புதன், 13 மார்ச், 2024

இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம் திராவிட அரசியலே! - 1927

May be an image of text
May be an image of text

ராதா மனோகர்  : இலங்கையில் இடது சாரி அரசியலுக்கு முன்பாகவே திராவிட அரசியல் கருத்துருவாக்கம் பெற்றிருக்கிறது இலங்கை மக்களின் முதல் அரசியல் தளம் திராவிட அரசியலே! - 1927
வெறும் சைவ கிறிஸ்தவ அரசியல் என்றிருந்த காலத்தில் முதல் தடவையாக சமூக நலன் சார்ந்த அரசியல் இயக்கமாக திராவிட இயக்கமே இருந்திருக்கிறது
சைவ வித்தியாபிவிருத்தி சங்கமென்றும் பின்பு இந்து போர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இயங்கிய அமைப்பு சைவத்தை ஒரு அரசியல் இயக்கமாகவே முன்னெடுத்தது
அதன் தலைவராக இருந்த இந்தப்போர்ட் ராஜரத்தினம் c4 July 1884 – 12 March 1970)
Subramaniam Rajaratnam was elected to the Legislative Council of Ceylon as the member for the Northern Province Central at the 1924 election. As its chairman, Rajaratnam played a key role in the foundation and growth of the Hindu Board which, at one time, managed more than 150 schools .
முழுக்க முழுக்க சைவ வாழ்வியலே ஒரு அரசியல் தத்துவமாக கொண்டிருந்தார் .
அன்றைய ஆங்கில ஆட்சியாளர்களின் உதவியோடு .சுமார் 150 பள்ளிக்கூடங்களை நிறுவினார்
இந்த பள்ளிக்கூடங்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே கல்வி கற்கும் உரிமை இருந்தது .


இதை ஏற்றுக்கொள்ள மறுத்து இந்த அமைப்பில் இருந்து வெளியேறிய இன்னொரு வழக்கறிஞரான திரு மு.சு. ராசரத்தினம் அவர்கள்,
சுன்னாகத்தில் திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம் என்ற அமைப்பை நிறுவினார் அந்த அமைப்பின் சார்பாக திராவிடன் என்ற மாத பத்திரிகையையும் வெளியிட்டார்
இப்பத்திரிகை தங்கு தடையின்று நான்கு ஆண்டுகள் வெளிவந்தது.
ஜாதி பேதம் இல்லாது எல்லா குழந்தைகளுக்கும் கல்வி கற்று கொடுப்பதற்காக திராவிட வித்தியாசாலை என்ற பள்ளிக்கூடத்தையும் சுன்னாகத்தில் நிறுவினார்.
திராவிடன் பத்திரிகையில் சமூக நலன் சார்ந்த பல கட்டுரைகள் செய்திகள் அறிவுரைகள் இடம் பெற்றிருந்தன .
அதில் பல முற்போக்கு கருத்துக்கள் அக்காலத்தில் மிகவும் துணிச்சலான விடயங்களாக இருந்ததை காணலாம் .
தரவுகள் அடிப்படையில் நோக்கும்போது சமூக அரசியல் தளத்தில் முதல் முதலாக அங்கு உருவான அரசியல் இயக்கம் திராவிட இயக்கம்தான் என்பது மிக தெளிவாக தெரிகிறது
இந்திய சுதந்திர இயக்கம் பற்றிய செய்திகள் ஆங்காங்கே காணப்பட்டாலும் கூட அவையெல்லாமே ஒரு தெய்வீக தோற்றம் போன்ற புனித வழிபாடு என்ற அளவிலேயே காட்சி அளித்தது.
எந்த இடத்திலும் அது ஒரு அரசியல் முன்னெடுப்பு என்ற கருத்தே எங்கும் காணப்படவில்லை
நீக்கமற நிறைந்திருந்த தென்னாடுடைய சிவனும் முருகனும் ஒரு புறமாகவும் .
கிறிஸ்வ மிஷனரிகளின் பரலோகத்து பிதாவின் மகிமையை போற்றும் விதமான செய்திகள் மறுபுறமுமாகவும் இருந்த காலங்கள் அவை.
சைவர்களின் கல்வி ஜாதி சேற்றுக்குள் சிக்கியது போல கிறிஸ்த்தவ மிஷனரிகளின் கல்வி ஜாதி சேற்றுக்குள் சிக்கவில்லை.
இவ்விரண்டு மதங்களில் சிக்கியிருந்த மக்களின் ஒரு சமூக கலாச்சார அறிவியல் புரட்சியாக திராவிட கருத்தியல் வழக்கறிஞர் திரு சு . ராசரத்தினம் அவர்களால் முன்னெடுக்கபட்டது இவர் மட்டுமல்ல இவரோடு பலர் துணையாக இருந்திருக்கிறார்கள்
இலங்கையின் முதல் இடது சாரி இயக்கமான லங்கா சமசமாஜி கட்சி 1935 டிசம்பர் 18 ஆம் உதயமானது .
இலங்கை கம்யூனிஸ்டு கட்சி 1943 ஜூலை 3 ஆம் திகதி உதயமானது
இதே காலக்கட்டங்களில் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம். திராவிடர் கழகம் போன்றவை பெருமளவு வளர்ச்சி பெற்றன

கருத்துகள் இல்லை: