ஞாயிறு, 20 ஜூன், 2021

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் கைது! பாலியல் புகார்...

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் கைது!
May be an image of 1 person and text that says 'BREAKING NEWS SUN NES NEWS முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது! நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது! ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் விசாரணை என தகவல்! ÛSNAIL SNNEWSTAMIL SUNNEWS sunnewslive. BREAKING 20JUN2021'

நக்கீரன் செய்திப்பிரிவு துணை நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம்  செய்துகொள்வதாக ஏமாற்றியது, பாலியல் வன்கொடுமை, கட்டாய கருக்கலைப்பு மற்றும் மிரட்டல் விடுத்தது தொடர்பாக துணை நடிகை  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது  போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக மணிகண்டனை தேடி வந்தனர். முன்னதாக மணிகண்டன் தலைமறைவான நிலையில் அவரது உதவியாளர்களும் நேற்று தலைமறைவாகினர். இந்த வழக்கில் மணிகண்டன் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது...

நிதியமைச்சர் பிடிஆரின் அதிகாரிகள் . .... கடந்த 10 வருஷமா கூனி குறுகி வேலை பார்த்தோம்.

May be an image of 1 person and standing

Ganapathy Sundaram : நிதியமைச்சர் பிடிஆரின் செயல்பாடுகள் குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்த போது, பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதுகுறித்து  பேசிய அதிகாரி ஒருவர், “பழைய ஃபைல்ஸ நோண்டி எடுத்து ஊழலை தட்டி எடுக்குறாரு. முதல்ல நலத்திட்ட உதவிகளுக்கு ஒதுக்கிய தொகையை எடுக்க சொல்லியிருக்காரு. சின்ன சின்ன விஷயங்களை ஓரங்கட்டி விட்டு பெரிய சமாச்சாரங்களை எடுத்துட்டு வர்றாரு” என்றார்.
அமைச்சர் பிடிஆர் ரெம்போவே ஸ்ட்ரிக்டாவும் அதே சமயம் வெளிப்படையாவும் பேசுறாரு என்று தெரிவிக்கும் அந்த அதிகாரி, “கடந்த 10 வருஷமா கூனி குறுகி வேலை பார்த்தோம்.
சில விஷயங்கள் எங்களுக்கே உறுத்தலா இருக்கும். ஆனாலும், அமைச்சர் சொல்லிட்டாரே என்று செய்து வந்தோம். இப்போ எங்களுக்கு கொஞ்சம் மன நிறைவா இருக்கு. உண்மைய சொல்லனும்ன்னா கடந்த ஒரு மாதமா வந்த டெண்டர்ல ஒரு ரூபாய் கூட யாரும் பார்க்கல.

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து; பிரதமர் ஆலோசனை: உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு

hindutamil.in : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாகவும் அங்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் வரும் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதில் கலந்து கொள்வது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகமூபா முப்தி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முன்னதாக நேற்று ஜம்மு காஷ்மீருக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இதில், துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழுபேருக்கும் நீண்ட கால விடுப்பு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்!

May be an image of 7 people and text that says 'முருகன் பேரறிவாளன் சாந்தன் நளினி ரவிச்சந்திரன் ராபர்ட் பயாஸ் ஜெயக்குமார்'

Babu Tvl  : டெல்லி .எழுவர் விடுதலையில் இறங்கி வந்தது ஒன்றிய உள்துறை அமைச்சகம்
எழுவருக்கும் முதற்கட்டமாக நீண்டகால பரோல் வழங்க விரும்பிய தமிழக அரசின் விருப்பத்திற்கு ஒப்புதல் தந்துள்ளது..
எழுவரில் மூவர் இந்தியர் என்பதால் அவரவர் வீடுகளில் தங்கவும்.. எஞ்சிய நான்கு இலங்கை குடியுரிமை வாசிகளை  தமிழக அரசு வேண்டுகோளின் படி அகதிகளாய் கணக்கிட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் தங்கவைக்க முடிவு செய்துள்ளதற்கும்  ஒப்புதல் தந்துள்ளது.
நிரந்தர விடுதலைக்கு குடியரசு தலைவரை வலியுறுத்த உள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிற்கு செய்தி குறிப்பு அனுப்பியுள்ளது..!

சனி, 19 ஜூன், 2021

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்! லண்டனில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கு கொள்கிறார்?

 Hemavandhana - tamil.oneindia.com :  சென்னை: டெல்லி பயணம் முடிந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் லண்டன் போக போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது..
இதற்கு என்ன காரணம்? ஏன் முதல்வர் வெளிநாடு செல்கிறார்? ஆட்சிக்கு வந்த இந்த 2 மாத காலமாகவே திமுக, கொரோனா தடுப்பு விவகாரங்களை தீவிரமாக கையிலெடுத்தது..
மற்றொது புறம், தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் முனைப்பு காட்டி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், டெல்லி பயணம் அமைந்தது.. எந்த ஆட்சியாக இருந்தாலும் பதவியேற்ற ஒரு மாதத்தில் டெல்லி சென்று, பிரதமர், உள்துறை மற்றும் முக்கிய துறைசார்ந்த அமைச்சர்களை சந்தித்து, தங்களது மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை கேட்டு வாங்கி வருவது வழக்கம்.
தொற்று ஆனால், இங்கு தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால், டெல்லி பயணம் தள்ளி போனது.. இப்போது தமிழ்நாட்டுக்கு தேவையானவைகளை எடுத்து சொல்லி, அதற்கான கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் தந்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. ஸ்டாலின் டெல்லி சென்றதில் இருந்து, பிரதமர் மோடி ஸ்டாலினுக்கு அளித்த வரவேற்பும், முதல்வருக்கு வழங்கிய பாதுகாப்பும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

ஆகமம் சாஸ்திரம் வேதம் எல்லாம் எங்கே போயின? திருட்டு சாமியார்களுக்கு பூஜை புனஸ்காரம் ...

May be an image of 1 person and standing

Swaminathan V Vaithilingam  :   எதற்கெடுத்தாலும் எல்லாம் ஆகம விதிகள் படிதான்  நடக்கனும், தர்ம சாஸ்திரத்தை மீறக் கூடாது என்றெல்லாம் புலம்பும் வைதீக பெருமக்கள்,  எந்த சாஸ்த்திரம் படி மனிதனுக்கு ஆராதனை செய்கிறார்கள்.
எந்த மனிதனும்  தெய்வமாக முடியாது.
தெய்வமும் மனித பிறவி எடுக்க முடியாது என்பதே உண்மை.
எவராவது தன்னை தெய்வப் பிறவி என்று சொல்லிக் கொண்டால் அவரது நோக்கம் மக்களை ஏமாற்றுவது தான் என்பதை உணர்ந்து ஆரம்பத்திலேயே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர் போன்ற ஏமாற்றுக் காரர்களை வளர விட்டு பல காலம் கழித்து நடவடிக்கை எடுப்பதால் எந்த பயனும் இல்லை.
பிரேமானந்தா, நித்தியானந்தா, கல்கி சாமியார் போன்றவர்கள் ஏமாற்றி சொத்து குவித்தார்கள் என்று தெரிந்த பிறகும் மக்கள் இவர்களை நம்பி மோசம் போவது வேதனையான செய்தி.
இது போன்ற கயவர்கள் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து மக்களை மாயையிலிருந்து காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை ஆகும்

சிறையில் நளினி எழுதிய ... அந்த ஏழுபேர் பற்றிய முகநூல் லீக்ஸ்

May be an image of 1 person, flower and text

நெற்றிக்கண் மனோஹரன் : சிறையில் நளினி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார் என ஏக அலப்பறைகள்,  அவள் எழுதியதெல்லாம் உண்மையாம்
அதில் முருகன் வெளிநாடு செல்ல இந்தியா வந்ததாகவும், சிவராசனை ஒரு ஏஜன்ட் என்ற முறையில் சந்தித்ததாகவும், இன்னும் ஏராளமான பொய்மூட்டைகளை அவிழ்த்திருக்கின்றார்
இன்னொரு இடத்தில் பேரரிவாளனை காப்பாற்ற இவர் சொல்லியிருக்கும் ஒரு பொய், இவரது புத்தகத்தை அப்படியே தூக்கி தூர எறிய வைக்கின்றது
அதாவது பேரரிவாளனும் புகைப்பட கலைஞனாம், அவனும் ஹரிபாபு போலவே குற்றமில்லாதவனாம், இதில்தான் வசமாக சிக்குகின்றார் நளினி
பேரரிவாளன் சிறுவயது முதல் புலி தொடர்பு உள்ளவர் என்பதும், அவர் புலிகளுடன் நேரடியாக பழகியவர் என்பதும் ரகசியம் அல்ல, நிரூபிக்கபட்ட விஷயம்.
பத்மநாபா கொலைக்கு சிவராசன் தமிழகம் வரும்போதும் இதே பேரரிவாளன் உதவியிருக்கின்றார், அதன் பின்புதான் சிவராசனுக்கு பைக் வாங்க உதவுதல், வயர்லெஸ் இயக்க கார் பேட்டரி வாங்க உதவுதல் என அவரின் வலது கரமாகவே மாறி இருந்தார்.

இந்த விஷயத்திலுமா.. ஆபாச மதன் செய்த காரியத்தை பார்த்தீங்களா.. மிரண்டு போன போலீசார்

 Hemavandhana -  tamil.oneindia.com :  சென்னை: சென்னை கொண்டுவரப்பட்ட பப்ஜி மதனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதில், பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைனில் ஆபாசமாகப் பேசி பேசியே கோடி கோடியாக சம்பாதித்துள்ளார் மதன்..
தன்னை எல்லாம் போலீசாரால் பிடிக்கவே முடியாது என்று கெத்து காட்டி கொண்டிருந்தார்.. கடைசியில் மதனை சிக்க வைத்ததே அவர் அப்பாதான்.
அவர் கொடுத்த தகவலின்படிதான், தர்மபுரி ஹோட்டலில் பதுங்கி இருந்தவரை கொத்தாக அள்ளி தூக்க வந்தனர் நம் போலீசார்.
இவரிடம் இரவெல்லாம் விடிய விடிய விசாரணை நடந்தது.. அப்போது, போலீசாரிடம் மதன் அளித்த பல்வேறு விஷயங்கள் தொடர்பாக வாக்குமூலம் தந்துள்ளார்.. அந்த வாக்குமூலங்கள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.. மதன் தினமும் 20 மணி நேரம் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் நேரம்.. இவர் ஆன்லைனில் இருக்க இருக்க, பணம் கொட்டி கொண்டே இருக்குமாம்..

இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 4,000 நிவாரணம்!'

nakkeeran : தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 4,000 நிவாரணம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (19/06/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு நிவாரணத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக ஐந்து பேருக்கு நிவாரணம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பொது மற்றும் மறுவாழ்வுத்துறைச் செயலாளர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.< இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் மூலம் 13,553 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ரூபாய் 5.42 கோடியை ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.

மீண்டும் சாத்தான்குளம் போலீஸ் கொலை ... மார்ட்டின் கொலை .. வீடியோ

 News18 Tamil :  சாத்தான்குளம் போலீசார் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மார்ட்டின் என்பவர் உயிரோடு இருக்கும் போது வெளியிட்ட வீடியோ தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான மார்டின். வேன் ஓட்டுநரான இவர், ஃபைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மீரான் மைதீன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 10ம் தேதி அன்று இரவு மார்ட்டின் தனது சகோதரரான மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தின் சாத்தான்குளம் பள்ளிவாசல் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாபு சுல்தான், மைதீன் மீரான், புகாரி உட்பட 10க்கும் மேற்பட்டோர் மார்ட்டினை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்தனர்.

மேகதாட்டு அணை: கர்நாடக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

மேகதாட்டு அணை: கர்நாடக அரசுக்கு முதல்வர் கண்டனம்!

minnambalam : மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காகக் கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது, "டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பை அதிகரிப்பதே இந்த அரசின் இலக்கு. வழக்கம்போல் ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதனிடையே கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணைகட்ட முயற்சி செய்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு  விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இதனால் அணை கட்டுவதற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பண்டிதர் அயோத்தி தாஸரின் ஒரு பைசாத் தமிழன் இதழ் தொடங்கி 114 ஆம் ஆண்டு நிறைவு! 19.06.1907

No photo description available.

இலக்கியன் சூனாம்பேடு  : பண்டிதர் அயோத்தி தாஸரின் ஒரு பைசாத் தமிழன் இதழ் தொடங்கி 114 ஆம் ஆண்டு நிறைவு.
இன்றைக்கிருந்து 114 ஆண்டுகளுக்கு முன் சரியாக 19.06.1907 ஆம் நாளில் பண்டிதர் அயோத்திதாசரால் ஒரு பைசாத் தமிழன் என்ற பெயரில் இதழொன்று தொடங்கப்பட்டது.
இன்றைக்கு போல் கிடையாது. அன்றைக்கு இதழ்களைத் தொடங்குவதும் நடத்துவதும் இயக்கம் நடத்துவதற்கு ஒப்பானதாகும்.
எந்த ஒரு சமூக நடவடிக்கையின் தொடக்கமாகவும் பிரதான பணியாகவும் இதழ் நடத்துவதாகவே இருந்தன. அயோத்திதாசர் தமிழன் ஏடு மூலம் இயக்கமாக செயல்பட்டார்.
19-ம் நூற்றாண்டின் இறுதி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று நவீனத்தின் இன்றியமையாத காலக்கட்டத்தில் இவ்விதழ் வெளியானது.
பாரம்பரிய மதிப்பீடுகளை கொண்டாழுகிய நம் சமூகத்தில் காலனியத்தின் வழி அறிமுகமான புதிய விசயங்களை ஒட்டி நடந்த விவாதங்கள் புரிதல்கள் நிலை பெறல்கள் இதழ்கள் வழியாகவே நடந்தன. எனவே தான் அக்கால இதழ்கள் சமூக வரலாற்று ஆவணங்களாக இருக்கின்றன. தமிழன் ஏடு அத்தகையவற்றுள் முதன்மையானது.

கந்துவட்டி- முகம்மதலி தற்கொலை! மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் மற்றும் நால்வர் கைது

May be an image of 1 person and standing

ஜெ. அப்துர் ரஹ்மான்  : மதுரை: `யாரையும் டார்ச்சர் பண்ணாதீங்க!’ - கந்துவட்டிக் கொடுமையைச் சொல்லும் மரண வாக்குமூலம்.  
மரண வாக்குமூலம் என்று கூறி வீடியோவில் பேசும்போதே முகமது அலி கதறி அழுகிறார். பார்ப்பவர்களுக்கு நெஞ்சம் பதறுகிறது.
‘‘நான் கடனில் சிக்கிட்டேன். வக்கீல் செல்வகுமார்கிட்ட அஞ்சு லட்சம் கடன் வாங்கி ஆறு லட்சம் வரை வட்டி கட்டியிருக்கேன். ஆனா, இன்னும் அதிக வட்டி கேட்டு டார்ச்சர் செய்றாங்க. ரொம்ப அசிங்கமா பேசுறாங்க. வெத்துப் பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்திருக்கேன். என்னோட, என் மனைவியோட செக் லீஃப் கொடுத்திருக்கேன். அவங்க ரொம்ப மோசமா நடந்துகிறாங்க. நான் சாகறதுக்கு அவங்களே காரணம்.

வெள்ளி, 18 ஜூன், 2021

இரு ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் (கறுப்புப்?) பணம் 6,625 கோடியில் இருந்து 20 ஆயிரத்து, 706 கோடி ரூபாவாக பாய்ச்சல்

 தினமலர் :புதுடில்லி : கடந்த இரு ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் பன்மடங்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சொர்க்கமாக திகழ்கின்றன. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். கடந்த ஆண்டிற்கான நிதி சார்ந்த வருடாந்திர தரவுகளை, சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. அதில், இந்த வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள நிதிகள் குறித்த தகவல்களும் கிடைத்து உள்ளன.

திமுக ஐ டி விங் பதவி பிடிஆரிடம் இருந்து கைமாறுகிறது? என்ன நடக்கிறது மேல் மட்டத்தில்?

marihangaraj Jeyapal - Samayam TamilUpdated: : பழனிவேல் தியாகராஜன் பதவிக்கு சிக்கல் இருப்பதாக கட்சி வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரவலைக் வேகமாக கட்டுக்குள் கொண்டு வந்தது, நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தியது ஆகியவை அரசுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அத்துடன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.
இவை எல்லாவற்றையும்விட ஸ்டாலின் சரியான ஆள்களை சரியான இடத்தில் நியமித்து வேலை வாங்குகிறார் என்ற பேச்சை பரவலாக கேட்க முடிகிறது. அந்த வகையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பழனிவேல் தியாகராஜன் பம்பரமாக சுழன்று வருகிறார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற வங்கிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிடிஆரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறிவருவதாக கோட்டையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் லைம் லைட்டுக்கு வந்த கனிமொழி..! மு.க.ஸ்டாலின் – மோடி சந்திப்பு..

asianetnews.com : மு.க.ஸ்டாலின் – மோடி சந்திப்பு..! டெல்லியில் லைம் லைட்டுக்கு வந்த கனிமொழி..!

ஸ்டாலின் பொன்னாடை போத்த அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட மோடி, எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு மிகவும் நலம் என்று ஸ்டாலின் கூற, ஹவ் இஸ் யுவர் சிஸ்டர் என்று அடுத்த கேள்வியை கேட்க, ஸ்டாலின் கனிமொழி இஸ் பைன் என்று பதில் அளித்ததாக கூறுகிறார்கள்....முதலமைச்சராக பதவி ஏற்று சுமார் நாற்பது நாட்களுக்கு பிறகு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார் மு.க.ஸ்டாலின். பொதுவாக முதலமைச்சராக பதவி ஏற்பவர்கள் முதல் வேலையாக டெல்லி சென்று பிரதமராக இருப்பவர்களை சந்திப்பது தான் மரபு. ஆனால் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற போது தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக வீசிக் கொண்டிருந்தது. இதனால் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்க முடியவில்லை. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

திரு கக்கன்! இந்தி எதிர்ப்பு போராட்டம்.. துப்பாக்கி சூட்டுக்கு 700 மாணவர்கள் வரை .. (June 18, 1908)

Yasir RM : கக்கனின் மறுபக்கமும், திராவிட இயக்க தலைவர்களின் மாண்பும்:  திராவிட ஆட்சியாளர்களை பிடிக்காதவர்கள், கக்கனை போன்று எளிமையான எம்.எல்.ஏ வர வேண்டும் என்று வாதம் வைப்பதுண்டு.

கக்கன் உண்மையில் எளிமையானவர் தான். ஆனால் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கலைக்க மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, 70 மாணவர்கள் இறந்ததற்கு காரணமும் அவர் தான். அவர் தான் அப்போதைய தமிழக உள்துறை அமைச்சர்.
1963 ஆம் ஆண்டு அலுவல் மொழி சட்டம் நேரு கொண்டு வந்த போது, பெ.சீனிவாசன், கா.காளிமுத்து, நா.காமராசன், பா.செயபிரகாசம், ரவிசந்திரன், திருப்பூர்.சு.துரைசாமி, சேடப்பட்டி முத்தையா, துரைமுருகன், கே.ராஜா முஹம்மது, நாவளவன், எம்.நடராசன், எல்.கணேசன், உலோ.செந்தமிழ்கோதை, சி.ப.வேந்தன் உள்ளிட்ட பதினெட்டு மாணவ இயக்கங்களின் தலைவர்கள் ஒன்று கூடி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார்கள். ஒரு புறம் அண்ணா தலைமையில் 3000 பேர் கைதானார்கள்.
1965 ஜனவரி 25 ஆம் தேதி, மதுரை திலகர் திடலை நோக்கி மாணவர் பேரணி நடைபெற்றது. வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரஸ் அலுவலகத்திற்கு அருகில் பேரணி சென்ற போது, காங்கிரஸ் காரர்கள் மாணவர்களிடம் மோதலில் ஈடுபட்டனர். வன்முறை வெடித்தது.

சொந்த கட்சிக்காரரை போட்டுத்தள்ள பணம் கொடுத்த பா.ம.க நிர்வாகி: 4 பேரை கைது செய்த போலிஸ்!

சொந்த கட்சிக்காரரை போட்டுத்தள்ள பணம் கொடுத்த பா.ம.க நிர்வாகி: 4 பேரை கைது செய்த போலிஸ்!

கலைஞர் செய்திகள் :பா.ம.கவில் முக்கிய நிர்வாகியாக வளம் வந்தவர் காடுவெட்டி குரு. இவர் மறைந்த பிறகு பா.ம.கவுக்குள் பல்வேறு குழப்பங்கள் வெடித்து வருகிறது. மேலும் அண்மை காலமாக கட்சி நிர்வாகிகள் ஒருவர்மீத ஒருவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
சட்டமன்ற தேர்தலின் போதுகூட, பா.ம.கவில் நடிக்கறவங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நான் காட்சியிலிருந்து விலகுறேன் என வைத்தி தெரிவித்திருந்தார். இப்படியான செயல்கள் பா.ம.க தலைவர் ராமதாஸ் மீது முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதைக் காட்டுகிறது.
இதையடுத்து பா.ம.க தலைவர் ராமதாஸ், "அண்மைக்காலமாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு இயக்கங்களின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடம் போக்கு அதிகரித்துள்ளது. இதை அனுமதிக்க முடியாது. இத்தகைய ஒழுங்கீன செயல்களில் ஈடுபவடுவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்" என எச்சரிகை விடுத்திருந்தார். இவரின் இந்த அறிக்கை கட்சிக்குள் குழப்பம் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது.

சிவசங்கர் பாபாவுக்கு திடீர் மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி..

 Shyamsundar  -  tamil.oneindia.com :  சென்னை: செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில்தான் சிவசங்கர் பாபா தேடப்பட்டு வந்தார். அங்கு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக இவர் அத்துமீறியதாக புகார் வைக்கப்பட்டது.
இவர் டெல்லிக்கு தப்பி ஓடி ஒளிந்திருந்த நிலையில் போக்சோ சட்டத்தில் தமிழ்நாடு சிபிசிஐடி நேற்று அவரை கைது செய்தது.
இவர் மாணவிகளிடம் தவறாக பேசிய வீடியோ மற்றும் ஆடியோவும் வைரலானது. பல்வேறு மாணவிகளிடம் இவர் தவறாக பேசிய ஆதாரங்கள் வெளியானது. டேராடூனில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை முடிந்த பின் டெல்லிக்கு தப்பி ஓடினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோனியா காந்தி & ராகுல் காந்தியை சந்தித்தார்!

சோனியா- ஸ்டாலின் சந்திப்பு!

 minnambalam :திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று (ஜூன் 18) காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும், ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று முதல் முறையாக நேற்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அவரிடம் தமிழ்நாட்டுக்கான 25 கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனுவை அளித்தார். சுமார் 25நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்புக்குப் பின் தமிழ்நாடு இல்லம் திரும்பினார் ஸ்டாலின்.

நேற்று இரவு டெல்லியில் தங்கிய ஸ்டாலின் இன்று (ஜூன் 18) காலை ஜன்பத் சாலையில் அமைந்திருக்கும் சோனியாகாந்தியின் இல்லத்துக்குச் சென்றார். ஸ்டாலினோடு அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருந்தார்.

பப்ஜி மதனை கைது செய்தது போலீஸ்

maalaiamalar : பப்ஜி மதன் மீதான புகார்கள் தொடர்பாக சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதன் என்பவர் தனது யூ டியூப் சேனல்களில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரத்தில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் இளம்பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளை மதன் பேசுவதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்தன.>இதையடுத்து சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Robert Ashe கலெக்டர் ஆஷ்துரை! பார்ப்பன ஜாதி வெறியன் வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்ட நாள் - – 17 June 1911

Robert William d'Escourt Ashe I.C.S. (23 November 1872 – 17 June 1911) was the acting Collector and District magistrate of Tirunelveli district in Tamil Nadu 

thurukal.blogspot.com :  ஆஷ் துரை vs  வாஞ்சிநாதன்:
நவம்பர் 23, 1872ல் தந்தை ஐசக் ஆஷ், தாயார் சாராள் ஆஷ் இருவருக்கும் மகனாக அயர்லாந்தின் ஸ்பிராக்பர்ன் என்ற இடத்தில் பிறந்தவர் ராபர்ட் வில்லியம் டி' எஸ்கோர் ஆஷ்.
ஆஷின் தந்தை ஒரு மருத்துவர். டன்டிரன் என்ற ஊரின் மன நல விடுதியில் மருத்துவக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். அந்த விடுதியின் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி தாக்கியதில் இறந்துபோனார்.
ஆஷ், டப்ளின் உயர்நிலைப் பள்ளியில் படித்து தேர்கிறார். 1892ல் டப்ளின் டிரினிட்டி கல்லூரியில் சேர்கிறார். பின்னர் கல்லூரி வாழ்க்கையும் ஆரம்பமாகிறது. கவிதை எழுதும் பழக்கமும் கொண்டவர்.  பின்னர் ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று 1895ல் பணிக்காக இந்தியா வருகிறார்.
முதல் பணி, இன்றைய ஒரிசா மாநிலத்தில், அன்றைய கஞ்சம் மாவட்டத்தில். பின்னர் சென்னையில் சிறப்பு அலுவலராக பணிமாற்றம், வட ஆற்காட்டில் துணை ஆட்சியராக பணி என்று பல இடங்களில் சுற்றி கடைசியாக 1910  திருநெல்வேலியின் பொறுப்பு ஆட்சியராக பணியில், தென்னிந்தியாவின் கடைகோடிக்கே வந்து சேர்கிறார் ஆஷ்.

புலியா, பூதமா? திமுக - நாதக குழு மோதல்!.. அரக்கர்கள் ஆர்எஸ்எஸ் கைக்கூலிகளா ?

abas  Karthikeyan Fastura  :   அரக்கர்கள் ஆர்எஸ்எஸ் கைக்கூலிகளா ?
நிச்சயமாக இல்லை. அவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் சமூகநீதியால் பலன் அடைந்தவர்கள். தான் போராடி பெற்றவைகளை அடுத்த தலைமுறையினர் எளிதாக கிடைக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுகிறார்கள்.
அவர்களிடம் இரண்டு பிரச்சினைகள் உள்ளன
1. புதிய நடுத்தர வர்க்க சிந்தனை: தன்னுடைய சூழலிலிருந்து சமூகத்தை பார்ப்பது, தன்னுடைய நலனை முதலில் வைத்து சமூகத்திற்கான தீர்வை முன்வைப்பது இந்த சிந்தனை முறையின் குணமாக இருக்கிறது. தோழர் மனோஜ் ஒரு பதிவில் குறிப்பிட்டது போல் சோறு சோறு சுகம் சுகம் பணம் பணம் இதைத்தாண்டி உரிமை, போராட்டம், விடுதலையுணர்வு போன்றவற்றை சிந்திக்கும் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.
2. இவர்கள் அடைந்த பலன்கள் அனைத்திற்கும் திமுக (கலைஞர்) மட்டுமே காரணம் என்று நம்புகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் பெரியார் இளைஞர்கள் மத்தியில் ட்ரண்ட் ஆகாமல் போயிருந்தால் இவர்களுக்கு பெரியார் கூட தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஆணி தான். பெரியாரை நடைமுறைக்கு ஒத்துவராத ஆள் என்று பர்னிச்சர் உடைக்க கிளம்பி இருப்பார்கள்.

கடலுக்குள் கொட்டப்படும் பழைய பேருந்துகள் சுற்று சூழலுக்கும் மீன் பெருக்கத்துக்கு ஏற்றதா?

May be an image of outdoors
கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?
-ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை)
உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோடுகின்ற வாகனங்கள், ரயில் பெட்டிகள், கப்பல்கள், யுத்த தாங்கிகள், கடற் பகுதிக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்பட்டு, செயற்கையாக முருகைக் கற்பாறைகள் வளர்வதற்காகவும், மீன்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்காகவும் அமிழ்த்தப்படுகின்றன.
2007ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை, நியுயோர்க்கில் பாவித்து ஒதுக்கப்பட்ட2500 க்கும் மேற்பட்ட நிலக்கீழ் ரயில்பெட்டிகள், அத்திலாந்திக் சமுத்திரப் பகுதிகளில் அமிழ்த்தப்பட்டிருக்கின்றன. இது உலகம் முழுவதும் நெடுங்காலமாக செய்யப்படும் ஒரு நடைமுறையாகும். இதன் மூலம் மீன்கள், சிலந்திரேற்றாக்கள், முருகைக் கற்பாறைகள், அதனை நம்பிய உயிரினங்கள், மற்றும் கடற்தாவரங்கள் வளர்ந்து, நிலைத்துநிற்கக்கூடிய ஒரு சூழற்றொகுதியை உருவாக்குகின்றன.

வியாழன், 17 ஜூன், 2021

ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க.வினருக்குமான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. (சமூக வலைத்தளங்களில்)

Suguna Diwakar - soodram.con :  சமூக வலைத்தளங்களில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க.வினருக்குமான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியினரும் சில ஈழத்தமிழர்களும் கலைஞரையும் தி.மு.க.வையும் தனிப்பட்ட முறையில் வசைபாடி பின் பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகளையும் வசைபாடும் நிலைக்குச் சென்றதையும்
அதற்கு எதிர்வினையாகத் தி.மு.க.வினரில் ஒருபிரிவினர் பிரபாகரனையும் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் விமர்சனம் என்பதைத் தாண்டி தனிநபர் இழிவுபடுத்துதல் என்ற எல்லைக்குச் செல்வதையும் காணமுடிகிறது.
ஈழப்பிரச்னைக்கும் தமிழக அரசியலுக்குமான உறவு என்பதற்கு நீண்டகால வரலாறு உண்டு.
குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கும் திராவிட அரசியலுக்குமான தொடர்பு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கால உறவு. 1932ல் இலங்கைக்குச் சென்ற பெரியார் அங்குள்ள தமிழர்களிடம் ஆற்றிய உரை, ‘ஈ. வெ. இராமசாமியின் இலங்கை உபந்யாசம்’ என்ற பெயரில் நூலாக வெளியானது. பிறகு ‘தந்தை பெரியாரின் இலங்கைப்பேருரை’ என்ற பெயரில் பல பதிப்புகள் கண்டது அந்த நூல். கடவுள், சாதி, மதத்தைப் போலவே அந்த உரையில் தேசியம் குறித்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருப்பார் பெரியார். ஒற்றை அடையாளத்தின்கீழ் நிறுவப்படும் தேசியம் குறித்து நாம் இப்போது பேசுகிறோம். ஆனால் இதை 30களில் பேசி நம்மை ஆச்சர்யப்படுத்தியிருப்பார் பெரியார்.