செவ்வாய், 25 ஏப்ரல், 2023

சூடான் போர் 500 இந்தியர்கள் மீட்பு

 Dinamalar : புதுடில்லி: சூடானில் மீட்கப்பட்ட இந்தியர்களில் முதல் கட்டமாக 278 பேர் சவுதி அரேபியா ஜெட்டாவுக்கு இந்திய கடற்படை கப்பல் சுமேதா மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவத் தளபதி அப்தல் பதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையாக ஆர்எஸ்எப் பிரிவும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சூடானில் இருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான திட்டத்தில் மீட்கப்பட்ட இந்தியர்களில் முதல் கட்டமாக 278 பேர் சவுதி அரேபியா ஜெட்டாவுக்கு இந்திய கடற்படை கப்பல் சுமேதா மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் விரைவில் இந்திய அழைத்து வரப்பட உள்ளனர்.

கருத்துகள் இல்லை: