![]() |
![]() |
V.Navarahinam |
ராதா மனோகர் : அடையாள அட்டை மசோதா !
1965 - 1969 ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியும் தமிழரசு கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்தன!
அந்த ஆட்சியில்தான் முழு இலங்கை தமிழர்களையும் சந்தேக குடிமக்களாக்கும் அடையாள அட்டை மசோதாவை நிறைவேறியது. .
குறிப்பாக இந்திய வம்சாவளி மக்கள் மீது இந்த டட்லி செல்வா ஆட்சி தூக்கி போட்ட அடையாள அட்டை மசோதா பற்றி பொதுவெளியில் பெரிதாக பேசாமல் பார்த்து கொள்வதில் தமிழ் தேசியர்கள் இன்றுவரை வெற்றி பெற்று கொண்டே இருக்கின்றனர்!
இவர்களின் இலங்கை குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை என்ற திட்டம் மேலெழுந்தவாரியாக நல்ல திட்டம் போல்தான் தென்படும்..அன்று பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்திய வம்சாவளி மக்கள் குடியுரிமை அற்றவர்கள்.
அடையாள அட்டை இல்லாத எவரையும் போலீசார் உடனே கைது செய்யலாம்!
மறு புறத்தில் குடியுரிமை அற்றவர்களுக்கு அடையாள அட்டை பெற முடியாது.
அதாவது எப்போது எந்த நேரத்திலும் எங்கேயும் வைத்து போலீஸ் அடையாள அட்டையை கேட்கலாம்.
அது இல்லாதவிடத்து கைது செய்து சிறையில் அடைக்கலாம்.
இப்படி கடுமையாக போலீஸ் நடந்து கொள்ளாது கொஞ்சம் நீக்கு போக்காகத்தான் நடந்து கொள்ளும் என்று தமிழரசு கட்சிக்கு பிரதமர் டட்லி சேனநாயக்க உறுதி கூறினாராம்.
ஒரு புறம் கட்டாய நாடு கடத்தல் கிடையாது என்று கூறிவிட்டு
மறுபுறம் அடையாள அட்டை இல்லாவிடில் கைது செய்யலாம் தொடர்ந்து சிறைக்குள் வைத்திருக்கலாம் என்றால் நோக்கம் என்ன?
எப்படியாவது தொந்தரவு கொடுத்து பயமுறுத்தி நாடு கடத்துவதற்கு கண்டு பிடிக்கப்பட்ட மசோதாதான் இந்த அடையாள அட்டை மசோதா.
இந்த மசோதாவை ஆதரித்து எஸ் ஜெ வி செல்வநாயகத்தின் தமிழரசு கட்சி மேடைகளில் முழங்கியது.
அதாவது எந்த மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்காக தமிழரசு கட்சி தொடங்கப்பட்டதாக காலாகாலமாக கூறப்பட்டதோ,
அதே மலையக மக்களின் தலையில் இடி இறக்கியதற்கு ஒப்பான இந்த சட்டத்திற்கு ஆதரவு கொடுத்த கட்சி தமிழரசு கட்சி!
தமிழரசு கட்சியின் ஊர்க்காவல் துறை நாடாளுமன்ற திரு வி நவரத்தினம் அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார்! .
இதன் காரணமாக தமிழரசு கட்சியில் இருந்து அவரை வெளியேற்றினார்கள் .
பின்பு இந்த அடையாள அட்டை மசோதாவுக்கு எதிராக தனிநபர் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.
அதை விவாதற்கு எடுத்து கொள்வதற்கு இன்னொரு உறுப்பினர் வழி மொழியை வேண்டும்.
சபாநாயகர் சரி உங்கள் தீர்மானத்தை யார் வழிமொழிகிறார்கள் என்று கேட்டார்
அதற்கு என் பின்னால் அமர்ந்திருக்கும் எனது தமிழரசு கட்சி உறுப்பினர்கள் யாராவது வழி மொழிவார்கள் என்று எண்ணுகிறேன் என்று கூறினார்.
இதை கேட்ட தமிழரசு கட்சியினர் ,
தங்களிடம் அனுமதி கேட்காமலேயே இவர் இந்த தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார் என்று கூறிக்கொண்டே எழுந்து சென்றுவிட்டனர்!
அடையாள அட்டை மசோதாவுக்கு எதிரான தீர்மானம் விவாதத்திற்கே எடுத்து கொள்ளப்படவில்லை.
கட்டாய நாடுகடத்தலை நோக்கமாக கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழரசு கட்சி ஆதரவாக வாக்களித்தது என்பது வரலாறு.

மீள் பதிவு : இலங்கை தமிழ் தலைவர்களில் வி.நவரத்தினம் அவர்கள் தவிர்க்க முடியாத ஒரு சரித்திர பாகத்தை வகித்திருந்தார் .
மிகவும் நேர்மையான ஒரு அரசியல்வாதியாவார் .
இவரது தீர்க்க தரிசனம் ஒவ்வொன்றும் பிற்காலத்தில் நடந்ததை முழு நாடும் கண்டு கொண்டது .
1970 இல் நடந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்றிருந்தால் ஒருவேளை இலங்கை தமிழர்களின் வரலாறு வேறு விதமாக இருந்திருக்கும்.
நல்லவர்களை தோற்கடிப்பதுதான் தமிழர்களின் குணமாச்சே?
தமிழர் சுயாட்சி கழகத்தின் பத்திரிகையான விடுதலை பத்திரிகையை யாழ்ப்பாண இரயில் நிலையத்திலும் பேருந்து நிலையத்திலும் நண்பகர்களோடு சேர்ந்து விற்பனை செய்திருக்கிறோம் .
மேலும் தமிழர் சுயாட்சி கழகம் நல்லூர் தொகுதியில் பெற்ற வாக்குகள் சுமார் 1500 ..அந்த தொகுதியல் தமிழரசு கட்சியின் டாக்டர் நாகநாதன் சுமார் 400 வாக்குகளால் தோல்வி அடைந்தார் .சுயாட்சி கழகம் வாக்கை பிரித்து விட்டது என்று தமிழரசு கட்சியினர் குற்றம் சுமத்தினார்கள் .
இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் தமிழரசு கட்சியின் கோட்டையான நல்லூர் தொகுதியில் சுயாட்சி கழகத்தின் தனி நாட்டு கோரிக்கையானது அங்கு பெரும் வரவேற்பை பெற்றது . குறிப்பாக்க இளைய தலைமுறையின் அபிலாசையை அது பிரதி பலித்தது ..
பிற்காலத்தில் தமிழரசு கட்சியினர் தாங்களும் தனி நாடுதான் இனி வழி என்று கூறத்தொடங்கியது.. சுயாட்சி கழகத்தின் வரவினால்தான் .
சுயாட்சி கழகத்தை ஓரம் கட்டிவிட்டு பின்பு இளைஞர்களை கவனிக்கலாம் என்பதுதான் தமிழரசு கட்சியின் அன்றய நோக்கம் ..
தவறான கணக்கை போட்டு அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தினார்கள் .. அந்தரங்க சுத்தி இல்லாத அரசியல்.
..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக