திங்கள், 29 ஜூலை, 2019

டெல்லியில் வைகோ: காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது ஏன்?

டிஜிட்டல் திண்ணை: டெல்லியில் வைகோ:  காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது ஏன்?மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது.
“தமிழகத்திலிருந்து ஆறு எம்.பி.க்கள் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் வைகோவை பற்றி மட்டும்தான் கடந்த வாரம் பல செய்திகள் டெல்லியில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன.
திமுக கூட்டணியில் வைகோவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்ற ஒப்பந்தத்துக்கு ஏற்ப, அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் ஜூலை 5 ஆம் தேதி தேச துரோக வழக்கில் வைகோவுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வைகோவின் வேட்பு மனுவுக்கு பாதிப்பில்லை என்ற நிலையிலும், வேறுவகையில் வைகோவின் வேட்பு மனு நிராகரிக்கப்படுமோ என்று யூகங்கள் கிளம்பின. ஆனால் இதில் திடீர் திருப்பமாக, திமுக நான்காவது வேட்பாளரை நிறுத்தி வைகோவின் வேட்பு மனு ஏற்கப்பட்டவுடன் நான்காவது வேட்பாளரான என்.ஆர். இளங்கோவை வாபஸ் பெறச் செய்தது. இவ்வாறு வைகோ ராஜ்யசபாவுக்கு சென்றதே பெரும் பரபரப்பான சம்பவச் சங்கிலிகளுக்கு இடையேதான்.

தனி ஆளா 3 பேரை கொன்னேன்.. குளிச்சுட்டுதான் கிளம்புனேன்.. நான் ஒரு சைக்கோ.. ஷாக் தந்த கார்த்திகேயன்

நான் ஒரு சைக்கோ     tamiloneindia :நெல்லை: "நான் ஒருத்தனே தன்னந்தனியாக 3 கொலைகளையும் செய்தேன்.. கொலை பண்ணிட்டு அங்கேயே குளிச்சிட்டுதான் கிளம்பினேன்.. ஏன்னா நான் ஒரு சைக்கோ" என்கிறார் உமா மகேஸ்வரியை கொலை செய்த குற்றவாளி கார்த்திகேயன்.

வேலைக்கார பெண்
வாக்குமூலம் கொலை நடந்த அன்று சந்தேகப்படும் படியாக ஒரு கார் 2 முறை உமா மகேஸ்வரியின் வீட்டை கடந்து செல்லவும், அந்த கார் யார் என்று விசாரணை நடத்தப்பட்டது.
அது திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகனான கார்த்திகேயனுக்கு சொந்தமான கார் என்று தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் தேடி வந்தநிலையில், அவர் மதுரையில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். உடனடியாக அவர் நெல்லை கொண்டு வரப்பட்டு கமிஷனர் பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அதிகாரிகள், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் 3 பேரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அப்போது போலீசில் கார்த்திகேயன் சொன்னதாவது:

BBC :கர்நாடகா ..எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி


கர்நாடக மாநிலத்தில் வெள்ளிக்கிழமையன்று புதிய முதல்வராக பதவியேற்ற பி.எஸ். எடியூரப்பா அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
பெற்றுள்ளார்.
கர்நாடகாவில் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பா சட்டசபையில் உள்ள 105 பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவையும் பெற்று தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
எடியூரப்பாவின் அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை நாஜிநாமா செய்தார்.
முன்னதாக, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவி விலகல் கடிதத்தை சட்டமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் அளித்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு சிக்கல் எழுந்தது.
அதைத் தொடர்ந்து கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது.

சுயநல அரசியல்வாதிகளுக்கு இது நல்ல பாடம்’ - தகுதிநீக்கம் குறித்து ம.ஜ.த - காங்கிரஸ் கருத்து

எடியூரப்பாசித்தராமையாvikatan - சத்யா கோபாலன் : ’சில நாள்களாக கர்நாடகாவில் நடந்துவரும் சம்பவங்கள் எனக்கு அதிக அழுத்தத்தைத் தருகின்றன. அதனால் நான் மன உலைச்சலில் உள்ளேன்’ என சபாநாயகர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில், காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணியைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ-க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு நடந்துவந்த கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
தற்போது புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள பா.ஜ.க-வின் எடியூரப்பா, இன்று கர்நாடக சட்டமன்றத்தில் தன் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்களில் மூன்று பேரை அம்மாநில சபாநாயகர் ரமேஷ் ஐந்து ஆண்டுகளுக்கு தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பிற எம்.எல்.ஏ-க்களின் முடிவு, இரு தினங்களில் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில், ராஜினாமா செய்த அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக நேற்று அறிவித்தார். சபாநாயகரின் முடிவுக்கு அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தேர்தல் சீட்டுக்கு பணம் வாங்கி மோசடி? நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்

 தேர்தல் சீட்டுக்கு பணம் வாங்கி மோசடி? நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் நியூஸ் 18  :கொலையில் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த சிலரை தேடி வருகின்றனர். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உட்பட மூன்று பேர் கொலை வழக்கில் ஒரு வாரத்திற்கு பிறகு திமுக பெண் பிரமுகரின் மகன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், திமுக நிர்வாகியுமான உமா மகேஷ்வரி அவரது கணவர் முருக சங்கரன், பணிப் பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர்.  தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இலங்கை சென்று விசாரிக்க என்.ஐ.ஏ.,வுக்கு சிறப்பு அதிகாரம்

தினமலர் : புதுடில்லி : என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்புக்கு, சிறப்பு அதிகாரங்கள் வழங்கி, பார்லிமென்டில் சட்ட திருத்தம் நிறை வேற்றப்பட்டுள்ளதால், இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக, அந்த அமைப்பினர், இலங்கை சென்று விசாரணை நடத்த உள்ளனர். இதுவரை, வழக்கு பதிவு செய்ய முடியாமல் இருந்தது. இனிமேல் வழக்கு பதிவு செய்து, தேவைப்பட்டால், இலங்கையில் கைது நடவடிக்கையிலும், என்.ஐ.ஏ., ஈடுபடும். இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில், ஏப்ரல், ௨௧ல், ஒன்பது இடங்களில், பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 250பேர் கொல்லப்பட்டனர்; 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை நடத்தியதாக, என்.டி.ஜே., என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர், ஜவ்ஹான் ஹாசிம் மற்றும் அவரது கூட்டாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேயர் உமா மகேஸ்வரியை .கொலை செய்தது கூலிப்படையே.?! உறுதி செய்த சிசிடிவி..!!!!!

nellai mayor incident cctv footage photos nellai mayor incident cctv footage photos nakkheeran.in - nagendran : நெல்லையின் முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலையில், கொலையாளியை கைது செய்து விசாரித்த நிலையில், அவரின் வாக்குமூலத்தின் படி கூலிப்படையாக செயல்பட்ட இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றது நெல்லைக் காவல்துறை.! கடந்த 23ம் தேதியன்று நெல்லை ரெட்டியாப்பட்டியில் திமுக-வின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் முருகசங்கரன் மற்றும் வேலைக்காரப்பெண் மாரியம்மாள் உட்பட மூவர் உடலெங்கும் கத்தியால் குத்திய நிலையில், சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இந்த கொலை தமிழகத்தையே உலுக்கியது. கொலைக்கான காரணங்களில் பல்வேறு யூகங்கள் நிலவி வந்த நிலையில், வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று தடயமாக சிக்க சைக்கோ கொலையாளி போலீசாரிடம் சிக்கினான் என்பதனையும், அவன் மீது கயத்தாறு மற்றும் பணவடலி சத்திர காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பதனையும் "நக்கீரன்" தெரிவித்திருந்தது. இந்நிலையில் விசாரணையின் முடிவில், " தான் இந்தக் கொலைக்கு சூத்ரதாரி மட்டுமே.!!!

ஞாயிறு, 28 ஜூலை, 2019

தனியார் மயம் ..அல்ல .. பார்ப்பன + பனியா மயம்

Ravishankar Ayyakkannu : இந்தியாவில் இனி கல்வி முதற்கொண்டு எல்லாம் தனியார்மயம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறார்கள்.
யார் இந்தத் தனியார்?
நம்ம ஊர் நாடாரும் பொட்டிக் கடைச் செட்டியாருமா ரயில் விடப் போகிறார்?
Reliance போன்ற பெருநிறுவனங்கள் அல்லவா NEET தேர்வு பயிற்சி நடத்துவது முதற்கொண்டு செங்கோட்டையை வாடகைக்கு எடுப்பது வரையான அனைத்திலும் ஈடுபடுகிறார்கள்?
யார் இந்தப் பெரு நிறுவனங்கள்?
92% உயர் சாதியினர்.
பார்ப்பனர் + பனியா கூட்டணி.
கார்ப்பரேட் நிறுவன உயர் பதவிகளில் உயர் சாதியினர் 92% இருக்கும் போது ஏழை உயர் சாதிகளுக்கு 10% இட ஒதுக்கீடு தாருங்கள் என்று கேட்பது அட்டூழியம் இல்லையா? இந்த நிறுவனங்களே தங்கள் சாதி ஆட்களை வளர்த்து விட முடியாதா?

பாஜக எம் எல் ஏ பாலியல் வன்புணர்வு செய்த பெண் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி ...


Dev JB : உன்னாவ்: பிஜேபியின் தே. ப MLA ஒரு இளம் பெண்ணை (டீன் ஏஜ் பொண்ணு) பாலியல் பலாத்காரம் செய்கிறான்.
அப்பெண் போலீசில் புகார் செய்கிறார். MLAவை பிடிப்பதற்கு பதிலாக அப்பெண்ணின் தகப்பன் கைது செய்ய படுகிறார். பெண், யோகி தே. ப அலுவலகத்தின் முன் தீக்குளிக்கப்போகிறார். சமாதான படுத்தப்பட்டு அனுப்பப்படுகிறார். ஆனால் தகப்பன் படியாததால்,தே. ப MLA ஆட்களால் லாக்அப்பில் அடித்து கொல்லபடுகிறார். அதற்கு சாட்சியாக இருந்த தகப்பனின் நண்பரும் தே. ப MLA ஆட்களால், தே. ப யோகி அரசால் கொல்ல படுகிறார்.
இன்று அப்பெண் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தன் UNCLEஐ பார்க்க ஆன்டி மற்றும் வக்கீலுடன் காரில் போகிறார். அதே தே. ப லாரி அடித்து ஆன்டியும், வக்கீலும் ACCIDENT ஆன இடத்திலேயே சாகிறார்கள். பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்.

பறிபோகும் தமிழ்நாடு .... ஹரீஸ் பட்டேலும் ஸோகன்லாலும் தமிழக அரசியலில் எப்படி?

இது கோவை_மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரோட்டி,,,பாஜகவின் ஹரீஸ்பட்டேல்,,,,மாவட்ட செயற்குழு உறுப்பினர் யார்னு பாத்தீங்கனா நம்ம பஜன்லால் சேட்டோட ஒன்னுவிட்ட ரிலேசன் சோஹன்லால்,,,,
கோவை மாவட்ட இளைஞரணி பொருளாளர் யார்னு பார்த்தீங்கனா குஜராத்தை சேர்ந்த நம்ம
இது ஒன்னும் எதர்ச்சியா நடந்தது இல்ல,,,அப்படியே ஒரு 20 வருசம் பின்னாடி வாங்க,,,
1997கோவை_கலவரம்,,, பெரிய வணிக நிறுவனங்கள் துவங்கி,சிறு கடைகள் வரை அனைத்தும் இஸ்லாமியர் கடைகளும் இந்துத்துவ தீவிரவாதிகளால் வேட்டையாடப்பட்டுச்சு,,,
யாரோ ஓரு டிராபிக் போலீஸை சில இளைஞர்கள் கொன்றதற்கு , எதற்காக எல்லா இஸ்லாமியர்களும் இலக்காக்கபட்டாங்க???
ஏன்னா அந்த ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும்,நம்ம பஜன்லால் சேட்டுகளுக்கும் ஒரே தொழில் தான்,,,வணிகம் செய்வது,,,
ஆக நம்ம பஜன்லால் சேட்டுகளுக்கு கோயம்புத்தூர்குள்ள வணிகம் செய்ய நுழையனும்னா, முதல் தொழில் எதிரிக நம்ம இஸ்லாமியர்கள் தான்,,,
ஆக அந்த இஸ்லாமியர்களின் வணிகத்தை அழிக்க வேண்டிய தேவை நம்ம பஜன்லால் கும்பலுக்கு இருந்தது,,,

எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா?

Kathir RS : கேள்வி: எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? -Jashwant Krishna சென்னை
பதில்: இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன என்பதும், அவைதான் உங்களைப்போன்ற இளைஞர்களை இப்படி கேள்வி கேட்க வைக் கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சரி கவனமாக படியுங்கள்.
கலைஞர் பிறந்தது 1924ல்.
சேலத்தில் செயல்பட்ட ஜுபிடர் துரைப்பட நிறுவனத்தில் கதை வசனம் எழுத்தாளராக வேலைக்கு சேர்ந்தது 1944ல் அதாவது இருபது வயதில். (அவர் முதன் முதலில் சேலத்துக்குதான் சென்றார்.சென்னைக்கு அல்ல)
மூன்றாண்டுகள் உதவி எழுத்தாளராக இருந்தவருக்கு 1947ல் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதல் அங்கீகாரம் கிடைத்தது அதாவது உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்ற பெயரில்.
அப்போது அவருக்கு வயது 23.அந்த படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தவர் எம்ஜிஆர்.
கலைஞருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தன. 1948ல் அபிமன்யு,1949ல் மருதநாட்டு இளவரசி 1950ல் மந்திரிகுமாரி என படங்கள் தந்த புகழில் கலைஞர் உச்சத்துக்கு போனார்.

இன்சூரன்ஸ் பணத்துக்காக பெற்றோரை கொலை செய்த கொடூர மகன் ஆந்திரா

வெப்துனியா:   ஆந்திர மாநிலம் ஓங்கோல் என்ற பகுதியை சேர்ந்தவர் நாராயண ரெட்டி. இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் இவர் மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் அவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்
இந்த நிலையில் தான் பணிபுரிந்த நிதி நிறுவனத்தில் இருந்து ஒரு சில லட்சங்களை நாராயண ரெட்டி முறைகேடு செய்து இருப்பதாக தெரிய வந்தது. இதனால் தனக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கவும், மது குடிக்க தேவையான பணத்தை தயார் செய்யவும் பெற்றோரையே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். பெற்றோரின் பெயரில் ரூபாய் 15 லட்சம் இன்சூரன்ஸ் கட்டிவந்த நாராயண ரெட்டி பெற்றோர்களை கொலை செய்துவிட்டால் அந்த பணம் தனக்கு கிடைக்கும் என திட்டமிட்டுள்ளார்

BBC : இலங்கையின் தென்பகுதிவரை பாய்ந்த வைகை, தாமிரபரணி நதிகள் - ஆய்வு சொல்வது என்ன?


முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் : தமிழகத்தில் ஓடும் வைகை,
தாமிரபரணி நதிகள் நீண்ட காலத்திற்கு முன்பு இலங்கையின் காலி நகரம் வரை பாய்ந்திருப்பதாக செயற்கைக்கோள் படங்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. கடல் மட்ட உயர்வால் இந்த நதிகள் மூழ்கிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ரிமோட் சென்சிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் சோமசுந்தரம் ராமசாமி மற்றும் ஜே. சரவணவேல் ஆகியோர் மேற்கொண்ட இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் 2019 ஜூன் 25ஆம் தேதியிட்ட Current Science இதழில் வெளியாகியிருக்கின்றன.
தென்தமிழகத்தில் பாயும் மற்றொரு நதியான தாமிரபரணி கடந்த காலத்தில் வைகையின் துணை நதியாக இருந்ததாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
தற்போதுள்ள இந்திய நிலப்
பகுதிக்கு வெளியில் இந்த நதிகள் ஓடிய நிலப்பரப்புதான் தற்போதைய மன்னார் வளைகுடாப் பகுதியாக கடலில் மூழ்கியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வை மேற்கொள்ள அவர்களுக்குத் தூண்டுதலாக இருந்தது எது?
தமிழக எல்லையோரங்களைக் காண்பிக்கும் செயற்கைக்கோள் படங்களைப் பார்த்தபோது, வைகை, தாமிரபரணி ஆகிய இரு நதிகளின் டெல்டாக்களும் திடீரென முடிந்ததைப்போல (abrupt truncation) இருந்ததையடுத்தே, இந்த நதிகளுக்கு நீட்சி இருக்குமா என்பதை மன்னார் வளைகுடா பகுதியில் தேட ஆரம்பித்தனர். GEBCO என்ற இணையதளம் வழங்கும் கடல்கீழ் தரைமட்ட வரைவுப் படங்கள் (General Bathymetric Chart of the Oceans) உதவின.

முகநூல் கணக்குகளை குறிவைக்கும் ஆர் எஸ் எஸ்? ஷாலின் மரியா லாரன்சின் முகநூல் ...

Shalin Maria Lawrence : கடந்த 24 ஆம் தேதி இரவு எனது மொபைல் கீழே விழுந்து இரண்டாக உடைந்து விட்டது.
பின்பு 25 ஆம் தேதி காலை எனது இணையர் மனோஜ் அவர்களின் மொபைலில் எனது முகநூல் கணக்கில் நுழைய முற்பட்டபோது எனது கணக்கு நீக்கப்பட்டு விட்டதாக செய்தி வந்தது. எந்த காரணமும் இல்லை.தேதி அளவும் இல்லை.நீக்கப்பட்டு விட்டது .அவ்வளவே.
இப்பொழுது நான் இருக்கும் உடல் மற்றும் மன நிலையில் என்னை அது பெரிதாக பாதிக்கவில்லை.
சரி இந்த கணக்கு போனால் வேறோரு கணக்கு துவங்கி கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.
ஆனால் நேரம் போக போக நண்பர்கள் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கிய பொழுதுதான் இதன் பின்னணியில் இருக்கும் தீவிரத்தை புரிந்து கொண்டேன்.குறிப்பாக வடநாட்டு வலதுசாரி கும்பல் ஒன்று எவ்வளவு ஆராஜக போக்கை கைபிடிக்கிறது என்று தெரிய வந்தது.
சமூக செயற்பாட்டாளர்கள் மேல் இப்படி ஒரு வெறி தாக்குதல்கள் என்பது கடுகளவும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

நிசான்: பறிபோகும் 1,700 இந்தியர்களின் வேலை!

நிசான்: பறிபோகும் 1,700 இந்தியர்களின் வேலை!மின்னம்பலம் : 1,700 இந்தியர்களைப் பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது நிசான் மோட்டார் நிறுவனம்.
ஜப்பானின் இரண்டாவது பெரிய கார் நிறுவனம் நிசான் மோட்டார். இந்தியா உட்பட பல நாடுகளில் நிசான் நிறுவனம், கார் தயாரிப்பு ஆலையைக் கொண்டுள்ளது.
வாகன விற்பனையில் தொடரும் மந்தநிலை காரணமாக, தனது செலவீனத்தைக் குறைக்கும் நோக்கில் உலகளவில் 12,500 பேரையும், இந்திய அளவில் 1,700 பேரையும் ஆட்குறைப்பு செய்யப்போவதாக நிசான் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில், நிசான் மற்றும் ரெனால்டு நிறுவனம் இணைந்து, ரெனால்டு நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கார் தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறது. இது 4.4 லட்சம் யூனிட் கார் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

வைகோ : ஆயிரம் முறை சொல்வேன் சமஸ்கிருதம் இறந்து போன மொழி .... காலத்தின் குரல். வீடியோ


கலைமோகன் - நக்கீரன் : 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழை விட சம்ஸ்கிருதம்தான் தொன்மையான மொழி என அச்சிடப்பட்டிருந்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது அதிருப்தி கருத்துக்களை தெரிவித்த வருகின்றனர்.
இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழ் மொழி கிமு 300 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது என புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது தவறானது. பாடப்புத்தகத்தில் தமிழ் பற்றி தவறாக குறிப்பிட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். உலகிலேயே மூத்த மொழி தமிழ் என்பதில் மாற்று கருத்துக்கே இடமில்லை எனவே கண்டிப்பாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியிருந்தார்.

கர்நாடகா 14 எம் எல் ஏக்கள் தகுதி நீக்கம்! சபாநாயகர் அறிவிப்பு ...

தினமலர் :பெங்களூரு: கர்நாடகாவில் சில நாட்களுக்கு முன்னர் 3 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 14 எம்எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்., கூட்டணி ஆட்சி, கடந்த, 14 மாதங்களாக நடந்து வந்தது. இம்மாத துவக்கத்தில், காங்., மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் சுயேட்சைகள் என 19 எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பதவியை ராஜினாமா செய்தனர். நீண்ட இழுபறிக்கு பின், 23ம் தேதி, சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
முதல்வராக, பா.ஜ., வை சேர்ந்த எடியூரப்பா நேற்று முன்தினம்(ஜூலை 26) பதவியேற்று கொண்டார். நாளை அவர், தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க உள்ளார்.

ஜாதியரசர்களா... நீதியரசர்களா? .. தமிழ் பிராமணர்களின் உலக மாநாட்டில், உயர் நீதிமன்ற நீதிபதிகள்

சாதியரசர்களா... நீதியரசர்களா?விகடன் : கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் சாதியரசர்களா... நீதியரசர்களா?
சில நாள்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தமிழ் பிராமணர்களின் உலக மாநாட்டில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அதில் ஒருவர், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ். மற்றொருவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் அனிதா சுமந்த். இவர் சென்னையில் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பினும் இவருடைய பூர்வீகம் கேரளம். `இப்படி அப்பட்டமாக ஒரு சாதி மாநாட்டில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொள்ளலாமா?’ என்ற கேள்விக்கணைகள் எழுந்தவண்ணம் உள்ளன. அதிலும், நீதிபதி சிதம்பரேஷ் தன்னுடைய உரையில் கூறியது மிகவும் சர்ச்சைக்குரியது.
‘பிராமணர்கள், இரு பிறப்புக்கு (துவிஜா) உட்பட்டவர்கள். அவர்கள் என்றைக்கும் தலைமைப் பொறுப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்’ என்று பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, தற்போதுள்ள சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்ததுடன், பிராமணர்கள் பொருளாதார ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

முன்னாள் அதிமுக எம்பி மைத்திரேயன் திமுகவில் தஞ்சம் ?

ஆதரவாளர்களை திரட்டுகிறார் தி.மு.க.,வில் மைத்ரேயன் ஐக்கியம்?
தினமலர் : அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, தன் ஆதரவாளர்களுடன், தி.மு.க.,வில் சேர உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜ்யசபா எம்.பி.,க்களாக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த, டாக்டர் மைத்ரேயன், லட்சுமணன், அர்ஜுனன், ரத்தினவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர், டி.ராஜா மற்றும் தி.மு.க.,வின் கனிமொழி ஆகிய, ஆறு பேரின் பதவிக்காலம், நேற்று முன்தினம் முடிந்தது.ராஜ்யசபாவில், மைத்ரேயன் உருக்கமாக பேசுகையில், 'பார்லிமென்ட்டை பொறுத்தவரை, இது, எனக்கு அஸ்தமன நேரமாக இருக்கலாம். ஆனால், மாநில அரசியலில், இனிமேல் தான் எனக்கு சூரியோதயம் ஆரம்பிக்கப் போகிறது' என்றார்.
இந்த சூசக பேச்சு வாயிலாக, அ.தி.மு.க.,வில், அவர் அதிருப்தியாக இருப்பது தெரிய வருகிறது. செந்தில்பாலாஜி, தங்கதமிழ்செல்வனை தொடர்ந்து, மைத்ரேயனும், தன் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்காக, தி.மு.க.,வில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, மைத்ரேயன் ஆதரவாளர்கள் கூறியதாவது:

ஜெயபால் ரெட்டி காலமானார் முன்னாள் மத்திய அமைச்சரும்...ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ...


தினமலர் : ஐதராபாத்: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டி உடல்நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 77.;கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று(ஜூலை 28) அதிகாலை அவர் காலமானார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
1942 ல் பிறந்த இவர் ஓஸ்மானியா பல்கலையில் மாணவர் தலைவராக இருந்தார். 1970 காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இந்திரா பிரதமராக இருந்த போது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிது காலம் ஜனதா கட்சியிலும், ஜனதா தளத்திலும் இருந்துள்ளார்.

பேலியோ டயட்: இதய நோய்களை உண்டாக்கும் ...ஆய்வில் அதிர்ச்சி

தினமலர் : சென்னை: பேலியோ டயட் இதய நோய்களை உண்டாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பேலியோ டயட் இருப்போரை டாக்டர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். 44 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் 'ஐரோப்பியன் ஜர்னல் ஆப் நியூட்ரிசியன்' வெளியிட்டுள்ளது.
அதில், பேலியோ டயட் இருப்போரை ஆய்வு செய்ததில், அவர்களின் ரத்தத்தில் இதயத்தை பாதிக்கும் உயிரிகள் இருந்துள்ளன. டிரைமெதிலமைன் ஆக்சிஜன் அளவு அதிகமாக இருந்துள்ளது. அவை குடல் பாக்டீரியாக்களை தாக்குகிறது. இதனால், இதய நோய்கள் உண்டாகின்றன.

10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலையில் மீண்டும் நான்கு வழிபாதை போக்குவரத்து 3-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது

10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலையில் மீண்டும் நான்கு வழிபாதை போக்குவரத்து 3-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறதுdailythanthi.com : மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலையில் மீண்டும் நான்கு வழிப்பாதை போக்குவரத்து வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வந்ததால் அண்ணாசாலை, பூந்தமல்லி சாலைகளில் பல்வேறு இடங்களில் இருவழிப்பாதை போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகயும், 4 வழிப்பாதை போக்குவரத்து இருவழிப்பாதை போக்குவரத்தாகவும் மாற்றப்பட்டு இருந்தன. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டதால் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்ட 2009-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இதனால் பல்வேறு வகைகளில் இடையூறு ஏற்பட்டு வந்தது.

கோயம்பேடு: ஆம்னி பேருந்துகளில் தீ விபத்து வீடியோ


மின்னம்பலம் : சென்னை கோயம்பேட்டில் நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்துகளில் தீ விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அருகே ஆம்னி பேருந்து நிலையம் உள்ளது. இன்று (ஜூலை 27) மாலை அங்கு  நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்றில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ மளமளவெனப் பரவி அருகில் நின்று கொண்டிருந்த இரண்டாவது பேருந்திலும் பற்றியுள்ளது. இதனால் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அங்கும், இங்கும் ஓடியுள்ளனர். தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்,

மகாலட்சுமி ரயில்: வெள்ளத்தில் சிக்கிய 700 பேரும் மீட்பு... சமுகவலை சாதித்தது


மின்னம்பலம் : மும்பையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி ரயிலில் இருந்து 9 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 700 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
மகாலட்சுமி ரயில்: வெள்ளத்தில் சிக்கிய 700 பேரும் மீட்பு!மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குச் சாலை, விமானம், ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தைச் சூழ்ந்துள்ள மழை நீரால் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மும்பை – கோலாப்பூர் இடையே இயங்கும் மகாலட்சுமி ரயில் உல்ஹாஸ் ஆற்று பகுதியில் 700 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த போது, பட்லாபூர் – வாங்கனி ரயில் நிலையங்களுக்கு இடையே, வெள்ளநீரில் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர், ரயில்வே அதிகாரிகள், விமானப்படையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழின் தொன்மையை மூடிமறைக்க சமஸ்கிருதத்தால் முடியுமா?