செவ்வாய், 5 நவம்பர், 2024

அமரன் படத்தில்தான் அவாளுக்கு எத்தனை வசதி?

Kamal Haasan opens up on 'Amaran'; reveals why he decided to make the film!  | Tamil Movie News - Times of India

ராதா மனோகர் :  காஷ்மீர் தீவிரவாதி  இந்திய ராணுவம்
உண்மை கதை என்ற எக்ஸ்ட்ரா ஜிகினா வேற
நாட்டில் எத்தனையோ உண்மை கதைகள் தேடுவாரின்றி இருக்கிறது
ஆனாலும் முஸ்லீம் தீவிரவாதி இந்திய ராணுவம் .
போலி தேசப்பற்றை காட்டி கல்லா கட்டுவதற்கு கமலஹாசனுக்கு லட்டு ஒரு போன்ற வாய்ப்பு!
அடிமனதில் உறங்கி கிடைக்கும் பூணூல் வெறிக்கு தீனி போட்டது மாதிரியும் இருக்கும்
சங்கிகளை மகிழ்வித்தது போலவும் இருக்கும்
இஸ்லாமிய வெறுப்பை அதிகாரபூர்வமாக காட்ட தீவிரவாதி தேசபக்தி மசாலா.
அமரன் படத்தில்தான் அவாளுக்கு எத்தனை வசதி?

திங்கள், 4 நவம்பர், 2024

தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு…. கஸ்தூரிக்கு பாஜக கண்டனம்!

 மின்னம்பலம் -Selvam  : தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து தான் பேசிய இழிவான கருத்துகளை நடிகை கஸ்தூரி திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக டெல்லி மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இன்று (நவம்பர் 4) வலியுறுத்தி உள்ளார்.
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நேற்று (நவம்பர் 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, “மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள்தான் தெலுங்கர்கள். எப்போதோ இங்கு வந்த அய்யர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? ” என்று பேசியிருந்தார்.

விஜயலட்சுமி விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்து வீடியோ

 hindutamil.in : சென்னை: விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் கொள்கை குறித்து நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
தவெக தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாபம் விடுகிறார். விஜயும், திமுகவும் கொள்கை ரீதியாகவே தவறு செய்துள்ளதாக சீமான் கூறுகிறார்.

மகளிர் உதவித்தொகை திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது!

 tamil.asianetnews.com - Ajmal Khan : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடவுள்ளார்.
தமிழக அரசின் பெண்களுக்கான திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், யாரையும் எதிர்பார்க்காமல் சுய தொழில் செய்து வாழ வேண்டும் என்பதற்காவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

இரான் பல்கலைக் கழகத்தில் ஆடைகளை கழற்றி திடீரென போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவி!

 வெப்துனியா : ஈரான் பல்கலைக் கழகத்தில் பெரும் அதிர்ச்சி.. ஆடைகளை கழற்றி திடீரென போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவி!
ஈரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட முடிவு செய்த கல்லூரி மாணவி, திடீரென தனது ஆடைகளை கழற்றி உள்ளாடையுடன் போராட்டம் நடத்தினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதையடுத்து, பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மாணவியை கைது செய்தனர்.

திமுகவின் மீது இங்கு பலருக்கு ஒவ்வாமை ஏன்?

 Amudhan R P :  திமுகவின் மீது இங்கு பலருக்கு ஒவ்வாமை ஏன்?
திமுக, பார்ப்பனியத்தை எதிர்க்கிறது. இந்தியத் தேசியத்திடம் சரண் அடையாமல் சம அந்தஸ்தில் உரையாடல் நடத்துகிறது. மாநில சுயாட்சி பேசுகிறது. இந்தி மொழித் திணிப்பை எதிர்க்கிறது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் உரிமையை  வலியுறுத்துகிறது. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வளர்ச்சியிலும் எல்லோருக்கும் பங்கு என்று இந்தியாவின் பிற மாநிலங்கள் யோசித்துப் பார்க்காத காலத்திலேயே (சுதந்தரம் அடைந்த உடனேயே) முழக்கமிட்டது.  
உயர்ஜாதி வகுப்பினர் கற்பனை செய்கிற இந்தி, இந்து, இந்தியாவை விமர்சனம் செய்யாமல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பார்ப்பனியத்தின் தனித்துவ அதிகாரத்தையும் நீர்த்துப் போகச்செய்தது. அது நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டாலும், திமுக போராடிக்கொண்டிருக்கிறது.
இப்படிப் பேசிப் போராடி, ஆட்சியைப் பிடித்து, சாதித்தும் காட்டியிருக்கிறது.

ஞாயிறு, 3 நவம்பர், 2024

சுவஸ்திகா அதிரடி : "அரகலயா" மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கா?

அமைந்தகரை குளியறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் : கணவன், மனைவி உள்பட 6 பேர் கைது - நடந்தது என்ன?

குளியறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் : கணவன், மனைவி உள்பட 6 பேர் கைது - நடந்தது என்ன?

கலைஞர் செய்திகள் - KL Reshma : சென்னை அமைந்தகரை, மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நிஷாத் என்பவர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் கும்பகோணம், திருவிடைமருதூரைச் சேர்ந்த 16 வயது ஒருவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் பணிப்பெண்ணாக இருந்து வந்தார்.
வீட்டு பணிகள் மட்டுமின்றி, முகமது நிஷாத்தின் குழந்தை பராமரிப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்

கனடாவில் சங்கிகளின் அட்டகாசம் ..

canada indian

 ராதா மனோகர் : வடஇந்தியாவில் சங்கிகளின் ஆதிக்கம் கூட கூட அவர்கள் ஒரு காட்டு மிராண்டி கும்பல்களாக மாறி கொண்டு வருகிறார்கள் போல் தெரிகிறது  கனடாவிலும் இதர மேற்கு நாடுகளிலும் அவர்களின் பல செயல்பாடுகள் சொல்லும் தரமன்று!
இன்று கனடாவில் அவர்களின் செயல்கள் இங்குள்ள ஏனைய குடிவரவாளர்களுக்கும் ஒரு பெரும் தீமையை விளைவிக்க கூடும்.
வெள்ளை இனத்தவர்களுக்கு வடஇந்திய சங்கிகளுக்கும் ஏனைய தெற்கு ஆசிய மக்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் பெரும் பாலும் தெரிவதில்லை
குறிப்பாக ஆந்திர, கன்னட, மலையாள, சிங்கள, தமிழர்களுக்கும் வடஇந்திய சங்கிகளுக்கும் இடையே தோற்ற வித்தியாசம் பெரிதாக இல்லாத காரணத்தால்  எல்லோரும் சங்கி காட்டுமிராண்டி கூட்டம்தான் என்றுதான் பெரும்பாலும் கருதுவார்கள்.
கனடாவில் ஏராளமான மாணவர்கள் மற்றும் குடிவரவாளர்கள் நிரந்தர வதிவிட அனுமதி கோரி உள்ள நிலையில் இந்த  காட்டு மிராண்டி கூட்டத்தின் மீது உள்ள கோபத்தில் கனடா மக்களும் அரசியல்வாதிகளும்
புதிய கடுமையான குடிவரவு சட்டம் இயற்றவும் நிறைவேற்றவும் கூடும்!

அமெரிக்கா 19 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது!

19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

 BBC News தமிழ் - அபினவ் கோயல்  :  யுக்ரேனில் ரஷ்யா நடத்தி வரும் போருக்கு உதவும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி,
அமெரிக்க அக்டோபர் 30ஆம் தேதியன்று (புதன்கிழமை) 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் இரண்டு இந்தியர்கள் உள்பட 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது தடை விதித்துள்ளது.
இந்திய பிரஜை ஒருவர் சீக்கிய பிரிவினைவாத ஆதரவு தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவை அமெரிக்க மண்ணில் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டால் இரு நாட்டிற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் அமெரிக்கா இந்தத் தடையை அறிவித்துள்ளது.

"மாநில மொழிகள் உயிரோடு இருப்பதற்கு காரணம் திராவிட இயக்கம்"... கேரளாவில் உதயநிதி பேச்சு!

 மின்னம்பலம் -Selvam  : இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் திராவிட இயக்கம் தான் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 2) தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று ‘மலையாள மனோரமா’ ஊடகக் குழுமத்தின், கலை மற்றும் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “திராவிட இயக்க அரசியலில் இலக்கியம் மற்றும் மொழியியலின் தாக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “தந்தை பெரியார் இதே கேரளாவில் 1924-ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார்.

கலைந்து போன வேடம்

ilakkiyainfo.: தேசிய மக்கள் சக்தி தன்னை மதவாதம், இனவாதம் இல்லாத கட்சியாக அடையாளப்படுத்துவதன் ஊடாக தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை திரட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. எனவே, பொதுத்தேர்தலில் எல்லா இனங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சி என நிரூபிக்க முனைகிறது.
தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை குறிவைக்கும், இந்த கட்சி, அவர்களுக்கு அதிகாரங்களைவழங்குவதற்கு தயாராக இருக்கிறதா என்பதுதான் முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

சனி, 2 நவம்பர், 2024

கனடா அமைச்சர் அமித்ஷா மீது கொலை குற்றச்சாட்டு: கனடா தூதரிடம் கண்டனம் தெரிவித்த இந்தியா

 மாலை மலர்  : புதுடெல்லி கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.
இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை துணை மந்திரி டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார்.

பதுளையில் பேருந்து விபத்து! இரு மாணவர்கள் உயிரிழப்பு 40 பேர் படுகாயம்

 அதிரடி .காம் : பதுளை பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
துன்ஹிந்த – பதுளை வீதியில் நேற்று (1) காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
40 பேர் வைத்தியசாலையில் அனுமதி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் தற்போது நலமுடன் உள்ளதாக அவர் தெரிவித்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பத்து பேரில் சிலர் இன்று பொது வார்டுக்கு மாற்றப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

களவாடப்பட்ட இந்திய மாநிலங்களின் தேசிய மொழிகள்!

 ராதா மனோகர் : கடந்த நூற்றாண்டில் திராவிடம் சாதித்த சாதனைகளில் தலையாயது என்று எதை கூறுவது என்ற தடுமாற்றம் ஏற்படுவது இயற்கை!
அந்த அளவுக்கு பலதுறைகளில் சாதனைகள் அரங்கேறியுள்ளன.
இன்று தென்னிந்திய மாநில திரையுலகம் கோடிக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்பாகவும் மொழிபரம்பலுக்கு உறுதுணையாகவும் விளங்குகிறது.
வடமாநிலங்கள் இந்தி ஆதிக்கத்தை கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவாக தங்கள் மாநில மொழி அடையாளங்களை மட்டுமல்ல அவற்றோடு சேர்ந்த தொழில்களையும் இந்தி பேயிடம் பறிகொடுத்து விட்டு நிற்கின்றன!
மீள்பதிவு  :  
களவாடப்பட்ட இந்திய மாநிலங்களின்  தேசிய மொழிகள்!
வடஇந்திய மாநில மொழிகள் மீது நடத்தப்பட்ட பாரிய மொழிச்சுத்திகரிப்பு!   
மீள் பதிவு ராஜஸ்தான் குஜராத் மகாராஷ்டிரம் பஞ்சாப் வங்காளம் ஒடிஷா மேலும் பல மொழி பேசும் மாநில மொழி திரைப்படங்கள் பாடல்கள் பெரும்பாலும் அழிந்தே விட்டன.
தமிழ்நாடு முன்னெடுத்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள திரைப்படங்களும் பாடல்களும் இன்றும் உயிரோடு உள்ளன.

ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல்” : இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு!

 கலைஞர் செய்திகள் -Lenin :  ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பிரதமர் மோடியின் பேச்சுக்கு இந்தியா கூட்டணி தலைவைர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.
இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்.

வெள்ளி, 1 நவம்பர், 2024

Mr and Mrs Iyyar - அதிர்ச்சி வெள்ளத்தில் அள்ளுப்பட்டு கரை ஒதுங்கிய இரு மீன்கள்!

ராதா மனோகர்  Mr. and Mrs. Iyer வெளியான தேதி 19 July 2002!
இதை ஆஸ்கார் தெரிவுக்கு அனுப்பி இருக்கவேண்டும் என்று புகழ் பெற்ற இயக்குனர் கோவிந்த் நிஹலானி (Govind Nihalani wondered if Mr. and Mrs. Iyer could have been sent to the Oscars instead of the regular song-and-dance entries. Eventually, Film Federation of India, the apex organisation that sends the nation's official entries to the Oscars, did not find any film worth sending for the 76th Academy Awards)  இந்த படம் பற்றி கூறியிருக்கிறார்!
பிரபல டைம் பத்திரிகை உட்பட பல பத்திரிகைகளும் உலக திரைப்பட விமர்சகர்களும் மிஸ்டர் அன்ட் மிஸிஸ் அய்யர் பற்றி மிகவும் உயர்வாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஒன்றிய அரசின் ஆஸ்கார் தெரிவு குழுவின் பார்வையில் இது ஆஸ்கர் தெரிவுக்கு உரிய படமாக தெரியவில்லை
இது ஆங்கில படமாக இருப்பதை விட அதிகமாக தமிழ் வங்காளம் போன்ற மொழிகளை உள்ளடக்கிய பல் மொழித்திரைப்படமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவது உண்மைதான்.

வியாழன், 31 அக்டோபர், 2024

இந்தியா - கனடா - அமித்ஷா - நிஜ்ஜார் கொலை! கனடா அமைச்சர் தகவல்

 BBC News தமிழ் :   நிஜ்ஜார் கொலை வழக்கு: அமெரிக்க பத்திரிகையிடம் இந்திய அமைச்சர் அமித்ஷா பெயரை கூறியதாக கனடா அமைச்சர் ஒப்புதல்
கனடா குடிமக்களை அச்சுறுத்தும் அல்லது கொல்லும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் ஒப்புதல் அளித்ததாக அந்நாட்டின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவிடம் கனடாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை (அக்டோபர் 29) அன்று கனடாவில் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவின் விசாரணை ஒன்று நடந்தது.

புதன், 30 அக்டோபர், 2024

விஜய்யை வீழ்த்த திண்டுக்கல்லில் ரகசிய பூஜை நடத்திய சீமான்!ஆதாரத்துடன் அம்பலம்!

துரை வைகோ MP : ”விஜய்யின் சேவை... கண்டிப்பாக தேவை”

 மின்னம்பலம் - christopher :  மதச்சார்பின்மை, எல்லோருக்கும் எல்லாம், சமூக நீதி என நல்ல விஷயங்களை தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் அழுத்தமாக பேசியிருப்பதாக துரை வைகோ எம்.பி இன்று (அக்டோபர் 29) பாராட்டு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27ஆம் தேதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதில் கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்கள் குறித்த விஜய்யின் பேச்சு தற்போது தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நடிகர் விஜய் 15 கோடி கணக்கில் வராத பணம் IT ரெயிடுல கையும் களவுமா மாட்டிக்கிட்டார்

May be an image of text

Vimalaadhithan Mani :  IT ரெயிடுல கையும் களவுமா மாட்டிக்கிட்ட பின்னாடிதான் விஜய் 15 கோடி கணக்குல வராத பணம் வாங்கினதை ஒத்துக்கிட்டாரு. அது அரசு ஆவணத்துல தெள்ளத் தெளிவா இருக்கு.
வேறு வழியில்லாமல் அந்த 15 கோடி ரூபாய் பணத்துக்காக வருமான வரியை செலுத்தினார். இருந்தும், வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராதம்  காலதாமதாக விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.

செவ்வாய், 29 அக்டோபர், 2024

கேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து; 8 பேர் சீரியஸ்; 150 பேர் காயம்

 தினமலர் : கேரளாவில், காசர்கோடில் நீலேஸ்வரம் அருகே வீரர்காவு கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.
திருவிழாவில் வாணவேடிக்கை களியாட்டம் நிகழ்ச்சியின் போது, ஏராளமானோர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.
அப்போது பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
திருவிழாவில் கூடியிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் தீயில் சிக்கி கொண்டனர். 150 பேர் பலத்த காயமுற்றனர்.
பலத்த காயம் அடைந்த, 8 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கனடா வால்மார்ட் பேக்கரியில் எரிந்த நிலையில் இந்திய சீக்கிய பெண்

 தினமணி : கனடாவில் பணிபுரிந்து வந்த இந்திய சீக்கிய பெண் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான சீக்கிய பெண் ஒருவர், கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியின் பேக்கரியில் இருந்த அடுப்பிலிருந்து சடலமாக சனிக்கிழமை (அக். 19) இரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறியுமாறு வலியுறுத்தி, மரிட்டைம் சீக்கிய சமூக அமைப்பினர் உள்பட பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கனடா Tesla EV கார் தீப்பிடித்து எரிந்து 4 இந்தியர்கள் உயிரிழப்பு

 மாலைமலர் : கனடாவில் நடத்த கார் விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரன்டோ நகரில் கடந்த வியாழக்கிழமை அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி பின்னர் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்த நிலையில் காரில் இருந்த 4 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒரு பெண்ணை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

திங்கள், 28 அக்டோபர், 2024

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 75 படுக்கைகளுடன் தீக்காய சிறப்பு பிரிவு

 மாலைமலர் : சென்னை தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விபத்துக்களில் தீக்காயம் ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளித்து பாதுகாக்க சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீயினால் ஏற்படும் விபத்து மற்றும் அதன் பின் விளைவுகளுக்கு சிகிச்சை அளிக்க தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவு 1981-ம் ஆண்டு 10 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது.