மின்னம்பலம் - Kavi : தமிழக அமைச்சரவையில் மூன்று அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத் துறையும்,
வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும்
பால்வளத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதிதுறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான டி.மனோ தங்கராஜை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்துள்ளார்.
இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பாக நமது மின்னம்பலத்தில் சிவசங்கருக்கு முக்கியப் பொறுப்பு! மீண்டும் வருகிறார் மனோ தங்கராஜ் என்று செய்தி வெளியிட்டிருதோம். அதன்படி, ஆளுநர் மாளிகை அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில் நாளை (ஏப்ரல் 28) மாலை 6 மணிக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியும், பொன்முடியும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக