
![]() |
| கிரிஜா வைத்தியநாதன் |
அந்தக்கட்டுரை விவரம் அப்படியே ஆச்சு மாராமல் ஸ்பெல்கோ இதோ தருகிறது ..இதில் எங்கு தேச துரோகம் வருகிறது என்பதை படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
நக்கிரனில் வந்த கட்டுரை ஆசிரியர் : தாமோதரன் பிரகாஷ், சி.என்.ராமகிருஷ்ணன்
ஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப் பட்ட நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை பாலியல் நெருக்கடியில் தள்ளியது பற்றிய திடுக்கிடும் உண்மைகள் ஒவ் வொன்றாக தற்பொழுது வெளியாகத் தொடங்கியுள்ளது. காவல்துறையில் நேர்மையாகப் பணியாற்றும் அதிகாரிகள், “சுவாதி கொலையில் சிக்கிய ராம்குமாரை சிறையிலேயே கதை முடித்ததுபோல, நிர்மலா தேவிக் கும் குறிவைக்கப்பட்டது’ என அதிர்ச்சித் தகவலை வெளியிடுகிறார்கள்.
நிர்மலாவை ஏன் கொலை செய்ய வேண்டும்? யார், அதன் பின்னணி என விரிவாகக் கேட்டோம்.””ஏற்கனவே நிர்மலாவைப் போலவே மிக பிரபலமான செக்ஸ் வழக்கில் சிக்கிய டாக்டர் பிரகாஷை ஜாமீனில் வெளியே வரவிடாமல் சிறைக்குள்ளேயே அவரது வழக்கை நடத்தி தண்டனையும் பெற்றுத் தந்தார்கள். அதுபோலவே நிர்மலா தேவி வழக்கையும் கொண்டு செல்கிறார்கள். அது முடியாவிட்டால் சிறைக்குள்ளே அவரை கொலை செய்யவும் திட்டமிட்டிருந்தார்கள். இது நிர்மலா தேவிக்கே தெரியும் என்பதால்தான், “என்னைக் கொல்ல சதி நடக்கிறது’ என நீதிமன்றத்தில் கதறியிருக்கிறார் நிர்மலா தேவி” என விரிவாகவே சொன்னார்கள்.





















