செவ்வாய், 1 நவம்பர், 2016

மோடியை நேருக்கு நேர் கேட்ட அர்விந்த் கேஜ்ரிவால் :நீதிபதிகளின் தொலைபேசிகளை ஒட்டு கேட்டு......


‘நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பதன் மூலம் நீதித்துறை மீது ஆதிக்கம் செலுத்த முயல்கிறதா’ என்ற கேள்வியைப் பிரதமர் மோடியின் முன்னிலையிலேயே கேட்டு அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி உயர்நீதிமன்ற பொன்விழா கொண்டாட்டம் விஞ்யான் பவனில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “தங்கள் தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக நீதிபதிகள் சிலர் கவலையில் இருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவது உண்மையென்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கச் செயலாகும்.

திங்கள், 31 அக்டோபர், 2016

காஷ்மோரா .. வீணாய்ப்போன பில்டப்புகள்

"இலட்சம் பெரியார் வந்தாலும் இங்கு மிச்சம் பல பல மூடர்கள்" - என்ற
வரிகளை தலைப்பு பாடலில் வைத்துவிட்டு, அதே மூடதனத்தை மெய்யென்று நிறுவியிருக்கிறது காஷ்மாரோ! முதல் பாதியும், நகைச்சுவையும் தவிர மற்றயெதையும் ரசிக்க முடியவில்லை. முக்கியமாக ஶ்ரீ திவ்யாவை திரையில் பார்க்கவே எரிச்சலாக இருக்கின்றது. திரையில் தோன்றுவதே நடிப்பில்லை என்பதை யாரும் அவருக்கு சொல்ல மாட்டார்களா?முகநூல் பதிவு  கிருபா முனுசாமி

மாட்டுக்கறி : ஜார்க்கண்ட் முசுலீமைக் கொன்ற காவி + போலீஸ் கூட்டணி

ansari
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் இளைஞர் ஒருவரை போலீசார் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். இம்மாநிலத்தின்  ஜமத்தாரா மாவட்டத்தின் திக்ஹரி கிராமத்தில் ஜெராக்ஸ் கடை தொழில் செய்துவந்தவர் 22 வயதான மின்ஹாஸ் அன்சாரி. அவர் பசுக்கன்றுடன் தான் இருப்பது போன்ற போட்டோ ஒன்றை வாட்ஸ் அப் குழுமத்தில்  பதிவிட்டதாகவும் தொடர்ந்து அவரது  நண்பர் ஒருவர் மாட்டிறைச்சி படம் வெளியிட்டதாகவும் கூறி இவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் அப்பகுதி விஷ்வ இந்து பரிஷத்தின் சோனு சிங்.; புகைபடத்திலிருக்கும் 22 வயதான மின்ஹாஸ் அன்சாரி

அதிமுக ஆட்சியில் ஏராளமான பவர் சென்டர்கள் .. ஆளாளுக்கு ஊரை அடிச்சு உலையில் போடும் காரியம் மட்டுமே நடக்கிறது

ஹலோ தலைவரே, முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் படுத்திருக்கும் நிலையில், ஒரே வாரத்தில் ரெண்டாவது முறையா, கோட்டையில் அமைச்சரவை கூட்டம் நடந்திருக்குதே?''
""ஜெ. ஆக்டிவ்வா இல்லாவிட்டாலும் அவரது அமைச்சரவை ஆக்டிவ்வா இருக்குதே!''‘""24-ந் தேதி மாலை 5 மணிக்கு கூடிய அமைச்சரவைக்  கூட்டம், ஏறத்தாழ ஒன்றேகால் மணிநேரம் நடந்தது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கோப்புகளில் கையெழுத்து பெறும் வைபவமாகத்தான் இந்தக் கூட்டம் நடந்திருக்கு. டீ, ஸ்நாக்ஸ் சாப்பிட்டபடி, அமைச்சர்கள் பொதுவான விசயங்களையே அங்க கலந்துரையாடி இருக்காங்க. உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கும் அரசாணைக்கு ஒப்புதல் கொடுப்பதற்காகத்தான் முக்கியமாக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தயாரித்த  உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் பட்டியலுக்கும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கு. இப்படி மாநிலத்தின்  அவசரத் தேவைகளைக் கருதி அமைச்சரவை கூட்டப்பட்டாலும், மத்திய அரசின் ராஜதந்திரமான மூவ்களால், அதற்குச் சாதகமான சில ஒப்புதல்களும் இந்தக் கூட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கு.''’’""சந்தில் சிந்து பாடும் பா.ஜ.க.ன்னு போன முறையே நாம பேசியிருக்கோமே.''…’

தொழில் துவங்க உகந்த மாநிலம்: 18 வது இடத்தில் தமிழகம்.. 2011 இல் மூன்றாவது இடத்தில் இருந்தது. அதிமுக வந்ததில் இருந்து ஒரே ரிவேர்ஸ் கியர்தாய்ன்

புதுடில்லி: தொழில் துவங்க உகந்த மாநிலம் தொடர்பான பட்டியலில், 12வது
இடத்தில் இருந்த தமிழகம் 18 வது இடத்திற்கு சரிந்துள்ளது. உலக வங்கி மற்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் சார்பில், இந்தியாவில் உள்ள மாநிலங்களிலன் தொழில் கொள்கை மற்றும் உலக வங்கியுடன் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் துவங்குவதற்கான உகந்த மாநிலங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

குஷ்பு அதிரடி : பொது சிவில் சட்டத்தை ஆதரிகிறேன் .. பாஜக கொண்டுவர முயற்சிக்கும் பொது...


மத்திய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் பொதுசிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பொதுசிவில் சட்டத்தை தாம் ஆதரிப்பதாக தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இந்துத்துவா அமைப்புகளின் கொள்கை. இதனை பாரதிய ஜனதா கட்சி அனைத்து தேர்தல் அறிக்கைகளிலும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுசிவில் சட்டம் மூலம் இந்துத்துவா செயல்திட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது என பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அமைச்சர்களை நம்பாத சசிகலா! சசியை நம்பாத அமைச்சர்கள்.. ஆளாளுக்கு கணக்கு பிரிப்பதிலேயே கவனம் ..

கரூர் மாவட்டத்தில் இருந்து ஏக புலம்பல். ஒவ்வொன்றாக சொல்கிறேன்” என்று முதல் மெசேஜ் வந்தது. ஃபேஸ்புக்கில் இருந்து பதில் வருவதற்கு முன்பே அடுத்த மெசேஜ் வந்தது வாட்ஸ் அப்பில் இருந்து. ”கடந்த தேர்தலில் பணம் செலவு செய்திருந்தால் ஜெயித்திருக்கலாம் என கருணாநிதி தேர்தல் தோல்விக்குப் பிறகு அடிக்கடி சொல்லிவந்தார். அதனால், இப்போது நடக்க இருக்கும் தேர்தலில் பணத்தை கையிலெடுக்கும் முடிவுக்கு திமுகவும் வந்துவிட்டது.மூன்று தொகுதிக்கும் தலா 30 கோடி ரூபாய் செலவு செய்யலாம் என்று கணக்கிட்டு அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என திட்டம். ஒரு ஓட்டுக்கு ஆயிரம் என்பது திமுக போட்டிருக்கும் கணக்கு. 20 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கும் மீதி இருக்கும் 10 கோடி ரூபாய் தேர்தல் செலவுக்கும் என பிரித்திருக்கிறார்கள். திமுக தரப்பில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் தகவல் அதிமுகவுக்கும் போயிருக்கிறது. பன்னீர்செல்வமும், தம்பிதுரையும் இந்த தகவலை சசிகலாவின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறார்கள். அதைக் கேட்ட சசிகலா, ‘நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது. மூணு தொகுதியிலும் நாம ஜெயிக்கணும். அக்கா ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. எதாவது ஒரு தொகுதியில் நாம தோற்றாலும் அது நமக்கு அசிங்கமாகிடும்.

மக்கள் நலகூட்டணி வைகோவின் தன்னிச்சையான அறிவிப்புக்களால் உடைந்தது

2016 சட்டமன்றத் தேர்தலின் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது ‘மக்கள் நலக் கூட்டணி’. அதில், தானாக முன்வந்து தே.மு.தி.க-வை விஜயகாந்த் இணைத்தபோது, மக்கள் நலக் கூட்டணி அதிசயமாகப் பார்க்கப்பட்டது. கூட்டணிக்குக் கட்சிகள் இல்லாமல் களம் கண்ட தி.மு.க-வே தேர்தல் ரிசல்ட் வரும்வரைக்கும் மக்கள் நலக் கூட்டணியைப் பார்த்து கொஞ்சம் ‘ஜெர்க்’ ஆனது. ஆனால், 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, மக்கள் நலக் கூட்டணி மீது இருந்த ஆச்சர்ய - அதிசய பிம்பங்கள் உடைந்து நொறுங்கின. தமிழகத்தின் தலையெழுத்து அ.தி.மு.க.; அ.தி.மு.க இல்லையென்றால், தி.மு.க என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்தன. தே.மு.தி.க-வும், ஜி.கே.வாசனைத் தலைவராகக் கொண்ட தமிழ் மாநிலக் காங்கிரஸும் பிரிந்துபோயின. ஆனாலும், மக்கள் நலக் கூட்டணி சிதறவில்லை. தேர்தல் நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியாகவும் போராட்டக் களத்தில் மக்கள் நலக் கூட்டியக்கமாகவும் செயல்படுவோம் என்று அறிவித்து தொடர்ந்து ஒற்றுமையாகச் செயல்பட்டனர். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்ததும், ஒற்றுமையாகத் தொகுதிகளைப் பிரித்துக்கொண்டனர். ஆனால், அதன்பிறகு தொடரும் நடவடிக்கைகள் அந்தக் கூட்டணிக்குள் குழப்பம் மிகப்பெரிய அளவில் உருவாகி உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

BBC :போபால் சிறையிலிருந்து தப்பிய 8 கைதிகள் சுட்டுக் கொலை

இந்தியாவின் போபால் நகர மத்திய சிறையிலிருந்து, சிறைக்காவலர் ஒருவரைக் கொன்றுவிட்டு, படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி சிறைச் சுவர்களில் ஏறித் தப்பிய 8 சிறைக் கைதிகளை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சிறைக்கைதிகள் , தடை செய்யப்பட்ட இஸ்லாமியவாதக் குழுவான, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை ( சிமி) சேர்ந்தவர்கள் , என்று காவல் துறையினர் கூறுகிறார்கள். இவர்கள் சிறைக்காவலரின் கழுத்தை அறுத்துவிட்டனர் என்றும் அவர்கள் கூறினர். தப்பியோடிய இவர்கள் அனைவரும் போபாலின் புற நகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போபாலின் தலைமை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் சௌத்ரி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறினார். அவர்களை சரணடையச் சொன்னோம், ஆனால் அவர்கள் போலிஸ் முற்றுகை வளையத்தை ஊடுருவிச் செல்ல முயன்றனர், என்றார் அவர். இன்று ( திங்கட்கிழமை ) அதிகாலை இந்த சம்பவம் நடந்ததாக போபால் நகர மூத்த போலிஸ் அதிகாரி ராமா சிங் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் மின்னல் வேக அத்துமீறிய ஆதரவு: தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கண்டனம்

வில்லாய் வளையும் ஆணையமும், வீணாய் போகும் ஜனநாயகமும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மூன்று தொகுதி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்குவதற்குவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா கையெழுத்திடுவதற்கு பதிலாக கைரேகை பதிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் காட்டிய மின்னல் வேகமும், தேர்தல் விதிகளுக்கு மாறாக நடந்துள்ள அடுக்கடுக்கான குளறுபடிகளும் பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளன.

 இந்திய தேர்தல் ஆணையத்தின் சின்னம் ஒதுக்கீட்டு ஆணைப்படி, அரசியல் கட்சிகளின்அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தைப் பெறுவதற்காக, தலைமையால் நியமிக்கப்பட்ட ஒருவரின் கையெழுத்திடப்பட்ட பி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். சின்னம் ஒதுக்கீட்டுக்கான பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு?

இந்தியாவின் அதிக செலவுள்ள நகரங்களில் சென்னை 6 வது மும்பை முதலாவது ,,,

சென்னை: உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியாவும் ஒன்று. வருடா வருடம் லட்சம் கணக்கான மக்கள் வேலை தேடி நகரங்களுக்கு வருவதும் நிறைய பணத்தை செலவிடுவதும் வாடிக்கை.
இதில் இருந்து நாம் இந்தியாவில் வாழ்வாதாரத்திற்கு அதிகம் செலவு ஆவதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்."இந்தியாவின் டாப் 10 காஸ்ட்லி நகரங்கள் இவை தான்..! சென்னைக்கு என்ன இடம் தெரியுமா..?" "இந்தியாவின் டாப் 10 காஸ்ட்லி நகரங்கள் இவை தான்..! சென்னைக்கு என்ன இடம் தெரியுமா..?"
தங்கும் இடம், உணவு, போக்குவரத்து, சுகாதாரம் போன்ற வற்றிற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைப் பொருத்து நகரத்தில் வாழ்வதற்கான செலவு எவ்வளவு ஆகிறது என்று கணிக்க இயலும்.
இந்த நகரங்களில் கடுமையான லட்சியங்களுடன் நல்ல வேலை மற்றும் பணத்துடன் செலவு செய்யும் உயர் நடுத்தர வர்க்க மக்கள் பலர் உண்டு.
எனவே நாம் இங்கு இந்தியாவில் டாப் 10 காஸ்ட்லி நகரங்கள் எவை என்று இங்குப் பார்ப்போம்.

சிகிச்சையை முடித்துக் கொள்கிறார் ரிச்சர்ட் பேல்?

minnambalam,com : அதிமுக-வின் தலைவராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்ட இந்த 25 ஆண்டுகளில் அவர் வாழ்த்து சொல்லாத தீபாவளியும் முடிந்து விட்டது. தீபாவளிக்கு மறுநாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை தினம் என்பதால் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 68 பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி பூஜையை நடத்தி முடித்தனர் அதிமுக-வினர்.
இதுவரை மூன்று முறை சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த ரிச்சர்ட் பேல் மீண்டும் சென்னை வந்துள்ளார். அவர் வந்ததையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்களும் சென்னைக்கு வர, இப்போதைக்கு இவர்களின் தலைமையில் சிகிச்சை நடந்து வருகிறது. நேற்று காலை அப்பல்லோவுக்கு வந்த ரிச்சர்ட் பேல் ஒரு மணி நேரம் சிகிச்சையை கவனித்து விட்டு கிளம்பிச் சென்று விட்டார்.

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ரெட்டை மலை சீனிவாசன் ..மறைக்கபட்ட ஒரு வரலாற்று நாயகனின் அர்ப்பணிப்பு

Nelson Mondela Manoharan: முகநூல் பதிவு :
" நானும் டாக்டர் அம்பேத்காரும் நகமும்சதையாக இருந்து தலித்களுக்குபாடுபட்டோம் "இதர சமூகத்தவர்களும், சமயத்தவர்களும்நம்மை முன்னேற்ற வந்ததாக சொல்வதுஅவர்களின் சுயநலமாகும். நம்முடையஇடைவிடாத சுயமுயற்சியால் முன்னேறிவந்து கொண்டிருக்கிறோம் " -ரெட்டமலை சீனிவாசன. செனைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டுவட்டத்தில் கொளியாலம் என்னும்கிராமத்தில், ரெட்டமலை ஆதிநாயகிதம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 7, 1859 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியஅரசியலுக்கு காந்தி வருவதற்கு முன்பே, இமண்ணில் தீண்டாமை, சாத்தியகொடுமைகளை எதிர்த்து போராடியவர்
1887 ஆம் ஆண்டு அரங்க நாயகியை மணந்தார்

18891 ஆம் ஆண்டு பறையர் மஹா ஜன சபையை நிறுவி தீண்டாமைகொடுமையை எதிர்த்தார்

1893 - பறையர் என்ற வார இதழை துவக்கி தலித்மக்களின் விடுதலைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
1894 - பஞ்சமி நில மீட்பு போராட்டம் நடத்தினார்.

அதிமுக அமைச்சர்களுக்கு நிம்மதியான முதல் அமாவாசை .. பதவி பறிபோகதில்லை?

கரூர் மாவட்டத்தில் கும்பல் ஒன்று ஒ.பன்னீர் செல்வத்தின் உறவினர்கள்
என்று கூறி மணல் அள்ளி வருகின்றனர். இதுதொடர்பாக நல்லக்கண்ணு அவர்கள் அளித்த புகாரை மாவட்ட ஆட்சியர் ஏற்கவில்லை. கரூர் மாவட்டம் கடம்பன்குறிச்சி பகுதியில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளி வருகின்றனர். தற்போது தமிழகத்தின் பொறுப்பு முதல்வராக இருக்கும் ஒ.பன்னீர் செல்வத்தின் உறவினர்கள் என்று கூறி மணல் அள்ளி வருவதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய நல்லக்கண்ணு அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆற்றில் இருந்து மணல் அள்ளி செல்லும் லாரிகள் அடங்கிய வீடியோவை ஆதாரமாக எடுத்து மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடர்பாக புகார் செய்தனர்.

மதுரை என்றாலே கொண்டாட்டங்கள்தான் .. ஒரு பார்வை !

விகடன்,காம் ;தெருவுக்கு ஒரு கோயில், தினம் ஒரு திருவிழா, வாரம் ரெண்டு சினிமா என,
மதுரையின் அடையாளமே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். இந்த உற்சாகம்தான் மதுரைக்காரர்களை எப்போதும் எனர்ஜியோடு வைத்திருக்கிறது. அதுவே `நாங்க மதுரைக்காரய்ங்கடோய்..!’ என எந்த ஊருக்குச் சென்றாலும் தெம்பாகப் பேசவும்வைக்கிறது. இப்போது எப்படி இருக்கிறது மதுரை?

கேரளாவில் 6 மாதத்தில் 910 கற்பழிப்பு வழக்குகள்: மாநில போலீஸ் தகவல்


திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஜூன் மாதம் வரை 6 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 7909 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸ் க்ரைம் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இதில் 2332 வழக்குகள் பாலியல் துன்புறுத்தல் பிரிவிலும், 190 வழக்குகள் ஈவ்டீசிங் பிரிவிலும், 78 வழக்குகள் கடத்தல் பிரிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 910 வழக்குகள் கற்பழிப்பு பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1263 கற்பழிப்பு வழக்குகள்தான் பதிவாகியிருந்தன. தற்போது 6 மாதத்தில் மட்டும் 910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தங்களது கவலையை தெரிவித்துள்ளனர்.

மாட்டு மூத்திரம் குடிக்கும் கண்றாவி .... நவீன மருத்துவ பார்வையில்..

உன்னுடைய மாதாவின் பிணத்தை நீயே தூக்கிப் போட்டுக் கொள்” என்று குஜராத் தலித்துகள் பார்ப்பன இந்துமதவெறியின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து விட்டாலும், சோர்ந்து விடாத காவி கும்பல், தங்கள் ‘புனித அன்னையின்’ புகழைப் பரப்ப கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோமாதாவின் மூத்திரத்தையும் சாணியையும் அள்ளி வந்து ஆராய்ச்சி செய்கின்றனர். ஏன் மாட்டுமூத்திரத்தை கையில் எடுத்துள்ளார்கள்? நடுத்தர வர்க்க அப்பாவி இந்தியர்களின் தலையில் எதையாவது கட்ட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இன்னன்ன பொருளைத் தின்றால் / பயன்படுத்தினால் – ஆண்மை பெருகும், இளமை மீளும், வழுக்கையில் முடி முளைக்கும், விரை வீக்கம் அகலும், ஆண் குழந்தைப் பேறு கிட்டுவதோடு புற்றுநோய் கூட குணமாகும் என்று குன்சான ‘அறிவியல்’ ஆய்வுகளை பரப்பி விட்டால் போதுமானது.

‘ஜெ’ கைரேகை .... டாக்டர் கையெழுத்து எங்கே? அடுத்த சர்ச்சை!

பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு, போட்டியிடும் வேட்பாளர்களால் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களில் அதிமுக சமர்ப்பித்த விண்ணப்பங்கள் பல சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. வேட்பாளருக்கு தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னம் ஒதுக்குவதற்காக சமர்ப்பிக்கப்படும் ‘பார்ம் பி’ படிவத்தில் அதிமுக பொதுச்செயலாளரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவும் அதையொட்டி எழும் சட்டரீதியான சிக்கல்களையும் மதியம் வெளியிட்ட (ஜெயலலிதா கைரேகை தேர்தல் ஆணையம்! -

தமிழக முழுவதும் 762 பட்டாசு விபத்துகள்.. பல லட்சம் சேதம்!!

தீபாவளி பண்டிகை தினமான நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 762 இடங்களில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 123 இடங்களில் பட்டாசு வெடி விபத்துகள் ஏற்பட்டன.
தீபாவளி என்றாலே பட்டாசு தீ விபத்து என்பதும் கூடவே வந்துவிடுகிறது. நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு பட்டாசு தீ விபத்தில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு எரிந்து 2 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. இதுபோன்று, சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் பட்டாசு வெடிக்கப்பட்ட போது ஏற்பட்ட தீ விபத்தில் சரஸ்வதி என்ற கூலித்தொழிலாளி பெண்ணின் குடிசை வீடு பற்றி எரிந்தது. இதில் அவர் சேர்த்து வைத்திருந்த 10 சவரன் நகை மற்றும் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையத்தில், தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் விசைத் தறி மற்றும் சாயப்பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் நெசவு நூல்கள் எரிந்து கருகின.

ஓடிஸா மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது உண்மைதான் .. ஒப்புக்கொண்ட மாவோயிஸ்டுகள்

என்கவுண்டர் முடிந்து கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் உடல்களை இறக்கும் போலீசார். | கோப்புப் படம்: சி.வி.சுப்பிரமணியம். படம்: சி.வி.சுப்பிரமணியம். ஒடிசா மால்காங்கிரியில் என்கவுண்டரில் 28 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தங்களது 40 ஆண்டுகால புரட்சிகர போராட்டத்தில் ஏற்பட்ட பேரிழப்பு என்று மாவோயிஸ்ட்கள் ஒப்புக் கொண்டனர். இந்த என்கவுண்ட்டரைக் கண்டித்து மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நவம்பர் 3-ம் தேதி பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் மாவோயிஸ்ட்கள். இந்நிலையில் சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ‘பிரதாப்’ என்ற பெயரில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில், “தங்களது காம்ரேடுகள் 11 பேரை காயமடைந்த நிலையில் பிடித்த போலீஸ் அவர்களை சித்தரவதை செய்து கொலை செய்தனர்” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திருமாவளவனுக்கு மத்திய அமைச்சர் பதவி ? பாஜக தூண்டில்!

மின்னம்பலம்.காம்: திருமாவை பாஜக கூட்டணி பக்கம் இழுக்க, பாஜக முயன்று வருகிறது. திருமா மக்கள் நலக் கூட்டணியில் இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இக்கவலை இன்று வரை அவரிடம் இருக்கும் நிலையில், கடந்த 19ஆம் தேதி புதன்கிழமை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தொல்.திருமாவளவனைச் சந்தித்துப் பேசினார். சென்னை கே.கே.நகரில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடம் நீடித்தது. இச்சந்திப்பின் பின்னர் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “நட்பு ரீதியாக மட்டுமே திருமாவளவனைச் சந்திக்க வந்தேன்.

அரசியல் சட்டத்தின் ஆட்சியா? அரண்மனையில் வாழும் மன்னராட்சியா?

சி. மதிவாணன்thetimestamil.com : சி. மதிவாணன  : மன்னர் இறந்துவிட்டார். மன்னர் நீடூழி வாழ்க” என்று சொன்னார்கள் என்றால், ராஜ்ஜியத்தின் அதிகாரத்தையும் மன்னரின் சொத்துகளையும் கைப்பற்றப் போகிறார்கள் என்று அர்த்தம்.
அது மன்னர் ஆட்சியில் சரிதான், வேறு வழியில்லை, இந்த கொள்ளையனுக்குப் பதில் மற்றொரு கொள்ளையன் என்று விட்டுவிடலாம்.
ஆனால், இது அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் நாடு என்று சொல்கிறார்கள். அரசியல் சட்டப்படி ஆட்சி நடத்த வேண்டியவர் உடல் நலம் பற்றி சொல்ல மறுக்கிறார்கள். இருந்தபோதும், கவர்னருக்கு அவர் வாய்மொழியாக அறிவுரை சொல்கிறார். ஆனால், நேரடியாகச் சொல்லவில்லை என்பதை கவர்னர் அறிக்கையே காட்டுகிறது.
Medically alive என்ற வார்த்தைகளுக்கும் சுய அறிவுடன் செயல்படுகிறார் என்ற வார்த்தைகளுக்கும் வேறுபாடு உண்டு. அதனை அப்பல்லோ என்ற தனியார் நிறுவனம் சொல்ல முடியாது. அரசியல் சட்டத்தின் படியான அதிகாரமே சொல்ல முடியும்.   சொத்து பத்திரங்கள் இன்னும் பாக்கி இருக்கு .. அத்தனையும் கைநாட்டு வைக்கிறதுன்னா சும்மாவா? ஆயிரக்கணக்கான டாக்கியுமென்ட் இருக்குல்ல?

இவனுக்கு ஏன் அய்யா இவ்வளவு பாதுகாப்பு? மக்களின் வரிப்பணத்தில் மோடியின் அநியாயம்!

ஜனநாயகத்தைப் பாதுகாக்க விரும்புகின்றவர்களே! உங்களுடைய
உரிமைகளை மிக உயர்ந்த மனிதன் என்பவன் காலடியில் கிடத்தி விடாதீர்கள்.அந்த அதிகாரங்களை அவன் சனநாயக அமைப்பையே குலைக்கப் பயன்படுத்தி விடுவான்.நாட்டில் நிலவுகின்ற " தலைவர் வழிபாடு" பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இத்தகைய தலைவர் வழிபாடு பகுத்தறிவுக்கு ஒவ்வாத குருட்டுத்தனமான செயல்பாடே ஆகும்.
- அண்ணல் அம்பேத்கர், 1949 நவம்பர் 25

500 கோடி சுருட்டிய கால்சென்டர் அமெரிக்க வரி இலாக்கா போல் நடித்து IRS SCAMMER CAUGHT ON VIDEO


"வருவாய்த்துறை அதிகாரிகள் போல் பேசி 200 கால்சென்டர்கள் பணமோசடி: தானே போலீஸ் கமிஷனர் தகவல்" வருவாய்த்துறை அதிகாரிகள் போல் பேசி 200 கால்சென்டர்கள் பணமோசடி: தானே போலீஸ் கமிஷனர் தகவல்" அமெரிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் போல பேசி 200 கால்சென்டர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தானே போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். தானே: அமெரிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் போல பேசி 200 கால்சென்டர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தானே போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். தானே மிரா ரோட்டில் போலி கால்சென்டர்கள் நடத்தி அமெரிக்க பிரஜைகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்நாட்டு வருவாய் அதிகாரிகள் போல் பேசி, ரூ.500 கோடி வரையில் மோசடி அரங்கேறியது. இதில் தொடர்புடைய 70–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சாகர் தாக்கர் வளைகுடா நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டார்.

ஜெயலலிதா சுய நினைவோடு பெருவிரல் ரேகை பதிந்தாரா? தேர்தல் கமிஷன் உடந்தை?

ஒரு மாதத்துக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக பொதுச்செயலாளராக உள்ள ஜெயலலிதா அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டு விண்ணப்பமான ‘பார்ம் பி’-யில் தனது இடது கை பெருவிரல் ரேகையைப் பதித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளராக களமிறங்கும் ஏ.கே.போஸ் சமர்ப்பித்த ‘பார்ம் பி’ விண்ணப்பத்தில் இருந்தே இந்த பெருவிரல் ரேகை விவகாரம் வெளியில் வந்துள்ளது. அந்த ‘பார்ம் பி’ படிவத்தில் மருத்துவர்களின் அத்தாட்சி வாக்குமூலமும், சாட்சி கையெழுத்தும் உள்ளது.