திங்கள், 9 ஜனவரி, 2012

பார்ப்பன சிவச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருதகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 5 வருடங்களாக ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விழாக்காலத்தின் போதும், தினசரி இரவு 8.30 மணி அர்த்த ஜாம பூஜையின் போதும் பழம்பெரும் இசைக்கருவிகளான உடன், கொம்பு, சங்கு, நெடுந்தாரை, எக்காலம், உடுக்கை  போன்ற கைலாய இசைக்கருவிகளை வாசித்து சிறுவர்கள் இளைஞர்கள் ஆன சிவனடியார்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.
இந்த இசையின் காரணமாக இரவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. சாதாரண உழைக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இது அர்ச்சகர்களான  கோயில் சிவாச்சாரியார்கள் கண்ணை உறுத்தியது. ஊர் பெரிய மனிதர்கள் சிலரின்  மூலம் கோயில் நிர்வாக அதிகாரியிடம்  அதிக சத்தமாக இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கொடுத்த  புகாரின் மூலம் மேற்படி சிவனடியார்கள் இசைக்கருவிகளை வாசிக்க கூடாது என 13.07.2011 தடை விதிக்க பட்டது.

பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

பெரியாரையும் சேர்த்து திராவிட இயக்கம் தமிழர்களுக்கு தூரோகம் செய்துவிட்டது என்று சொல்கிறார்களே உண்மையா?
-தமிழ்ப்பித்தன், திட்டக்குடி.
புதுசா இப்ப நிறையப் பேர் அப்படி கிளம்பி இருக்காங்க. தமிழகத்தில் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக புரட்சிகரமாக போராடிய திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’ என்று நாம் வாய பொளக்குறதுக்குள்ளேயே திராவிட இயக்கத்தின் கழிசைடையான ஜெயலலிதாவை ஆதரித்து தங்களை யார் என்று அடையாளம் காட்டுகிறார்கள்.
கலைஞரை கடுமையாக விமரிசிக்கிறார்கள்.
கருப்பையா மூப்பனாரை மாபெரும் தியாகி என்கிறார்கள்.
திமுகவை ‘ஜாதியை வளர்க்கும் கட்சி’ என்று விமர்சிக்கிறவர்கள்; தமிழக்கதில் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்து ஜாதி ஆதிக்கத்தை நிலைநாட்டிய தீவிர ஜாதிவெறியர், ஊழல் மன்னன் ராஜாஜியின் ஆட்சியை நேர்மையான ஆட்சி என்று பாராட்டுகிறார்கள்.
பல கோல்மால் பேர்வழிகள் இப்படி பெரியார் இயக்கத்தை, திராவிட இயக்கத்தை கடுமையான விமசிக்கிறார்கள்.
உண்மையில் இவர்களுக்கு பெரியாரை அல்ல, விஜயகாந்தை விமர்சிப்பதற்குக்கூட யோக்கியதை இல்லை.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக பொதுக்குழு கூடுகிறது!


Karunanidhi
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
உள்கட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், 2ஜி விவகாரத்தில் தணிக்கைக் குழு அறிக்கை தொடர்பாக பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இக் கூட்டம் கூடும்.
2ஜி வழக்கில் கனிமொழி விடுதலைக்குப் பின் நடக்கும் முதல் திமுக பொதுக் குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலைகள் வைக்க 2500 கோடியைக் கொட்டிய மாயாவதி!

லக்னோ: தனக்கும், தனது கட்சி சின்னமான யானைக்கும், சட்ட மேதை அம்பேத்கருக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்ஷிராமுக்கும் சிலைகள் வைக்க ரூ. 2500 கோடிக்கும் மக்கள் பணத்தைக் கொட்டி விரயமாக்கியுள்ளார் மாயாவதி. தற்போது இந்த சிலைகளை மூடும் பணிக்கும் மக்கள் பணமே பயன்படுத்துவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உ.பி. முதல்வராக மாயாவதி வந்தது முதல் ஏகப்பட்ட பேருக்கு சிலைகள் அமைத்துள்ளார். புத்தமதத்தைச் சேர்ந்த மற்றும் தலித் தலைவர்கள் பலருக்கும் அவர் சிலை வைத்துள்ளார். சிலையை வைத்து அரசியல் செய்த ஒரே தலைவி இவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு ஏகப்பட்ட பேருக்கு சிலைகள் வைத்துள்ளார் மாயாவதி.

தியாகராயநகரில் சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

சென்னை தியாகராயநகரில் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளை தற்காலிக வியாபாரத்திற்காக 6 வாரங்களுக்குத் திறக்கலாம் என சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை தியாகராயநகரில் பல வியாபார நிறுவனங்களின் கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து இதுபற்றி நடவடிக்கை எடுக்க சென்னை சிஎம்டிஏவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தி.நகர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள 28 வியாபார நிறுவனங்களின் கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக சென்னை சிஎம்டிஏவும் அறிவித்தது. விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள 26 வணிக வளாகங்களுக்கு கடந்த அக்டோபர் 30ஆம் தேதி சிஎம்டிஏவும், மாநகராட்சியும் சீல் வைத்தது.

நக்கீரன் இதழுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு!

Print E-mail

தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மோகன் நாராயணன் நக்கீரனின் தீவிர வாசகர்களில் ஒருவர். இவரது மகன் ஸ்ரீராம்  அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நக்கீரனில் வெளியாகும்  முக்கிய செய்திகளை ஸ்கேன் செய்து தனது மகன் ஸ்ரீராமுவுக்கு இமெயிலில் அனுப்புவது மோகன் நாராயணனின் வழக்கம்.
அதுபோல, ஜனவரி 7 நக்கீரன் இதழில்  ’ஹெலன் கோர்டன்ஸ் கிறிஸ்துமஸ்’   என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை மோகன் நாராயணன் , ஸ்ரீராமுக்கு மெயில் அனுப்பி வைத்திருக்கிறார். அத்துடன் இந்த ஆண்டு நக்கீரனுக்கு வெள்ளி விழா ஆண்டு என்பதையும் தெரியப்படுத்தி இருக்கிறார்.

நாசா இன்ஜினியர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வழக்கமாம்.

ராமதாஸ் மாமியார் பெயரில் 550 ஏக்கர், தங்கச்சி பெயரில் 40 கோடியில் மாளிகை, அக்கா பெயரில் சொத்துக்கள்-


Ramadoss
விழுப்புரம்: தமிழ், தமிழர் என்று பேசிக் கொண்டு எங்கு தனது தோட்டம், அலுவலகம், மக்கள் டிவி ஆகியவற்றில் மலையாளிகளுக்கும், தெலுங்கர்களுக்கும்தான் வேலை கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஏற்காட்டில் மாமியார் பெயரில் 550 ஏக்கர் தோட்டம், 40 கோடியில் தங்கை பெயரில் மாளிகை, சென்னையில் அக்கா பெயரில் சொத்துகள் என்று வாங்கிக் குவித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார் பண்ருட்டி வேல்முருகன்.
விழுப்புரத்தில் நடந்த இளம்புயல் பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு வேல்முருகன் பேசுகையில் டாக்டர் ராமதாஸை கடுமையாக சாடிப் பேசினார். தமிழ், தமிழர் என்று வசனம் பேசிக் கொண்டு மலையாளிகளையும், தெலுங்கர்களையும்தான் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பம் ஆதரித்து, வாழ வைத்துக் கொண்டிருப்பதாக அப்போது குற்றம் சாட்டினார் வேல்முருகன்.

கட்சி பதவியிலிருந்து பழ. கருப்பையா நீக்கம்:ஜெ., அதிரடி

சென்னை:அ.தி.மு.க., கொள்கை பரப்பு இணைச் செயலர் பதவியில் இருந்து பழ. கருப்பையா நீக்கப்பட்டுள்ளார்.
காமராஜர் காலத்தில் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சியிலும் இணைந்து பணியாற்றியவர் பழ.கருப்பையா. பின்னர் பல கட்சிகளுக்கு தாவி, கடைசியாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க.,விற்கு தாவினார். அ.தி.மு.க.,வில் தலைமைக் கழக பேச்சாளராக மாறிய பழ.கருப்பையா, கட்சிப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வந்தார். தி.மு.க., ஆட்சிக் காலத்தில், இவரது வீடு சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது.

தனம்-பார்ப்பனியம், தனக்கு லாபம் என்றால் அது தன் ஆச்சாரத்தைக் கைவிட்டுவிடும்

தமிழ் சினிமாவின் துணிச்சல்-கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் _தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்
நாடகம், சினிமாவில்கலைவடிவம் என்ற பேரில் பார்ப்பனியஇந்து மதத்தின் புராணக் குப்பைகளை நியாயப்படுத்தியும், இதுபோதாதற்கு காங்கிரஸ் சார்பு கலைஞர்கள் சுதந்திர போராட்ட நடவடிக்கைகள்என்கிற கவுரமான பெயரில் பார்ப்பனிய, இந்து மத பிரச்சாரங்களுக்கு பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்தும், தங்கள் கலை சேவையை செய்து கொண்டிருந்தார்கள்.
இப்படியாக, தமிழ்நாடெங்கும் ஒரே பஜனை சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில், நடிகவேள் எம்.ஆர். ராதா தமிழக நாடக மேடையெங்கும் சமரசமே இல்லாமல் பெரியாரின் ஒற்றைப் போர்வாளாக சுழன்று கொண்டிருந்தார். ஆனால் திரைத்துறையில் இந்த எதிர்ப்புக் குரல் மிக காலதாமதமாகத்தான் ஒலித்தது.

நக்கீரன் கோபால் மீது நெல்லை தொழிலதிபர் திடீர் போலிப் புகார்!

நெல்லை: நக்கீரன் ஆசிரியர் கோபால், தன்னிடம் ரூ. 20 லட்சம் பண மோசடி செய்து விட்டதாக திடீரென நெல்லையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனர் கருணாசாகரிடம் புகார் கொடுத்துள்ளார்.போலிப்

நக்கீரன் இதழில் முதல்வர் ஜெயலலிதா குறித்த செய்தி வெளியாகி அதுதொடர்பாக அதிமுகவினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் திடீரென இந்தப் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நெல்லை ராஜாஜி நகரை சேர்ந்த ராமன் என்பவர் நெல்லை போலீஸ் கமிஷனர் கருணாசாகரிடம் கொடுத்த புகாரில்,
எனது நண்பர் பாளையை சேர்ந்த டாக்டர் சுப்பிரமணிய பாலு லண்டன் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது லண்டன் போலீசார் பாலியல் குற்றவழக்கு பதிவு செய்துள்ளனர்.

அண்டை மாநிலத்தில் தண்ணீர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: அப்துல்கலாம் ஆலோசனை

சென்னை: தமிழக நதிகளை இணைத்து நீர்வழிச் சாலைகள் அமைத்தால், அண்டை மாநிலங்களில் தண்ணீர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.
சென்னை புத்தக கண்காட்சி விழாவில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், சண்முகம் வரவேற்புரையாற்றினார். கவிஞர் சிற்பி, நாகை முகுந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: எனது பத்தாவது வயதில், 1941 ம் வருடம் என்னுடைய சகோதரர், முஸ்தபாகான் அவருடைய நண்பர், எம்.ஜி.ஆர்.மாணிக்கம் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். அவர்கள், இருவரும் கம்யூனிசம் பற்றி அடிக்கடி விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.

நக்கீரன் மீது இன்றும் அதிமுகவினர் தாக்குதல்-திருமாவளவன் கண்டனம்

சென்னை: நக்கீரன் அலுவலகம் மீது இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். வழக்கம் போல போலீஸார் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.
நேற்று வெளியான நக்கீரன் இதழில் முதல்வர் ஜெயலலிதா குறித்த செய்தி இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் குவித்தனர்.
சென்னை ராயப்பேட்டை ஜானிஜான் கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். சோடாபாட்டில், பாறாங்கல், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர்.

பென்னிகுயிக்குக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்கும்

தமிழர்கள், ஆங்கிலேயர்களின் ரத்தமும், சதையும் கலந்து உருவான முல்லைப் பெரியாறு அணை! 

நூற்றுக்கணக்கான மக்களால் நன்றியுடன் வழிபடப் போகிறார். அப்படிப்பட்ட பென்னிகுயிக்குக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்கும் என்ற செய்தி தென் தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
1841ம் ஆண்டு புனே நகரில் பிறந்த வெள்ளைக்கார இந்தியர்தான் கர்னல் ஜான் பென்னிகுயிக். இங்கிலாந்து ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். சென்னை மாகாண சட்டசபை கவுன்சிலில் உறுப்பினராகவும் இருந்தவர்.

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளில் வழக்கு-அதிமுகவினர் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

Nakkeeran Gopal
சென்னை: நக்கீரன் வார இதழ் கடுமையான தாக்குதலுக்குள்ளான நிலையில் அதன் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேசமயம், நக்கீரன் வார இதழ் அலுவலம் மீது தாக்குதல் நடத்திய அதிமுக எம்எல்ஏ அசோக் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது.
நக்கீரன் வார இதழில் முதல்வர் ஜெயலலிதா குறித்த கட்டுரை இடம் பெற்றிருந்தது. அதில் மாட்டுக் கறி சாப்பிடும் மாமி நான் என்ற தலைப்பில் சசிகலா தரப்பு கூறியதாக கட்டுரை இடம் பெற்றிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் நேற்று நக்கீரனைக் குறி வைத்து கடும் தாக்குதலில் இறங்கினர்.
தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழ்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு-7 பெண்கள் அடித்துச் செல்லப்பட்டனர்!

பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பெண்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஒடப்பள்ளியில் காவிரி ஆற்றின் குறுக்கே மின் திட்ட கதவணை உள்ளது. இங்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கால், பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்ட 7 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.
தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

கமல்ஹாசனும், கிரேஸி மோகனும்!நண்பர்களும் 40 திருடர்களும்

மீண்டும் கமல்ஹாசனும், கிரேஸி மோகனும் இணைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மைக்கேல் மதன காமராஜன் முதல் ஏகப்பட்ட படங்களில் இணைந்து காமெடியில் கலக்கியவர்கள் கமல்ஹாசனும், கிரேஸி மோகனும். நாடக நடிகராக மட்டுமே இருந்து வந்த கிரேஸி மோகனுக்கு மைக்கேல் மதன காமராஜன் மூலம் திரையுலகில் பெரிய மேடை அமைத்துக் கொடுத்தவர் கமல் - அதற்கு முன்பே சில படங்களில் கிரேஸி மோகன் வசனம் எழுதியிருந்தபோதும் மைக்கேல் மதன காமராஜன்தான் அவருக்குப் பெரிய பிரேக்கைக் கொடுத்த படமாகும்.

அதன் பின்னர் இருவரும் இணைந்த படங்கள் எல்லாம் அதிரி புதிரி அதிரடி காமெடிக் கலாட்டாக்களாக அமைந்தன. இருவரும் இணைந்து கொடுத்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்.

கனிமொழி கையில் இளைஞர் அணி?மூத்த திமுக நிர்வாகிகளுக்கு விரைவில் 'விஆர்எஸ்


செங்கல்பட்டு: இளைஞர் அணியினருக்கு வயது நிர்ணயம் செய்யப்படுவதைப் போல மாநில அளவிலும் நிர்வாகிகளுக்கு வயது நிர்ணயம் செய்யப்படும். அப்போது நானே கூட மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக இளைஞர் அணிச் செயலாளராகவும் இருக்கும் 54 வயது மு.க.ஸ்டாலின் சமீபத்தில், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு திமுக இளைஞர் அணியில் இடமில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது திமுக இளைஞர் அணியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் அவர் மும்முரமாக இறங்கியுள்ளார்.

முல்லைப் பெரியாறு விவகாரம்-கேரள அரசு பொய் பிரச்சாரம் அம்பலம்

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் பொய் பிரச்சாரம் அம்பலம் ஆகியுள்ளது.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் முல்லைப் பெரியாறு உடையும் நிலையில் இருப்பதாக மக்கள மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றனர். அணை உடைந்தால் 5 மாவட்டஙகளைச் சேர்ந்த 50 லட்சம் மக்கள் அரபிக்கடலில் கலந்து விடுவார்கள் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

சேலம்: பணத்திற்காக 2 மகன்களை அடமானம் வைத்த தந்தை

சேலம்: குடும்ப வறுமை காரணமாக ஒருவர் தனது 2 மகன்களையும் ரூ.40,000க்கு அடமானம் வைத்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பொம்மிடியைச் சேர்ந்தவர் தங்கராஜ். கூலித் தொழிலாளரான இவருக்கு விஜயா என்ற மனைவியும், மேகநாதன்(9), சரத்குமார்(8) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
குடும்ப வறுமையால் அவர் தனது 2 மகன்களையும் சேலம் மாவட்டம், சப்பாணிப்பட்டியைச் சேர்ந்த செங்கோடன் என்பவரிடம் ரூ.40,000க்கு அடமானம் வைத்தார்.

கனவில் வந்த கடவுள்: மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது

குண்டூர்: ஆந்திராவில் கடவுள் வந்து அழைப்பதாக கூறிய பெண்ணை சிலுவையில் அறைந்த கணவன், சகோதரனை போலீசார் கைது செய்தனர். சிலுவையில் அறையப்பட்ட பெண்ணை உடனடியாக மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் குஞ்சான்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்காயம்மா (35). அவரது கணவர் பிரான்சிஸ். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். அதன்பிறகு வெங்காயம்மா தனது பெயரை தேவகுமாரி என்று மாற்றிக்கொண்டார். கடந்த சில மாதங்களாகவே தனது கனவில் அடிக்கடி ஏசு கிறிஸ்து வருவதாக தேவகுமாரி தனது உறவினர்களிடம் கூறி வந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரிடம் திரண்டு சென்று ஜெபம் செய்து ஆசி பெற்று வந்தனர்.
சிலுவையில் அறைய வேண்டும்

இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்த நடிகை!

இயக்குனர் சீனு ராமசாமி ”நீர்ப் பறவைகள்” என்ற படத்தை இயக்குகிறார். நீர்ப் பறவைகள் மீனவர்களின் வாழ்க்கையை மை பேராண்மை படத்தில் நடித்த வர்ஷா இந்த படத்தின் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் இயக்குனர் சீனு ராமசாமியின் உதவி இயக்குனராகவும் பணியாற்றுகிறார் வர்ஷா. இவர் சீனு ராமசாமியின் “தென் மேற்குப் பருவக்காற்று” படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா நீக்கப்பட்டதால், அ.தி.மு.க.,வுக்கு முக்குலத்தோர் ஓட்டுகள் பாதிக்கும்

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதால், அ.தி.மு.க.,வுக்கு முக்குலத்தோர் ஓட்டுகள் பாதிக்கும் என முக்குலத்தோர் கூறுகின்றனர்.

தமிழக அளவில், 1960களில், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என்ற நிலையை, தி.மு.க., ஏற்படுத்தியது. இதற்கு மாற்றாக, அ.தி.மு.க., உருவான பின், எம்.ஜி.ஆர்., காலம் தொட்டு, முக்குலத்தோர் அதிகமுள்ள தென் மாவட்டங்கள், மதுரை, தேனி, பெரியகுளம் மற்றும் டெல்டா மாவட்டங்களில், அ.தி.மு.க., மிகப்பெரிய அடித்தளத்தை ஏற்படுத்தியது. கள்ளர், மறவர், அகமுடையாரின் ஆதரவு, அ.தி.மு.க.,வுக்குத்தான் என கருதப்பட்டது.

எவ்வித ஆதாரமும் இல்லாமல் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் தந்தவர் மீது நடவடிக்கை


சென்னை: எவ்வித ஆதாரமும் இல்லாமல் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் தந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீஸ் டிஜிபியிடம் திமுக சட்டத்துறை சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக சட்டத் துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று மதியம் 12 மணிக்கு டிஜிபியிடம் மனு கொடுக்கச் சென்றார். டிஜிபி இல்லாததால் அவர் சார்பில் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி சஞ்சீவ் குமார் மனுவை பெற்றுக் கொண்டார்.

இதயமில்லாத.... வர்களா டாக்டர்கள்? -ஹெச்.ஷேக் மைதீன்-

அரசு டாக்டர் ஒருவர், நோயாளியின் உறவினர்களால் கொல்லப்பட்டதைக் கண்டித்து, டாக்டர்கள் போராட்டம் நடக்கிறது. குழப்பங்களைத் தவிர்க்க, அரசு டாக்டர்களுக்கான விதிமுறைகளை, அரசு கடுமையாக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை சரியா?தூத்துக்குடி அரசு டாக்டர் சேதுலட்சுமி கொலையைக் கண்டித்து, அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் ஒற்றுமையோடு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். டாக்டர் சேதுலட்சுமி எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பும், மயக்க மருந்தியலுக்கான டிப்ளமோ படிப்பும் முடித்துள்ளார். அவரை பொறுத்தவரை, மயக்க மருந்தியல் டாக்டராகவும், பொது வியாதிகளுக்கான முதற்கட்ட சிகிச்சை தரும் மருத்துவராகவும் மட்டுமே சிகிச்சை தர முடியும்.ஆனால், விதிகளை மீறி, கர்ப்பிணிகளுக்கு, ஒரு மகப்பேறு (கைனகாலஜிஸ்ட்) டாக்டர் பார்க்க வேண்டிய சிகிச்சையை பார்த்திருக்கிறார். மேலும், இறந்த சிசுவை வயிற்றிலிருந்து எடுப்பதற்கு, தானே அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த இடத்தில், மயக்க மருந்தியல் நிபுணரான டாக்டர் சேதுலட்சுமி, ஒரு அறுவை சிகிச்சை (சர்ஜன்) நிபுணராக மாறியிருக்கிறார். இதுவும் மருத்துவ விதிமீறல் என்பது குற்றச்சாட்டு.இதுமட்டுமின்றி, "தன்னிடமே பல முறை, வழக்கமான பரிசோதனை செய்து வந்த கர்ப்பிணிக்கு, அறுவை சிகிச்சை செய்ய, பணம் கொண்டு வரும் வரை காத்திருந்தார்' என்பது, கர்ப்பிணி குடும்பத்தாரின் குற்றச்சாட்டு. இந்த இடத்தில், உயிருக்கு முன், பணம் பிரதானமாக இருந்துள்ளது.

ஜெயாவின் மாட்டுக்கறியும் நக்கீரன் மீதான தாக்குதலும்

சொர்க்கவாசல் திறக்கப்படுகின்ற வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 2 மணிக்கெல்லாம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வந்துவிடுவது சசிகலாவின் வழக்கம்.
அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தகாலத்திலும்கூட, கோயிலில் சசிகலாவுக்கு வி.வி.ஐ.பி.யின் அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. அதனால், இந்தமுறை ஜனவரி 5-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும்போது, சசிகலாவின் வருகையும் வரவேற்பும் எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக இரவு 12 மணி முதல் காலை 6.30 மணிவரை பார்த்தசாரதி கோயில் வாசலிலேயே நாம் இருந்தோம். ஏகாதசியை லைவ் ரிலே செய்வதற்காக ஜெயா டி.வி. உள்பட பல சேனல்காரர்களும் வந்திருந்தார்கள்.