மின்னம்பலம் :
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 20,000 பேரைக் கொல்ல சீனா, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளி வந்தன.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இதுவரை, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொடர்பான பல்வேறு உறுதி செய்யப்படாத தகவல்களும் பரவி வருகின்றன.
இதில், ”கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20,000 பேரை கருணைக் கொலை செய்யச் சீன நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் தினசரி 20 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும், சுகாதார ஊழியர்களைக் காப்பாற்றும் வகையிலும், 20,000 பேரைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியது. இதனை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 7ஆம் தேதியான இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கும்” என்ற தகவல் சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி வந்தது. இது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இதுவரை, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொடர்பான பல்வேறு உறுதி செய்யப்படாத தகவல்களும் பரவி வருகின்றன.
இதில், ”கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20,000 பேரை கருணைக் கொலை செய்யச் சீன நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் தினசரி 20 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும், சுகாதார ஊழியர்களைக் காப்பாற்றும் வகையிலும், 20,000 பேரைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியது. இதனை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 7ஆம் தேதியான இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கும்” என்ற தகவல் சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி வந்தது. இது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.





















