Farm to Table :
நாம் முப்பத்திரண்டு(32) தடவை நன்கு மென்று சாப்பிடுகிறோமா?மனசு நிறைந்து சாப்பிடுவதற்கு பதிலாக வயிறு நிறைய கொட்டிக்
கொள்வதனாலேயே உடற்பருமன் அதிகரிப்பதில் இருந்து தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாக்கப்படுகிறோம். பல்வேறுபட்ட உயிர்கொல்லி நோய்களுக்கு பயந்து Superfoodகளை தேடி அலைவதுமல்லாமல் தேவையில்லாமல் அதிக பணத்தையும் விரயம் செய்கிறோம். ஆனால் ஆரோக்கிய உணவு முறை என்பது அவற்றை நாம் எப்படி தயார் செய்கிறோம் மற்றும் எப்படி உண்கின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது.
உணர்ச்சி வயத்தால் அதிகம் சாப்பிடுதல் (emotional eating):
சலிப்பு, தனிமை, கவலை போன்ற விடயங்களால் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளவர்கள் அதனை போக்க தம்மை அறியாமலே அதிகமாக சாப்பிட்டுக்கொள்வர். இந்த பிரச்சனை குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களிடம் அதிகம். அவர்கள் வீட்டில் இருந்தாலும் சும்மா இருப்பதில்லை. ஆனால் தனிமை, மீண்டும் மீண்டும் ஒன்றையே திரும்பத்திரும்ப ஒவ்வொருநாளும் செய்யவேண்டிய சலிப்பான வாழ்க்கை மற்றும் புதிய விடயங்களை அறிந்து கொள்ள முடியாமல் முடங்கிக் கிடக்கும் சூழல் என்பன பெண்களை பாதிக்கும் விடயங்கள். இதற்காக தனியாக ஒரு பதிவு போடவேண்டிய தேவையுண்டு.




















