வியாழன், 8 ஆகஸ்ட், 2013

விஜய்யின் எதிராளி இன்று மற்றொரு மனு தாக்கல் செய்தால் தலைவனின் கதை கந்தல்!

நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படத்துக்கு தலைக்கு மேல் ஏகப்பட்ட
சிக்கல்கள் தொங்கிக் கொண்டுள்ள நிலையில், இந்தப் படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி, ‘தலைவா’ பட தயாரிப்பாளர், இயக்குனருக்கு சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இவர்கள் வரும் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தலைவா படம் நாளை (9-ம் தேதி) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே வேறு சில சிக்கல்கள் உள்ளன (அவற்றை தனிக் கட்டுரையாக பார்க்கலாம்) இப்போது, படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் 14-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதால், புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
ஆம். 14-ம் தேதி பதில் அளிக்கப்படும்வரை, ‘தலைவா’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று, வழக்கு தொடர்ந்தவரால் மற்றொரு மனு செய்ய முடியும்!
இந்த வழக்கின் பின்னணி என்ன?
நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு இது. அந்த மனுவில், தமது தாத்தா மற்றும் தந்தை பற்றிய கதைதான், ‘தலைவா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா திருவாசகம் / லண்டன்! கணக்குகள் காட்டவில்லையாமே ? லண்டன் தமிழர் ஆத்திரம்

How Isaignani Illayarajah Seized Control of the Thiruvasakham Symphony Project to Fatten his
Own Purse.
by
Rajasingham Jayadevan
The darker side of the composer Isai Gnani Illaiyarajah has never been reported in the media. Having experienced his ruthless double-cross, I write this piece with the view to create greater awareness of the deception practiced by the much boasted Tamil music composer from Tamil Nadu.
‘Isai Gnani Illarajah is coming to London for an unforgettable show joined by a troupe of amazing singers and musicians including Chinmayi, Yuvan Shankar Raja, SP Balasubramaniam, Karthik and many more, this will be a truly magical experience for Tamil music lovers in the United Kingdom’ – states Thamarai.com.< A campaign of relentless TV publicity is undertaken in all major Tamil TV stations in the UK. The concert will be held on Saturday, 24 August 2013 at the London O2 Arena in Greenwich. The prices of the tickets to see the questionable Isai Gnani’s thamasha is set at VVIP £250, VIP £150, General admissions £100 and £50.

நடிகர் விஜயை சந்திக்க ஜெயலலிதா மறுப்பு ! பாம்பின் கால் பாம்பறியும் ! பேராசையால் வந்தது வினை ?

வருங்கால முதல்வரை இந்நாள் முதல்வர் சந்திப்பார் என்று எப்படி அப்பனும் பிள்ளையும் எதிர்பார்த்தார்கள் ? வெங்காய ரசிகர் கூட்டம் போல  ஜெயாவும் ஏமாறுவார் என்றா நினைத்தார்கள் ?
விஜய நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் 9ம் தேதி திரைக்கு வரும் நிலையில், அப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதால்  முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தலைவா படத்தை திரையிட அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமா? என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், மேலும், போலீஸார் தங்கள் தரப்பில் இத்தனை திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறியிருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் புதன்கிழமை மாலை அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், ‘’நடிகர் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் இப்பிரச்சனையில் தலையிட்டு தமிழக அரசிடம் பேசினால் நல்ல தீர்வு கிடைக்கும். விஜய்யும், சந்திரசேகரும் பேசி நல்ல முடிவை தரும் பட்சத்தில், அரசு தரப்பின் ஒத்துழைப்பை பெற்றுத் தரும் பட்சத்தில் படத்தை வெளியிட எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை’’ என்று அபிராமி ராமநாதன் தெரிவித்திருந்தார்.

இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாக். ராணுவம் -ஏ.கே. அந்தோணி

இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாக். ராணுவ சிறப்புப் பிரிவு -ஏ.கே. அந்தோணி டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவுதான் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி விளக்கம் அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நாட்டை அதிரவைத்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்த தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டார். ஆனால் ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முரண்பாடு பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

சொத்துகுவிப்பு வழக்கில் மாயாவதி விடுதலை ! இனி தைர்யமா குவிக்கலாம் ?

புதுடில்லி: உ .பி., மாநில முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு எதிரான மனுவை
சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் இவருக்கு எதிரான ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும், இநத மனு தேயைற்றது என்றும் கூறியுள்ளது. மாயாவதி முதல்வராக இருந்த போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆதாரமில்லை என்று சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மீண்டும் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்ட மனு கமலேஷ் வர்மா என்பவரால் தொடரப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை நீதிபதி சதாசிவம் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தது. இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கில் மாயாவதிக்கு எதிரான வழக்கில் போதிய ஆதாரமில்லை என்றும், இது தேவையற்றது என்றும் சி.பி.ஐ., அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது

புதன், 7 ஆகஸ்ட், 2013

தூத்துக்குடி கலக்டர் ஆஷிஷ் குமார் திடீர் இடமாற்றம் !பின்னணியில் மணல்மாபியா ! அகிலேஷ் பாணியில் ஜெயலலிதா

CHENNAI: Close on the heels of Uttar Pradesh government suspending Durga Sakthi Nagpal for cracking down on the sand mafia, Ashish Kumar, the district collector of Tuticorin in Tamil Nadu, was transferred on Tuesday, hours after he ordered a raid on sand mines in his area. Kumar, a 2005 batch IAS officer, has been shunted out to a relatively inconspicuous post in Chennai as deputy secretary in department of social welfare and nutritious meal programme
Tamil Nadu official shunted out for taking on sand mafia
Following complaints of illegal mining in Vaippar and Vembar villages of Vilathikulam taluk in Tuticorin, teams led by his junior, assistant collector G S Sameeran, and revenue officer Kathiresan conducted the searches through the day. 
   தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டம் துறையின் துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் 22வது கலெக்டராக கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி பொறுப்பேற்ற ஆஷிஷ்குமார் இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பில் இருந்துள்ளார். இவரைவிட இதற்கு முன்பு 4 கலெக்டர்கள் மட்டுமே அதிக நாட்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தூத்துக்குடி மாவட்டத்தின் கலெக்டராக எம்.ரவிகுமார் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆடிட்டர் ரமேஷ் கொலை: கோவையில் 2 பேர் சிக்கினர் !

பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் படுகொலை செய்யப் பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் தீவிர விசாரணையில் பாளையங்கோட்டையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிட மிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் தொடர் விசாரணையில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் மேலும் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களில் 2 பேர் கோவையில் பதுங்கியிருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உறுதியான தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் கோவை விரைந்து வந்து முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் பிடிபட்டனர். அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

தலைவா'வை திரையிடமுடியாது!- சென்னை, செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி! சினிமாகாரனை சினிமாகாரிக்கு தெரியாதா ?

இந்தப் படத்துக்கு தலைவா என தலைப்பு வைத்ததிலிருந்தே சிக்கல்தான்.
காரணம், அடுத்த சிஎம் என்ற இலக்கை முன்வைத்து விஜய்யும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரும் பேசி வந்த பேச்சுகள் ஆட்சியாளர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை: அரசின் ஒத்துழைப்பின்றி தலைவா படத்தைத் தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. விஜய் நடித்த தலைவா படத்தை தமிழகத்தில் 500 ப்ளஸ் அரங்குகளிலும், வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்திருந்தனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பையில் இந்தப் படம் வெளியாகிறது. நாளை மறுநாள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தைத் திரையிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. 'தலைவா'வை தமிழகத்தில் திரையிடமுடியாது!- சென்னை, செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி தலைவா இப்போது படம் வெளியாகுமா என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு தலைவா என தலைப்பு வைத்ததிலிருந்தே சிக்கல்தான். காரணம், அடுத்த சிஎம் என்ற இலக்கை முன்வைத்து விஜய்யும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரும் பேசி வந்த பேச்சுகள் ஆட்சியாளர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் கதையும் அரசியல் களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், படத்துக்கு வரிவிலக்கு உள்பட எந்த சலுகையும் அரசுத் தரப்பிலிருந்து கிடைக்காத நிலை. இந்த சூழலில் படம் வரும 9-ம் தேதி, அதாவது நாளை மறுநாள் உலகெங்கும் 2000 அரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்தார். அந்த செய்தி வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் படத்தின் முன்பதிவு நிறுத்தப்பட்டது.

டெல்லியின் நீரா ராடியவை ஏன் கைது பண்ணவில்லை? ராசாவையும் கனிமொழியையும் கைது பண்ணுவதில் இருந்த அவசரம்?

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விவரங்களை விட எல்லை கடந்து பணப் பரிமாற்றம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்கள் நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களில் இருக்கின்றன என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களுடன் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த உரையாடல் பதிவுகளை பகிரங்கப்படுத்தி அரசு தகவல்களை தனியாரிடம் பரிமாறிக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அரசு சார்பற்ற நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் டாடா குழுமத்தின் வழக்கறிஞரோ இதை பகிரங்கப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் மீது ஏன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது உச்சநீதிமன்றம். மேலும் உரையாடல் பதிவுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வருமான வரித் துறை, சிபிஐயின் போக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

சந்துருவின் குடும்பமே ஒரு மோசடி கும்பல்.! சேரன் மகள் காதலன் அதிரவைக்கும் படங்கள்


சேரன் மகள் விவகாரம் தொடர்பாக இயக்குநர் அமீர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் சேரன் மகள் தாமினியின் காதலன் சந்துரு குடும்பம் பற்றி அதிரவைக்கும் ஆதாரங்களை காட்டினார்.சந்துருவின் சகோதரி  கவுரி, சேரன் மகள் விவகாரத்தில் தலையிட நீ யார் என்று கேட்டுள்ளார்.  சேரன் மகள் என் மகள்.  சேரனுக்காக நாங்கள் வராமல் வேறு யாரு வருவார்.சந்துருவின் குடும்பமே ஒரு மோசடி கும்பல்.  நல்ல குடும்பமாக மட்டும் இருந்தால் நாங்களே முன் நின்று இந்த காதலை சேர்த்து வைக்க நினைத்தோம்.   மோசடி கும்பல் என்பதை தெரிந்தும் எங்கள் வீட்டு பெண் ணை எப்படி மனசு வந்து சேர்ந்து வாழ அனுமதிக்க முடியும்.சந்துருவின் குடும்பம் மோசடி கும்பல் என்பதற்கு ஆதாரமாக நக்கீரன் இதழ், மற்றும் குடும்ப அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களை செய்தியாளர்களுக்கு கொடுத்தார் அமீர். அதிரவைக்கும் ஆதாரம் (படங்கள் )

கோச்சடையான் ஹாலிவூட் போகிறதாம் ! வழமைபோல பாமரத்தனத்தை குறிவைத்து பணம்பறிக்கும் பில்டப் !

நவீன கடவுள் எளிமையின் சிகரம் ரஜனியின் பங்களாக்கள் சில சாம்பிள் மட்டுமே இவை
கோச்சடையான் ஒரு சர்வதேச ( பில்டப் ) படம் என்று தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படம் மூலம் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குனர் அவதாரம் ( பில்டப் )எடுத்துள்ளார். முதன் முதலாக தமிழ் படத்தில் நடித்துள்ள இந்தி நடிகை தீபிகா இந்த படத்தை பெரிதும் (பில்டப் )எதிர்பார்க்கிறார்.
கோச்சடையானில் விஷுவல் எபெக்ட்ஸ் மிகவும் அருமையாக ( பில்டப்) வந்திருக்கிறது. இதுவரை வந்த எந்த இந்திய படத்திலும் இல்லாத
அளவுக்கு இந்த படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ்( பில்டப் ) உள்ளது என்று தீபிகா தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் படம் ரஜினியின் பிறந்தநாளன்று வெளியாகுமா என்பது பெரிய கேள்வியாக( பில்டப் )  உள்ளது
tamil.oneindia.in

வடிவேலு: 20 படங்களில் நடிக்க போகிறேன் ! வாங்கண்ணே நீங்கதேன் இன்னைக்கும் உண்மயான சூப்பர் ஸ்டார் ! தொலைகாட்சிஎல்லாம் உங்களை வச்சுதேன் பிழைக்குது

நீ............ண்ட இடைவேளைக்குப்பிறகு தெனாலிராமன் படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. இப்படத்தை எப்படியும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவந்து விடவேண்டும் என்கிற மும்முரத்தில் இருக்கிறார். இடைவெளியை நிரைப்பும் விதமாக இந்தப்படம் இருக்கும் என்று மிகவும் நம்புகிறார் வடிவேலு. இந்தப் படம் தனது பலத்தை நிரூபிக்கும் என்று மார்தட்டி சொல்லி வருகிறார் வடிவேலு. இப்போ என் காமெடிப்பஞ்சம் இருக்குது. இந்தப்படம் ரிலீஸுக்கு பிறகு இருக்காது. இந்தப்பஞ்சத்தை எல்லாம் போக்குறதுக்கு தெனாலிராமன் ரிலிஸூக்கு பிறகு தொடர்ச்சியா கேப் விடாம இரவு பகலாக 20 படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளப்போகிறேன்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறார் வடிவேலு.

சுப்ரீம் கோர்ட்: நீரா ராடியா டேப் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவங்க நம்ம ஆளுங்க! இந்த கனிதான் நம்ம ஆளு இல்லைங்க !

நீரா ராடியா டேப் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அரசு மீது சுப்ரீம் கோர்ட் எரிச்சல்! டெல்லி: அரசியல் தரகர் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் மீது உரிய நடவடிக்கையை இன்னமும் எடுக்காமல் இருப்பது ஏன் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்களுடன் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த உரையாடல் பதிவுகளை பகிரங்கப்படுத்தி அரசு தகவல்களை தனியாரிடம் பரிமாறிக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அரசு சார்பற்ற நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் டாடா குழுமத்தின் வழக்கறிஞரோ இதை பகிரங்கப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் மீது ஏன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது உச்சநீதிமன்றம். மேலும் உரையாடல் பதிவுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வருமான வரித் துறை, சிபிஐயின் போக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. இந்த வழக்கு விசாரணை வரும் 6-ந் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. அதற்குள் இரு துறைகளும் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மீண்டும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "தொலைபேசி உரையாடல் பதிவுகள் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதா? அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே? இப்படி நீண்ட தாமதம் என்பது சரியானது அல்ல என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இருப்பினும் அரசுத் தரப்பில் இன்று பதிலளிக்க கால அவகாசம் கோரியிருந்தார். இன்றும் இந்த வழக்கின் மீது விசாரணை நடைபெற இருக்கிறது.
tamil.oneindia.in

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 61.80 என்ற அளவுக்கு செவ்வாய்க்கிழமை வீழ்ச்சி அடைந்தது.
செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. மேலும் சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று தொய்வடைந்த நிலையில், வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அதிக அளவில் டாலர்களை வாங்க முன்வந்தனர்.
திங்கள்கிழமை செலாவணி சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தின் இறுதி நிலவரப்படி, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60.88 ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை அன்னிய செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோதே, ஒரு டாலருக்கு ரூ. 61.05 தர வேண்டியதாக இருந்தது. காலையில் வர்த்தகம் தொடர்ந்தபோது, ரூபாய் மதிப்பு மேலும் முன் எப்போதும் இல்லாத நிலையான 61.80 என்ற வரலாறு காணாத வகையில் ரூபாய் மதிப்பு குறைந்தது. பின்னர் 61.43 என்ற நிலைக்கு சற்று உயர்ந்தது. dinamani.com

செல்வராகவன் துண்டு துண்டாக பிலிம் பண்ணுவார் ! Parallel world? விறுவிறுப்பின் விறு விறு காமெண்ட்ஸ்

செல்வராகவனின் டைரக்ஷனில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட
‘இரண்டாம் உலகம்’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது என்று சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு (டப்பிங்) மொழிகளில் வெளிவரவுள்ள இ.உ., தமக்கு ஒரு டர்ன்ங் பாயின்ட்டாக இருக்கும் என்பது ஆர்யாவின் எதிர்பார்ப்பு. இந்தப் படத்தில் இவருடன் அனுஷ்கா ஹீரோயினாக நடித்துள்ளார். ஹீரோ, ஹீரோயின் இருவருக்குமே, படத்தின் முழு கதை உத்தரவாதமாக இதுதான் என்று தெரியாதாம்! 
அதுதான், செல்வராகவன் ஸ்டைல். படத்தை துண்டு துண்டாக பிலிம் பண்ணுவார். அந்தந்த காட்சிகளில் நடிக்க வேண்டியதை மட்டுமே, நட்சத்திரங்களுக்கு சொல்வார். ஷூட்டிங் முழுமையாக முடிந்து, எடிட் பண்ணி திரையில் பார்க்கும்போதுதான், அதில் நடித்தவர்களுக்கே, தாம் நடித்த காட்சிகள் எந்தெந்த இடங்களில் பிட் ஆகின்றன என்று தெரியவரும்! செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ எடுத்தபோது, அதில் நடித்த மற்றொரு டைரக்டரான பார்த்திபனுக்கு நடந்ததுகூட அதுதான். கொடுக்கப்பட்ட டயலாக்கை, செல்வா சொல்லும் முகபாவத்துடன் ஒப்பிக்க வேண்டியதுதான். அதில் தனது கேரக்டர் ஏதோ ஒரு சோழ மன்னன் என்பதை தவிர, படத்தின் ப்ரீவியூவரை, இந்தக் கதையில் சோழ மன்னன் எங்கே வருகிறார் என்பது பார்த்திபனுக்கு தெரியாது. இரண்டாம் உலகத்தில் நடந்ததும் அதுதான்! ரசிகர்கள் மட்டுமல்ல, ஹீரோ, ஹீரோயினும் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளார்கள்!

ஜேம்ஸ் வசந்தன் ஹேமலதா: கமிஷனரும், ராதாவும் ஒரே மாநிலத்தை KERALA சேர்ந்தவர்கள் ! சாதாரண விஷயத்திற்கு பெண் வன்கொடுமை வழக்கா?


எங்கள் வீட்டின் பின்புறம் ராதா பிரசா:த் என்பவர் வீடு கட்டி உள்ளார். இவர்கள் வீடு கட்டிய நாள் முதல் தொடர் பிரச்னைதான். 3 ஆண்டுகளாக தொடர்ந்து தகராறு செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ராதாவை நான் கத்தியால் குத்த முயன்றதாக பொய் புகார் அளித்தார். சென்னை : சாதாரண குற்றத்திற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனைவி ஹேமலதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது வீட்டு அருகில் வசித்து வரும் ராதா பிரசாத் (60) என்ற பெண்ணுக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது.இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். அதில் “ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த 4ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

ஆக்கிரமித்த நிலத்தை திருப்பி கொடுப்பதாக அதிமுக தம்பிதுரை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு

ஆவடி அருகே தனியாரிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை
உரிமையாளர்களிடமே திரும்ப வழங்குவதாக, அதிமுக நாடாளுமன்றக் குழு தலைவர் தம்பித்துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த உமா பிரசாத் மற்றம் சலீம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தம்பித்துரைக்கு சொந்தமான கல்லூரி ஆவடிக்கு அருகே செயல்பட்டுவருவதாகவும், அந்தக் கல்லூரிக்கு அருகே உள்ள இடங்களை தம்பித்துரை தரப்பினர் மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கி வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக தங்களுடைய நிலங்களை விற்கும்படி மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

சமாஜ்வாதி எம்.பி.,யை அடிக்க பாய்ந்த மணிசங்கர் அய்யர்

நீ ஒரு பாகிஸ்தான் ஏஜென்ட்,'' என, சமாஜ்வாதி எம்.பி., நரேஷ் அகர்வால் விமர்சனம் செய்ததால், ஆவேசம் அடைந்த, காங்கிரஸ் எம்.பி., மணிசங்கர் அய்யர், கைகளை முறுக்கியபடி, அவரை நோக்கி பாய்ந்தார். இதனால், ராஜ்யசபாவில், கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. சக எம்.பி.,க்கள் தலையிட்டு, விலக்கி விட்டதால், நிகழவிருந்த கைகலப்பு தவிர்க்கப்பட்டது.
கடும் அமளி:ராஜ்யசபா நேற்று காலை கூடியதும், ஜம்மு - காஷ்மீரில், ராணுவ வீரர்கள் ஐந்து பேர், பாக்., ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பெரிய அளவில் வெடித்தது. "இந்தப் பிரச்னை குறித்து, உடனே விவாதம் நடத்த வேண்டும்' என, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் பலவும் கோரிக்கை விடுத்தன; அத்துடன், அமளியிலும் ஈடுபட்டன. இந்த அமளிக்கு இடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பேசியதாவது: ஐந்து ராணுவ வீரர்களை, இந்தியா பறிகொடுத்திருக்கிறது.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

ஓராண்டில் 11 லட்சம் கருக்கலைப்புகள் ! இதைவிட வெள்ளைக்காரன் கலாசாரமே மேல்?

கருக்கலைப்பு மற்றும் பிரசவகால மரணங்கள் தொடர்பாக
மாநிலங்களவையில் இன்று எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:- நாட்டில் 2008-09 ஆண்டில் 11.06 லட்சம் கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பதிவுத்துறை தலைவர் தகவலின்படி, பிரசவகால மரணத்தில் 8 சதவீத மரணத்திற்கு கருக்கலைப்பு காரணமாக இருந்துள்ளது. 2008-ல் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்தில் 13 சதவீத தாய்மார்கள் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. ஒரு லட்சம் பாதுகாப்பற்ற கருக்கக்கலைப்பில் 200 மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிக அளவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் நடக்கும் இடமாக இந்தியா இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது அந்த அறிக்கையில் இல்லை. போதுமான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்கி சுகாதார வசதிகளுடன் பாதுகாப்பான கருக்கலைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

பழங்குடி இந்திய நாடோடிகளை கொன்ற ஹங்கேரியர்களுக்கு தண்டனை ! Who's Killing Hungary's Gypsies?

 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் ஹங்கேரியின் வடகிழக்கில்
தட்டார்சென்ட்கியோர்கி பகுதி கிராமங்களில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட  நாடோடிக் குழுவினர் வசித்து வந்தனர். ஹங்கேரியின் 10 மில்லியன் மக்கள் தொகையில் இவர்களின் சதவிகிதம் ஏழாகும். இனவெறி காரணமாக அர்பட் கிஸ், இஸ்ட்வான் கிஸ், சோல்ட் பெடோ, சோண்டோஸ் என்ற நால்வரும் சேர்ந்து 14 மாதங்களுக்குள் இவர்கள் மீது ஒன்பது முறை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதற்கு இவர்கள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், பெட்ரோல் குண்டுகள் போன்றவற்றை உபயோகப்படுத்தியுள்ளனர். ஒருமுறை நடத்திய தாக்குதலில், இவர்கள் ஒரு வீட்டிற்குத் தீ வைத்துள்ளனர். அங்கிருந்த நாடோடி தந்து, தனது ஐந்து வயது மகனுடன் தப்பி ஓட முயற்சித்தபோது, அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இதுபோல் மொத்தம் ஆறு பேர் இவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்கள் நாடோடி இன மக்களிடையே பயத்தைத் தூண்டியது. இந்த வன்முறைத் தாக்குதல்கள் ஹங்கேரி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின. காவல்துறையினரின் மெத்தனமே இதற்குக் காரணம் என்று அவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

இந்திய எல்லையில் 5 வீரர்கள் பலி ! அந்தோணி விளக்கம்!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் செவ்வாய்க்கிழமை காலை காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையான சக்கந்தாபாத் அருகே, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து ராணுவ மந்திரி ஏ.கே அந்தோணி மக்களவையில் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இந்திய எல்லையில், பூஞ்ச் செக்டாரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரி மற்றும் 5 வீரர்கள் தாக்கப்பட்டனர். பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த சுமார் 20 தீவிரவாதிகள், அவர்களுடன் பாகிஸ்தான் ராணுவ சீருடையில் இணைந்து வந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர்.

ஜேம்ஸ் வசந்தனின் வீட்டை அபகரிக்கும் முயற்சியே கைது ! பின்னணியில் அனைவரும் மலையாளிகளே! கமிஷனர் ஜார்ஜ், ராதா வேணு பிரசாத்,ராதாவின் மகன் லண்டன் துதராலய அதிகாரி

Sixty three-year-old Radha and her husband Venuprasad, an advisor of the UK-based Warwick University in India, reside at VGP Golden Seaview in Palavakkam. 
.சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரும், சினிமா இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனை போலீஸார் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்திருக்கிறார்கள். மொத்தம் 4 வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் சிறையில் இருக்கிறார்.இவ்வளவு பெரிய குற்றச்சாற்றுக்கு ஆளாகும்படி ஜேம்ஸ் வசந்தன் என்ன செய்தார்? அவர் மீதான புகார் என்ன?ஜேம்ஸ் வசந்தனின் பக்கத்து வீட்டில் வசிக்கும், ராதா வேணு பிரசாத் என்ற பெண்மணியை பார்த்து ஆபாசமாக சைகை செய்தாராம். அதற்குத்தான் இத்தனை களேபரமும். பெண்மணி என்று குறிப்பிட்டது மரியாதைக்காக. 68 வயது கிழவியாம் இந்த ராதா வேணு பிரசாத். இந்த 68 வயது பேரிளம் பெண்ணுக்கு ஜேம்ஸ் வசந்தன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்பதே சந்தேகத்தை எழுப்பும் விஷயம். ராதா வேணு பிரசாத்தின் பின்னணியும் அதை உறுதி செய்கிறது.ராதா வேணு பிரசாத் தனது பக்கத்து வீட்டை - அதாவத ஜேம்ஸ் வசந்தனின் வீட்டை தனது மகனுக்காக வாங்க நினைத்து கேட்டிருக்கிறார். அவரின் மகன் லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனில் அதிகாரியாம். ஆனால் வீட்டை விற்க ஜேம்ஸ் வசந்தன் மறுத்திருக்கிறார். இதன் காரணமாக ராதா வேணு பிரசாத் வன்மத்துடன் பலமுறை பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கிறார். கடைசி அஸ்திரமாக கமிஷனர் ஜார்ஜின் மூலம் செக்ஸ் டார்ச்சர் என்று சிறையில் அடைத்திருக்கிறார்கள்.கமிஷனர் ஜார்ஜ் மலையாளி. ராதா வேணு பிரசாத்தின் உறவுக்காரர்களுக்கு வேண்டப்பட்டவர். மலையாளிகள் நினைத்தால் 68 வயசு பேரிளம் பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செய்ததாக தமிழக்த்தின் பிரபலமான ஒருவரையே சிறையில் தள்ள முடிகிறது. இதுவே கேரளாவில் நடக்குமா? போராட்டம், சாலை மறியல் என்று களேபரப்படுத்திவிட மாட்டார்களா? இப்படியொரு அநியாயம் நடந்தும் ஜேம்ஸ் வசந்தன் பணிபுரிகிற தொலைக்காட்சி ஊடகங்களும், சினிமாதுறையும் மௌனம் காத்துக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை... வேதனை.முதல்வர் தலையிட்டு இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. tamil.webdunia.com

ஜெயலலிதாவின் துரோகங்களை பட்டியலிட முற்பட்டால்! இன்னும் 170000 TV குடோனில் வீணாகிறது !

சென்னை: 'ஜெயலலிதா துரோகங்களை பட்டியலிட முற்பட்டால்
என்னவாகும்?' என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: 'உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவு, தமிழக மக்களுக்கு கருணாநிதி துரோகம், ஜெயலலிதா குற்றச்சாட்டு' என்ற தலைப்பில் முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை ஏடுகளிலே இன்று வெளிவந்துள்ளது. நான் எப்போது, எந்த தேதியில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை கொடுத்திருக்கிறேன்? ஜெயலலிதா தேதியை குறிப்பிட்டோ அல்லது ஏடுகளை குறிப்பிட்டோ சொல்ல முடியுமா?
ஜெயலலிதாவே தனது அறிக்கையில், 'தேசிய உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்திய போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்போது ஆதரிக்க போவதாகத் தெரிவித்துள்ளது' என்று கூறியிருக்கிறார். எனவே அந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்திய போது திமுக அதை எதிர்த்தது என்பதை அவரே ஒப்புக் கொண்டுவிட்டு, தற்போது அறிக்கையில் திமுக தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து விட்டதாக கூறுகிறார்.

திருச்சி விழாவில் பெண்களுக்கு சாட்டை அடி

தா.பேட்டை:திருச்சி அருகே நேற்று பேய் விரட்டும் திருவிழாவில் பெண்களை பூசாரிகள் சாட்டையால் அடித்தனர்.திருச்சி மாவட்டம்
தாத்தையங்கார்பேட்டை அடுத்த சோழம்பட்டியில் சோழராஜா கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பெண்களுக்கு பேய் விரட்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 100 ஆண்டுகளாக இந்த விழா நடக்கிறது. நேற்று நடந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். மண்டு கருப்பு, கஸ்தூரி அம்மாள், அரவாயி, அரவாயி சின்னக்கோயில் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் கோயில் முன்பு 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஈரத்துணியுடன் தலைவிரி கோலமாக அமர வைக்கப்பட்டனர். பெண்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் பூசாரிகள் தண்ணீர் தெளித்தனர். பெண்களிடம், ‘நல்லா இருக்கியா‘ என்று பூசாரிகள் கேட்கின்றனர். ‘நல்லா இருக்கேன் சாமி‘ என்று சொல்லும் பெண்ககளுக்கு பேய் பிடித்திருக்கவில்லை என்று முடிவு செய்கின்றனர். பதில் சொல்ல மறுத்து ஆக்ரோஷமாக ஆடும் பெண்களை பூசாரி சாட்டையால் அடிக்கிறார். சாட்டையடி வாங்கிய பெண்கள், ‘நான் போயிடுறேன்‘ என்று பதில் அளித்தால் அடிப்பதை நிறுத்தி விடுகிறார். ‘இனி வர மாட்டேன்‘ என்று வேல், சாட்டை மீது சத்தியமும் வாங்கப்படுகிறது.

ஆறுகளில் மணல் அள்ளக்கூடாது: பசுமை தீர்ப்பாயம் அதிரடி

புதுடில்லி: "முறையான உரிமம் பெறாமல் அல்லது சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், எந்த ஆற்றிலும் மணல் அள்ளக் கூடாது. இந்த உத்தரவு, நாடு முழுவதற்கும் பொருந்தும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு: ஆற்றுப் படுகைகளில், முறையான உரிமம் பெறாமல், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகின்றன. மணல் கடத்தல்காரர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். உ.பி.,யில், பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, அம்மாநில அரசு, "சஸ்பெண்ட்' செய்துள்ளது. மற்றொரு இடத்தில், மணல் கடத்தல்காரர்களுக்கு எதிராக குரல் கொடுத்த ஒருவரை, அவரின் வீட்டில் வைத்தே, பட்டப் பகலில், மணல் மாபியாக்கள் கொலை செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள ஆறுகளில், தினம்தோறும் லட்சக்கணக்கான டன் மணல், சட்ட விரோதமாக அள்ளப்படுகிறது.