னை உருமாற்றிக் கொண்டு ‘உழவர் உழைப்பாளர்’ கட்சியை நிறுவினார். விவசாயம், விவசாயிகளுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து தமிழக விவசாய மேம்பாட்டு வரலாற்றில் தனக்கென்று தனி இடம் பிடித்த விவசாய சங்க தலைவரான மருத்துவர் சிவசாமி நேற்று காலமானார்.
திங்கள், 15 ஆகஸ்ட், 2016
அதிமுக கதை இலாகாவின் புளுபிலும் கற்பனைகள்... அமைச்சர்கள் பற்றிய CCTV காட்சிகள்... அதிரடிகள் காத்திருக்கிறது...
அ.தி.மு.க தலைமையுடன் சசிகலா புஷ்பா எம்.பி
நடத்தும் ஆடுபுலி ஆட்டத்தின் கிளைமாக்ஸை கணிக்க முடியாமல் தவித்து
வருகின்றனர் சீனியர் எம்.பிக்கள். 'கடந்த சில நாட்களாக அ.தி.மு.கவுக்கு
எதிரான அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார் சசிகலா' என்கின்றனர்
தூத்துக்குடி வட்டாரத்தில்.
தமிழ்நாட்டிற்குள் கால்வைக்க முடியாத அளவுக்குத் தொடர் வழக்குகளால்
சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா. ' எம்.பி
பதவியை ராஜினாமா செய்துவிட்டால், வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவது
மட்டுமல்லாமல், கட்சியிலும் தொடர்ந்து நீடிக்க முடியும்' என அ.தி.மு.க
முன்னணியினர் நடத்தும் சமரசப் பேச்சுவார்த்தைக்கும் அவர் உடன்படவில்லை.
சசிகலா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள் ஜான்சிராணி, பானுமதி ஆகியோர் கொடுத்த பாலியல் புகார், ஒப்பந்ததாரர் ஒருவர் அளித்த பணமோசடிப் புகார் என தன்னை நோக்கிப் பாயும் அடுத்தடுத்த வழக்குகளைக் கண்டு அசராமல் இருக்கிறார் அவர். இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலாவின் ஆதரவாளர் ஒருவர்,
" தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் சீனியர்கள் ஆதரவு இருகிறது.சசிகலா புஷ்பா மிகவும் தைரியமாக இருக்கிறார். தன் மீது போடப்பட்ட பொய் வழக்குகளில் இருந்து உரிய நியாயம் கிடைக்கும் வரையில் தமிழ்நாட்டிற்குள் கால்வைக்க அவரும் விரும்பவில்லை.
சசிகலா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள் ஜான்சிராணி, பானுமதி ஆகியோர் கொடுத்த பாலியல் புகார், ஒப்பந்ததாரர் ஒருவர் அளித்த பணமோசடிப் புகார் என தன்னை நோக்கிப் பாயும் அடுத்தடுத்த வழக்குகளைக் கண்டு அசராமல் இருக்கிறார் அவர். இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலாவின் ஆதரவாளர் ஒருவர்,
" தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் சீனியர்கள் ஆதரவு இருகிறது.சசிகலா புஷ்பா மிகவும் தைரியமாக இருக்கிறார். தன் மீது போடப்பட்ட பொய் வழக்குகளில் இருந்து உரிய நியாயம் கிடைக்கும் வரையில் தமிழ்நாட்டிற்குள் கால்வைக்க அவரும் விரும்பவில்லை.
அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
Udham Singh (26 December 1899 – 31 July 1940) was an Indian revolutionary best known for assassinating Sir Michael O'Dwyer, the former Lieutenant Governor of the Punjab in British India, on 13 March 1940. The assassination has been described as an avenging of the Jallianwala Bagh massacre in Amritsar in 1919.
உத்தம்சிங் நூற்றாண்டு விழா:
இறுதியாக, மரண தண்டனைத் தீர்ப்பை வாசித்து, பேனா முனையை உடைத்தான் வெள்ளைக்கார நீதிபதி.
“என் தாய் நாட்டுக்காகச் சாவதை விட வேறென்ன பெருமை எனக்குக் கிட்ட முடியும்” என்று அந்த வழக்கு மன்றமே அதிரும் வண்ணம் முழங்கினான் ராம் முகம்மது சிங் ஆசாத்.
ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற அந்தப் பெயரே விசித்திரமாக இல்லையா!
உத்தம்சிங் என்பது அவனது பெற்றோர் வைத்த பெயர் அவன் தனக்குத் தானே தனது அடையாளமாக, தனது இலட்சியப் பயணத்திற்காகச் சூட்டிய பெயர்தான் ராம் முகம்மது சிங் ஆசாத்!.
இறுதியாக, மரண தண்டனைத் தீர்ப்பை வாசித்து, பேனா முனையை உடைத்தான் வெள்ளைக்கார நீதிபதி.
“என் தாய் நாட்டுக்காகச் சாவதை விட வேறென்ன பெருமை எனக்குக் கிட்ட முடியும்” என்று அந்த வழக்கு மன்றமே அதிரும் வண்ணம் முழங்கினான் ராம் முகம்மது சிங் ஆசாத்.
உத்தம்சிங் என்கிற ராம் முகம்மது சிங் ஆசாத்
உத்தம்சிங் என்பது அவனது பெற்றோர் வைத்த பெயர் அவன் தனக்குத் தானே தனது அடையாளமாக, தனது இலட்சியப் பயணத்திற்காகச் சூட்டிய பெயர்தான் ராம் முகம்மது சிங் ஆசாத்!.
தன்னெழுச்சியாக திரண்டெழுந்த மக்கள்; உனா யாத்திரை.... கட்சிகளையும் தலைவர்களையும் முன்னிறுத்தாமலேயே
thetimestamil.com :உற்சாகமும் ஆர்வமுமாக பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி …ஆளும் கட்சியோ, ஆண்ட கட்சியோ அல்லது புகழ்பெற்ற தலைவர்களோ இல்லாமல்
உனா சுதந்திர யாத்திரை தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கான தலித்துகளையும்
ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்திருக்கிறது. பேரணியில்
பங்கேற்றவர்களிடம் காணக்கிடைக்கும் உணர்வு மயமான நிலை, இதுவரை காணாதது.
குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரிடத்திலும் உற்சாகம்,
‘இனியும் உங்கள் அடிகளை பொறுத்துக்கொள்ள மாட்டோம்; நாங்கள்
ஒன்றிணைந்துவிட்டோம்’ என்பதாக…அதை இதோ இந்த ஒளிப்படங்களில் காணுங்கள்…
இந்த நாடு எல்லோருக்குமானது; குறிப்பிட்ட சாதிக்கோ, குறிப்பிட்ட மதத்துக்கோ சொந்தமானதல்ல”: ராதிகா வெமுலா
குஜராத்தில் உனா நகரில் நடந்த சுதந்திர யாத்திரையின் முடிவில் நடந்த
பொதுக்கூட்டத்தில் ரோஹித் வெமுலாவின் தாய், ராதிகா வெமுலா கலந்துகொண்டு
கொடியேற்றி வைத்து பேசினார். அங்கே திரண்டிருந்த இஸ்லாமியர்களுக்கு சிறப்பு
நன்றி தெரிவித்த ராதிகா, “என் மகனுக்கு ஏற்பட்ட நிலையில் இன்னொரு
குழந்தைக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே நான் இங்கே போராடுகிறேன். இந்த
நாடு நம் எல்லோருக்குமானது, குறிப்பிட்ட சாதிக்கோ,குறிப்பிட்ட மதத்துக்கோ
மட்டுமல்ல. பாபா சாகேப் கொடுத்த அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளுக்கு டாக்டர் அம்பேத்கரைப் போல கல்வி அளியுங்கள். அவர்களை
அடிமையாக்கிவிடாதீர்கள். என்னுடைய மகனுக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை.
ஆனால், நீங்கள் உங்கள் முதல்வரை நீக்கியதன் மூலம் சாதித்திருக்கிறீர்கள்.
அது மிகப் பெரும் சாதனைதான். என் உயிர் உள்ளவரை தலித்துகளுக்கான
உரிமைகளுக்காகப் போராடுவேன். ஜெய் குஜராத், ஜெய் பீம்!” என பேசினார்.thetimestamil.com
கவிஞர் நா.முத்துகுமார் வைத்திய செலவுக்கு ரூ. 40 லட்சம் தேவைப்பட்டது ஆனால் சுமார் ரூபாய் 70 லட்சம் காசோலைகள் மாற்ற முடியவில்லை.....
கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால்
பாதிக்கப்பட்டிருந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நேற்று மரணமடைந்தார்.
அவரது மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதுவரை தமிழ் சினிமாவில்
சுமார் 1500 மேற்பட்ட பாடல்களை எழுதி அவருக்கென்று ஒரு நீங்கா இடத்தை
பிடித்து வைத்திருந்தார்.மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டிருந்த
நா.முத்துக்குமாரின் சகிச்சைக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை
தேவைப்பட்டதாம். அந்த தொகையை தாயார் செய்ய முடியாமல் போனதுதான்
நா.முத்துக்குமார் உயிரிழப்பு காரணம் என்றும் அவரது வீட்டு அலமாரியில்
சம்பளமாக வாங்கிய ரூ:70 லட்சம் மதிப்புள்ள காசோலைகள் பணமாக மாறாமல் வெற்று
காகிதமாக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.;அவரை பயன்படுத்திக்கொண்ட பலர் அவருக்கு முறையாக சம்பளத்தை கொடுக்க தவறியதால் தான் அவர் உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது.வெப்துனியா.com
கங்கை அமரன்: நாங்களே எதிர்பார்த்திராத உயரத்துக்கு எங்களை பஞ்சு அருணாசலம் அவர்கள்...
(109) நூறு ஜென்மம்... வாழும் சொந்தம்!
ண்ணீரோடு... சோகத்தில்... திக்குமுக்காடி இருக்கிறோம் நாங்கள்.சினிமாவில் நாங்கள் வாய்ப்புத் தேடி அலைந்தபோது... "இது சரிப் படாது... இவங்க சரியா வருவாங்களா?' என எங்களை எல்லோரும் ஒதுக்கி வைத்திருந்த நேரத்தில்... விரக்தியின் உச்சத்தில் நாங்கள் இருந்தபோது.... கதாசிரியர் அண்ணன் ஆர்.செல்வராஜ் மூலமாக எங்களைப் பற்றி அறிந்து... "பாவலர் பிரதர்ஸ்'’என்ற பெயரில் கச்சேரி செய்து வந்த எங்களை...’ பல எதிர்ப்பு களையும் மீறி... எங்கள் மீதும், எங்கள் திறமை மீதும் நம்பிக்கை வைத்து... "அன்னக்கிளி'’படம் மூலம் "இளைய ராஜா'வாக ஆக்கி... அறிமுகப்படுத்தி.... "பாவலர் பிரதர்ஸ்'ஸான எங்களின் திரைஇசைப் பயணத்தில்... ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்கி... ஆதரித்த எங்களின் திரையுலகத் தகப்பன்... அண்ணன் பஞ்சு அருணாச்சலம் 09-08-2016 அன்று இயற்கை எய்தினார்.>நான் "பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்' தொடரில் பல அத்தியாயங்களில் அண்ணன் பஞ்சு அருணாச்சலம் பற்றி குறிப்பிட்டு... எழுதி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
5 காசு முறைகேட்டுக்கு 41 ஆண்டாக தொழிலாளி மீது வழக்கு... டெல்லி அரசின் கண்றாவி
5 காசு பிரச்சினைக்காக 41 ஆண்டாக நடக்கும் வழக்கு
டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தவர் ரன்வீர்சிங் யாதவ்.
இவர், 1973-ம் ஆண்டு பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சில் ஏறி சோதனையிட்டனர். அந்த பஸ்சில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் தான் செல்லும் இடத்துக்கு 15 காசு கொடுத்து டிக்கெட் வாங்கினார். அந்த இடத்துக்கு செல்ல 10 காசுதான் கட்டணமாகும். ஆனால், கண்டக்டர் ரன்வீர்சிங் 15 காசு வசூலித்து 10 காசுக்கு மட்டும் டிக்கெட் கொடுத்து இருந்தார். மீதி 5 காசை தான் வைத்துக் கொண்டார். இதை பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர்.
டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தவர் ரன்வீர்சிங் யாதவ்.
இவர், 1973-ம் ஆண்டு பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சில் ஏறி சோதனையிட்டனர். அந்த பஸ்சில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் தான் செல்லும் இடத்துக்கு 15 காசு கொடுத்து டிக்கெட் வாங்கினார். அந்த இடத்துக்கு செல்ல 10 காசுதான் கட்டணமாகும். ஆனால், கண்டக்டர் ரன்வீர்சிங் 15 காசு வசூலித்து 10 காசுக்கு மட்டும் டிக்கெட் கொடுத்து இருந்தார். மீதி 5 காசை தான் வைத்துக் கொண்டார். இதை பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர்.
கவிஞர் நா. முத்துகுமார் .. குடிக்காதீர்கள்.. ! இல்ல பாஸ் எப்பவாச்சும்தான்..... இனி யார் யாருக்கு ஆறுதல்?
கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி கவிஞர் மகுடேசுவரன் :
நம்மூர்
மதுவை உண்டீர்களெனில் நாற்பதைத் தாண்ட மாட்டீர்கள். நாற்பதைத் தாண்டியும்
குடிக்கிறீர்களென்றால் நாளையைத் தாண்டுவீர்களா, தெரியாது !
உள்ளுறுப்புகளுக்கு என்ன தொற்று, என்ன நிலைமை என்பதைப் போதையால் உணர முடியாது. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
‘குடிக்காதீர்கள்’ என்று நான் கேட்டுக்கொண்ட ஆயிரம் பேரில் அவரும் ஒருவர். “இல்ல பாஸ்... எப்பவாச்சும்தான்” என்று அவர் ஆறுதல் கூறுவார். இனி யார் ஆறுதல் கூறுவது ?முகநூல் பதிவு ,
‘குடிக்காதீர்கள்’ என்று நான் கேட்டுக்கொண்ட ஆயிரம் பேரில் அவரும் ஒருவர். “இல்ல பாஸ்... எப்பவாச்சும்தான்” என்று அவர் ஆறுதல் கூறுவார். இனி யார் ஆறுதல் கூறுவது ?முகநூல் பதிவு ,
யமுனா நதி நிரம்பி வழிகிறது... பதட்டத்தில் டெல்லி மக்கள் பாதுகாப்பு தேடி....
புதுடில்லி: ஹரியானாவில் இருந்து, யமுனை ஆற்றில் கூடுதல் தண்ணீர்
திறந்துவிடப் பட்டு ள்ளதால், டில்லியில், வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்
உருவாகியுள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அங்கு, கடந்த சில தினங்களாக பலத்த மழை
பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல், பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, யமுனை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது; ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.கிழக்கு டில்லி யில், தாழ்வான பகுதிகளில், ஏற்கனவே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அங்கிருந்த மக்கள் வெளியேற் றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக் கப்பட்டுள்ளனர். வெள்ள தடுப்பு பிரிவினரும், மீட்பு குழுவினரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
''தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறி, முகாம்களுக்கு செல்ல வேண்டும்,'' என, டில்லி மாநில நீர்வளத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா எச்சரித்துள்ளார் . டில்லி மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, 'டில்லியில் கனமழை தொடரும்' எனவானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள தால், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தினமலர்.com
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, யமுனை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது; ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.கிழக்கு டில்லி யில், தாழ்வான பகுதிகளில், ஏற்கனவே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அங்கிருந்த மக்கள் வெளியேற் றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக் கப்பட்டுள்ளனர். வெள்ள தடுப்பு பிரிவினரும், மீட்பு குழுவினரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
''தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறி, முகாம்களுக்கு செல்ல வேண்டும்,'' என, டில்லி மாநில நீர்வளத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா எச்சரித்துள்ளார் . டில்லி மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, 'டில்லியில் கனமழை தொடரும்' எனவானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள தால், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தினமலர்.com
எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விற்க முடிவு: தர்ம காரியங்களுக்கு.....
எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விற்று தர்ம காரியங்களுக்கு நிதி திரட்ட நடவடிக்கை-
எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் செட்டிநாடு அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக அறக்கட்டளையின் தலைவர் ஏ.சி.முத்தையா தெரிவித் துள்ளார். இறப்பதற்கு முன்பே, தனக்குப் பிறகு தனது சொத்தில் இருந்து ஒரு ரூபாய்கூட தனது சுவீகார புதல்வர் முத்தையாவுக்கு செல்லக் கூடாது என உயில் எழுதி வைத் தார் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராம சாமி செட்டியார். தனக்குப் பிறகு தனது சொத்துகள் அனைத்தும் அறக்கட்டளை சொத்தாக ஆக்கப் பட்டு அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை தர்ம காரியங் களுக்கு செலவிட வேண்டும் என்றும் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
பலூசிஸ்தான் தனிநாடாக உருவாகும் ? இந்தியா பங்களாதேஷை உருவாக்கியது போல .....? INDIA MAY HELP BALOCHISTAN GET FREE FROM PAKISTAN
பாகிஸ்தான்
மனசாட்சியின்றி பலுசிஸ்தானை மூர்க்கத்தனமாகத் தாக்குவதாக கடும்
குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர்
பாரிக்கர். மேலும் இன்று பலுசிஸ்தான் இந்தியாவின் உதவியை கோரியுள்ளநிலையில்
அமைச்சரின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.சின்மயா மிஷன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனோகர் பாரிக்கர், பாகிஸ்தானுக்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். அந்தக் கூடடத்தில் அவர் பேசியதாவது. ‘இந்தியாவுக்குள் 10 பயங்கரவாதிகளை அனுப்பும்போது, பயங்கரவாதத்தால் அதேயளவு பிரச்னையை பாகிஸ்தான் எதிர்கொண்டு வருகிறது.
இளையராஜா to எஸ்பி பாலா : இனிமேல் எந்த இசை மேடைகளிலும் எனது பாடல்களை நீங்கள் பாடக்கூடாது
மிக விரைவில் அமெரிக்காவில் இசையமைப்பாளர் இளையராஜா மிகப் பெரிய இசைநிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
இது குறித்து அண்மையில் சென்னையில் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தை தனது வீட்டுக்கு அழைத்த அவர் மேற்படி அமெரிக்க நிகழ்ச்சிக்கு தன்னோடு வரும்படி அழைத்தார். அப்போது பதிலளித்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் தனது 50வது இசையுலகப் பயணம் தொடர்பான வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் தான் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் அமெரிக்காவிற்கு தன்னால் வரமுடியாது என்று கூறினார்.
அமெரிக்காவில் பங்களாதேஷ் முஸ்லிம் போதகர் சுட்டுக் கொலை
வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த இமாம் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். நியூயார்க்கில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் பெயர் மெüலானா அகோன்ஜி (55). அவரும் தாராவுத்தீன் (64) என்பவரும் நியூயார்க் நகரில் உள்ள மசூதியில் சனிக்கிழமை பிற்பகல் தொழுகை முடிந்த பிறகு, வெளியே நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்புறமாக வந்த மர்ம நபர் அந்த இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அந்த மர்ம நபர், மிக அருகிலிருந்து அவர்களை சுட்டதாக போலீஸார் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் அப்பகுதிக்கு விரைந்த பொதுமக்கள் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மெüலானா அகோன்ஜி உயிரிழந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த மற்றொரு நபரான தாராவுத்தீன் உயிருக்குப் போராடி வருகிறார். இது மதவாத தாக்குதல் என்று கூறுவதற்கான காரணம் எதுவும் தற்போதைக்கு இல்லை. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பல்வேறு கண்காணிப்பு கேமராக்களில் இமாமை சுட்ட நபரின் படம் பதிவாகியிருக்கிறது.
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016
கனவுக்குள் காவல் இருப்பேன் என்ற கவிஞர் .நா.முத்துகுமார் கவிதைக்குள் கரைந்தது ஏன்?
Suresh Kannan ;நா.முத்துகுமார் எழுதிய பாடலின் ஒரு வரியை சிலாகித்து சில நாட்களுக்கு முன் எழுதியது. :(
****
லக்கேஜை தோளுக்கு மேல் சிரமப்பட்டு தூக்கி மேலேயுள்ள லாஃப்டிற்குள் எப்படியாவது அடித்துப் பிடித்து திணித்து பெருமூச்சுடன் இறங்கி வருவதைப் போல இசையமைப்பாளரின் சிக்கலான மெட்டிற்குள் தமிழை மடக்கி ஒடித்து துண்டித்து கொலை செய்து திணிக்கும் 'மீட்டர்' பாடலசிரியர்களின் இடையே அந்த வணிக சிக்கல்களுக்குள்ளும் தங்களால் இயன்றவரைக்குமான கவித்துவத்தையும் கதைச் சூழலுக்கான பொருத்தமான வார்த்தைகளையும் இட்டு மேலதிக அழகு செய்யும் பாடலாசிரியர்களும் இன்னமும்் இருக்கத்தான் செய்கிறார்கள்.
****
லக்கேஜை தோளுக்கு மேல் சிரமப்பட்டு தூக்கி மேலேயுள்ள லாஃப்டிற்குள் எப்படியாவது அடித்துப் பிடித்து திணித்து பெருமூச்சுடன் இறங்கி வருவதைப் போல இசையமைப்பாளரின் சிக்கலான மெட்டிற்குள் தமிழை மடக்கி ஒடித்து துண்டித்து கொலை செய்து திணிக்கும் 'மீட்டர்' பாடலசிரியர்களின் இடையே அந்த வணிக சிக்கல்களுக்குள்ளும் தங்களால் இயன்றவரைக்குமான கவித்துவத்தையும் கதைச் சூழலுக்கான பொருத்தமான வார்த்தைகளையும் இட்டு மேலதிக அழகு செய்யும் பாடலாசிரியர்களும் இன்னமும்் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சலோஉனா சுதந்திர யாத்திரைக்கு அமெரிக்க அம்பேத்கரிய அமைப்புகள் ஆதரவு
thetimestamil.com : குஜராத்தின் உனா நகரில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சலோ உனா சுதந்திர யாத்திரையை
தலித் அமைப்புகள் கடந்த பத்து நாட்களாக நடத்தி வருகின்றன. குஜராத்தின் பல
ஊர்களைக் கடந்து இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15 இந்த யாத்திரை உனா
நகரில் முடிவடைகிறது. யாத்திரைக்கு இஸ்லாமிய, இடதுசாரி அமைப்புகள் ஆதரவு
தெரிவித்துள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் அம்பேத்கரிய அமைப்புகள்
உனா யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து தாங்கள் வசிக்கும் ஊர்களில் கவன ஈர்ப்பு
போராட்டம் நடத்தினர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் நியூஜெர்ஸி, நியூயார்க், பாஸ்டன், டெட்ராய்ட், சான்பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் வட அமெரிக்க அம்பேத்கர் அசோசியேஸன் சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த வாரம் போராட்டங்கள் நடைபெற்றன.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் நியூஜெர்ஸி, நியூயார்க், பாஸ்டன், டெட்ராய்ட், சான்பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் வட அமெரிக்க அம்பேத்கர் அசோசியேஸன் சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த வாரம் போராட்டங்கள் நடைபெற்றன.
அந்த முத்தத்தின் ஈரம் எப்போதும் காயாதது...

மின்னம்பலம்.காம் :தனி
ஒருவருக்காக தமிழகமே கலங்குவதெல்லாம் அவ்வளவு எளிதில்
சாத்தியமாகக்கூடியதல்ல. சக கலைஞர்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என
அனைவரும் ஒருமித்த உடைந்த குரலில் வெளிப்படுத்தும் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்துக்கு தூவப்படும் மொழிமலர்கள்.
‘இறந்துபோனதை
அறிந்த பிறகு தான்
இறக்க வேண்டும் நான்’
-நா.முத்துகுமார்
தன்னுடைய இறப்பு எப்படி இருக்க வேண்டும் என எழுதாத கவிஞர்கள் இல்லை. அந்த வரிசையில் முத்துக்குமாரும் விதிவிலக்கல்ல. தன் மரணத்தைப்பற்றி எழுதிவைக்க அசாத்திய துணிச்சல் தேவையில்லை. கொண்டாட்டமான வாழ்க்கை ஒன்றே போதும். எப்போதும் தனது வாழ்க்கையை கொண்டாட்டத்துடன் நகர்த்திய நா.முத்துக்குமார், நான்கு வயதில் தன் தாயை இழந்தவர். அந்த இழப்பு எழுதுவதற்கு முன்பாக அவரது பேனா முனையில் வந்து நின்றுவிடும். ஆனால், அந்த சோகம் ரசிகர்களைத் தாக்கிவிடாமல் பார்த்துக்கொள்வதில் இருந்த கெட்டிக்காரத்தனம்தான் அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது. பெண்மையைப் பற்றி எழுதும்போதெல்லாம், முதலில் தனக்குக் கிடைக்காத தாயன்பை நினைத்து எழுதியவர், பிறகு தன் மகளிடம் கிடைத்த முத்தங்களின் அன்பை முன்நிறுத்தி எழுதத் தொடங்கினார். அதன் பயனாகப் பிறந்ததே, இன்று அனைவரும் கொண்டாடும் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’. 41 வயதில் 1500 பாடல்களுக்கும் மேலாக எழுதியது எத்தனை பெரிய சாதனை. தன் ரசிகர்களுக்கு வார்த்தைகளின்மூலம் மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்துப் பழக்கப்பட்டவர்
‘இறந்துபோனதை
அறிந்த பிறகு தான்
இறக்க வேண்டும் நான்’
-நா.முத்துகுமார்
தன்னுடைய இறப்பு எப்படி இருக்க வேண்டும் என எழுதாத கவிஞர்கள் இல்லை. அந்த வரிசையில் முத்துக்குமாரும் விதிவிலக்கல்ல. தன் மரணத்தைப்பற்றி எழுதிவைக்க அசாத்திய துணிச்சல் தேவையில்லை. கொண்டாட்டமான வாழ்க்கை ஒன்றே போதும். எப்போதும் தனது வாழ்க்கையை கொண்டாட்டத்துடன் நகர்த்திய நா.முத்துக்குமார், நான்கு வயதில் தன் தாயை இழந்தவர். அந்த இழப்பு எழுதுவதற்கு முன்பாக அவரது பேனா முனையில் வந்து நின்றுவிடும். ஆனால், அந்த சோகம் ரசிகர்களைத் தாக்கிவிடாமல் பார்த்துக்கொள்வதில் இருந்த கெட்டிக்காரத்தனம்தான் அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது. பெண்மையைப் பற்றி எழுதும்போதெல்லாம், முதலில் தனக்குக் கிடைக்காத தாயன்பை நினைத்து எழுதியவர், பிறகு தன் மகளிடம் கிடைத்த முத்தங்களின் அன்பை முன்நிறுத்தி எழுதத் தொடங்கினார். அதன் பயனாகப் பிறந்ததே, இன்று அனைவரும் கொண்டாடும் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’. 41 வயதில் 1500 பாடல்களுக்கும் மேலாக எழுதியது எத்தனை பெரிய சாதனை. தன் ரசிகர்களுக்கு வார்த்தைகளின்மூலம் மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்துப் பழக்கப்பட்டவர்
இனி ஞாயிறுதோறும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு
தொலைபேசி தொடர்பை ஊக்கு விக்கும்
வகையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தரைவழி தொலைபேசி
வாயிலாக (லேன்ட்லைன்) செய்யப்படும் உள்நாட்டு அழைப்புகளுக்கு கட்டணம்
கிடையாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லி பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள
செய்தி குறிப்பில், தரைவழி தொலைபேசி வாயிலாக (லேன்ட்லைன்) மற்ற
தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7
மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்கி
வருகிறது.
தற்போது மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஊக்கப்படுத்தும்
வகையில் நாளை கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில் (ஆகஸ்ட்.15) இருந்து
ஞாயிற்றுக்கிழமைகளில் லேன்ட்லைன் இணைப்பு வாயிலாக செய்யப்படும் அனைத்து
அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும்.
பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலமானார் ....உடல் வேலங்காடு மின்மயானத்தில் தகனம் !
சென்னையில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் உடல் வேலங்காடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
நா.முத்துக்குமார் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 41
வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.
சீமான் இயக்கிய வீர நடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
ஆனார்.
'காதல் கொண்டேன்', 'பிதாமகன்', 'கில்லி', 'கஜினி', 'நந்தா',
'புதுப்பேட்டை', 'காதல்', 'சந்திரமுகி', 'சிவாஜி', 'கற்றது தமிழ்', '7 ஜி
ரெயின்போ காலனி', 'காக்காமுட்டை', 'தெறி' உள்ளிட்ட பல படங்களில்
நா.முத்துக்குமார் எழுதிய பாடலகள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.
தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட
பாடல்களை எழுதியுள்ளார். 'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை
மீட்டுகிறாய் பாடலுக்கும், 'சைவம்' படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்கும்
தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




