Kulitalai Mano : சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றமாக செயல்படுகிறதா? இல்லே பாஜக கொள்கை பிரச்சார அமுல்படுத்தும் மன்றமாக செயல்படுகிறதா?
மோடியும்! அமித்ஷாவும்! ஆணையிட்டால்! சென்னை உயர்நீதிமன்றம் கரகாட்டம் ஆடும்!
திமுக அமைச்சர்களை குறிவைத்து வேட்டையாடும் சென்னை உயர்நீதிமன்றம்! முழுக்க! முழுக்க! பாஜக சங்கு ஊதும் பிரச்சாரக்கூடமாகவே ஆகிவிட்டது!
அதென்ன! திமுக அரசை மட்டுமே இலக்காக வைத்து காய் நகர்த்துவது? இது நீதிமன்றமா? இல்லை பாஜக கூட்டணியின் இன்னொரு அங்கமா?
சென்னை உயர்நீதிமன்றம் மதவாத இனவாத அடிப்படையில்! மற்றும் ஒருசார்பு கட்சி அரசியலை எடுத்தும் செயல்படுவது எந்தவகை நியாயமோ.?
இன்று திமுக அமைச்சர்களை பதவியில் இருந்து இறங்க நெருக்கடி கொடுத்து வரும் சென்னை உயர்நீதிமன்றம்! நாளை முதல்வரையும் கட்டுக்கதைகளை புனைந்து பதவி விலகச்சொல்லாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
பாஜக கட்சி அமைப்பை போலவே செயல்படும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நியாயத்தையோ! நடுநிலையான தீர்ப்புகளையோ! இனிமேல் எதிர்பார்ப்பது வீண்!
இவர்கள் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு பாஜக டெல்லி கட்சிக்கு விசுவாசமாக பணியாற்றுகின்றனர் என்பது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது!
தமிழக ஒட்டுமொத்த அமைச்சரவையையும் ராஜினாமா செய்ய வைப்பதுதான் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையாய பணியா?
கீழமை நீதிமனைறங்களின் தீர்ப்புகள் மீது நம்பிக்கை இல்லையென்றால்! அத்தகைய நீதிமன்றங்களையே ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு நேரடியாக எல்லா சிறுகுறு வழக்குகளையும் உயர்நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு சொல்லிவிடலாமே! சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துள்ள நிலைப்பாடு கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றுகிற நீதிபதிகள் எல்லாம் நம்பிக்கையற்றவர்கள் எனச்சொல்ல வருகிறார்களா? சென்னை உயர்நீதிமன்றம் மட்டுமே 100% அக்மார்க் பரிசுத்தமான பரிபாலனம் என்றும் நினைக்கிறார்களா?
நீதிபதிகள் வசம் வரும் வழக்கு ஒன்றுதான்! அந்த ஒரு வழக்கில் நீதிமன்ற தீர்ப்புகள் சந்தேகத்திற்குரியதாக எல்லா தீர்ப்புகளுமே அமைந்துவிடுகிறது என்கிற சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றைச்சார்பு ஈகோ நிலை எதிர்காலத்தில் மிக ஆபத்தானது! சட்டத்தின் மீதும்! நீதிமன்றத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கையற்றுப்போகும்!
இந்த குறிப்பிட்ட வழக்கை ரத்துசெய்வதன் மூலமாக கீழமை நீதிமன்றங்களையும்! அதில் பணியாற்றுகிற நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்றம் அவமானப்படுத்துகிறது! அவதூறு படைக்கிறது!
திமுக காரர்களின் வழக்குகளை இவ்வளவு வேகமாக கைய்யிலெடுக்கிற உயர்நீதிமன்றம்! அஇஅதிமுக மீதுள்ள எத்தனையோ ஊழல் வழக்குகளை கண்டுகொள்ளாமல்! பாரபட்சம் கொண்டு அரசியலை நடத்துவது மிகப்பெரிய சந்தேகம்!
பாஜக காரர்களின் வழக்குகளை தூசு தட்டி விசாரிக்க துணிவிருக்கிறதா? திமுக என்றால் திமிருவது! பாஜக அஇஅதிமுக வழக்குகள் என்றால் பதுங்குவது! இதென்ன நீதிமன்றமா? இல்லே மரத்தடி நாட்டு பஞ்சாயத்து மடமா?
திமுகவுக்கு இப்போது எதிர்க்கட்சியாக புதிதாக மல்லுக்கட்டுக்கு வந்து நிற்கும் சென்னை உயர்நீதிமன்றத்தையும் சந்தித்து களமாட வேண்டிய அவசியம் வந்துள்ளது!
தமிழக மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையை உற்றுநோக்கி வருகிறார்கள்! என்பதை நீதிமன்றம் உணருமா?
சென்னை உயர்நீதிமன்றமே நீதியை நிலைநாட்டு! அரசியலை நடத்தாதே! ஜனநாயகத்திற்கு வேட்டுவைக்காதே!
kulitalai mano : உயர்நீதிமன்றங்கள்
தேர்தல் ஆணையம்
நாடாளுமன்ற சன நாயகம்
அரசியலமைப்புச் சட்டம்
நிதி்த்துறை
ரயில் நிர்வாகம்
ராணுவம்
வெளிவிவகாரத்துறை
உள்துறை என அனைத்தும் பாஜக ஆட்சியில் சீரழிக்கப்பட்டுவிட்டன
ஒரே புகலிடமாக உச்சநீதிமன்றம் இருப்பதாக நம்புகிறார்கள் சாமான்ய மக்கள்
அந்த உச்ச நீதிமன்றத்தையும் கரையானாக அரிக்க முயற்சிகள் தொடர்கின்றன
அந்த முயற்சியில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால்
இந்த ஒன்றியம் அழியும்
எத்தனையோ பேர் இரத்தம் சிந்தி உயிரை தந்து பெற்ற சுதந்திரம்
காந்தியின் அஹிம்சையால் வென்றதாக பொய் பரப்பப்படும் இந்த நாடு அழிவது உறுதி
மக்கள் புரட்சி செய்ய மாட்டார்கள்
அவர்கள் காயடிக்கப்பட்டிருக்கிறார்கள்
ஆனால்
ஒன்று
ஏதோ ஒன்று நடக்கும்
அன்று இவர்கள் ஆட்டம் முடியும்
காலம் நம் அனைவரையும் வியக்க வைக்கும் தீர்வு தரும்
Kulitalai Mano : தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரித்து விரைந்து தீர்ப்பு தர யோக்யதை இல்லாத சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்
மற்ற நீதிபதிகள் தந்த தீர்ப்பை மறுத்து அதாவது இவனுக எதிர்பார்த்தது போல அமையாத தீர்ப்புகளை ரத்து செய்து மீண்டும் விசாரிக்க உத்தரவிடுவது கிராமங்களில் சொல்வதைப் போல
பிழைப்பற்ற நாவிதன் பொண்டாட்டிக்கு சிரைத்தானாம் என்பதே நினைவிற்கு வருகிறது
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் செய்றானுக
நீதிபதியாக நடக்க வில்லை
Kulitalai Mano : சென்னை உயர்நீதிமன்றத்தின் வன்மம்
திமுக விற்கு எதிராக நடக்கும் அரசியல் யுத்தத்தில்
எதிரிப்படைகளின் கூலிப்படைகளாக நீதிபதிகள் செயல்படுகின்றனர்
உங்களை மதிக்கும் வரைதான் நீ நீதிபதி
தூக்கிப் போட்டு மிதித்தால்
எப்படி ஓடுவாய் என்பதும் மக்களுக்கு தெரியும்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இருட்டு பக்கங்களை தமிழ்நாடு அரசு கண்காணித்தாலே போதும்
98பேர் கைதாக வேண்டி வரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக