வியாழன், 11 ஆகஸ்ட், 2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க .. தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ராஜதந்திரி ?

May be an image of 1 person and text that says 'WORLD ECONOMIC FORUM WORLD CONOM FORUM WORL ECONOI M Lo LD'

Asaam A Careem :  Ranil - * பொறுமையாக இருந்து ஒரே ஒரு தேசிய பட்டியலுக்கு கட்சி உறுப்பினர்கள் வாயாலேயே தன்னை பொருத்தம் என கூற வைத்து பாராளுமன்றம் நுழைந்தார்.
* மகிந்தவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி தான் பிரதமரானார்.
* மொட்டு கஞ்சிக்கு தெய்வமாக தெரிந்த நிதி அமைச்சர் பசிலை பதவி நீக்கி அவரது பலத்தை உடைத்தார்.
* ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் மறைகரமாகவும் மறுபுறம் ஜனாதிபதிக்கு மொக்கையான ஆலோசனையும் வழங்கிக்கொண்டிருந்தார்.
* நாட்டின் கஷ்டத்தை ஊதிப்பெருதாக காட்டி மக்களை உசுப்பேற்றி ஜனாதிபதி மீதான எதிர்ப்பை தீவிரப்படுத்தினார்.
* போராட்டத்தை வலுப்படுத்தி கோட்டாவை ஜனாதிபதி பதவியில் இருந்து துரத்தி நாடு நாடாக அலையவிட்டார்.
* தற்காலிக ஜனாதிபதியானார்.
* எல்லா கட்சிகளும் ரணிலை துரத்தி வேறு ஒருவரை ஜனாதிபதியாக கொண்டு வர திட்டமிட்ட போது டலஸ் எனும் டம்மியை வேட்பாளராக்கி தான் வெற்றி பெற்று எதிர்க் கட்சிகளை மண்ணை கவ்வ வைத்து தன்னை அடுத்த தேர்தல் வரை நிரந்தர ஜனாதிபதியாக்கியிருக்கிறார்.


* அடக்கம் செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியை தோண்டி எடுத்து மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்.
* இனவாத விமல் கூட்டணிக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களது மக்கள் செல்வாக்கை தகர்த்துள்ளார்.
* தன்னை அதிகம் எதிர்த்த சஜித்தையே அவரது கட்சிக்காரர்கள் கேலியாக்கும் வண்ணம் மாற்றி கடைசியில் சஜித்தை ஒரு அமைச்சுப் பதவிக்கு கெஞ்சும் நிலைக்கு தள்ளியிருக்கிறார்.
* தான் சொல்வதை கேட்கும் சர்வகட்சி அரசாங்கம் மட்டுமே அமைய வேண்டும் என்பதற்காக வெட்ட வேண்டியவர்களை வெட்டி ஒட்ட வேண்டியவர்களை ஒட்டி தயாராகிறார்.
* வல்லரசு நாட்டு தூதுவர்களிடம் ஆக்ரோஷமாக பேசி தன்னை முன்னைய ஜனாதிபதிகளை விட சிறந்தவர் என குறிப்பிடத்தக்க மக்களை பேச வைத்திருக்கிறார்.
* கேஸ், எரிபொருள் போன்றவற்றை தொடர்ச்சியாக கிடைக்கச் செய்து தன்னை ஆளுமை உள்ளவராக காட்டியிருக்கிறார்.
* தொடர்ச்சியாக எரிபொருள் மற்றும் எரிவாயு கப்பல்களை வரவைத்து போலினை ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
* சில அடையாளம் காண முடியாத பிணங்களை கடலில் மிதக்க விட்டும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை தொடர்ச்சியாக கைது செய்தும் ஆர்ப்பாட்டத்துக்கு வரும் மக்களை தடுத்திருக்கிறார்.
* 125 நாட்கள் நடந்த போராட்டத்தை அவர்களாகவே கலைந்து செல்லும் வண்ணம் பொன்சேகாவின் பதவி ஆசையை தூண்டி சிலபல வார்த்தைகளை விடவைத்து மக்களை வரவிடாமல் தடுத்து போராட்டத்தையும் இல்லாமலாக்கி பொன்சேகா மூஞ்சியில் கரியையும் பூசியிருக்கிறார்.
* தனக்கு ஆதரவு தந்த கம்பன்பிலவையே கடுப்பேத்தும்படி அமைச்சுப் பதவி தரமாட்டேன் என்று மூஞ்சிக்கு நேராக சொல்லியிருக்கிறார்.
* கோட்டாவை எப்படியும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர பகீரத பிரயத்தனம் மேற்கொண்ட மொட்டுக்கட்சியின் முயற்சியில் அவரை 6 மாதங்கள் தாய்லாந்துக்கு செல்லும் வண்ணம் ஏற்பாடு செய்து நாட்டுக்கு வருவதை தடுத்துள்ளார்.
* எல்லாத்துக்கும் மேலாக ஒற்றுமையாக இருந்து குடும்ப ஆட்சி செய்து நாட்டை நாசமாக்கிய மகிந்த குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தியிருக்கிறார்.
* IMF இன் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான கட்டணங்களை அதிகரித்து அது வழங்கும் கடனை உறுதிப்படுத்தி இருக்கிறார்.(மக்கள் தான் பாவம் இந்த விடயத்தில்)
* படையினர் இன்னமும் தன்னுடன் தான் இருக்கிறார்கள் என்ற பொன்சேகாவின் படத்தை பப்படமாக்கி படையினரை தன்வசம் இழுத்திருக்கிறார்.

* வெட்டிவீராப்பு பேசி தமிழ் மக்களை ஏமாற்றி எந்தவித சேவையையும் செய்யாமல் சக்தி டீவியில் பேட்டி மட்டும் கொடுத்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பையே தன் காலில் மண்டியிட வைத்திருக்கிறார்.
* தன்னை மிஸ்டர் பீனாக பார்த்து எள்ளிநகையாடிவந்த மக்களையே வெர்ஷன் 2.0 என உச்சரிக்க வைத்து உற்று கவனிக்க வைத்திருக்கிறார்.
* நாட்டுக்கு டொலர்களை அனுப்ப மாட்டோம் என்றிருந்த வெளிநாட்டு வாழ் இலங்கையர்களை நாட்டுக்கு டொலர்களை அனுப்ப வைத்து நாட்டின் நாணயப் பெறுமதியை இன்னும் அதிகமாக டேமேஜ் ஆகாமல் ஓரளவுக்கு நிலையாக வைத்திருக்கச் செய்திருக்கிறார்.
* எந்த பாராளுமன்ற உறுப்பினரிடம் எந்த அமைச்சு பதவியை கொடுத்தால் செய்வார்கள், அவர்களை எப்படி கழற்ற வேண்டும் என்று பார்த்து பார்த்து காய்களை நகர்த்தி கடைசியில் கட்சி தலைவர்களையே தன்னிடம் சரன்டர் ஆகச் செய்திருக்கிறார்.
* ஜனாதிபதியாக ராசியே இல்லாதவன் என்ற பெயரை மாற்றி ஜனாதிபதியான போதே தெரிந்திருக்க வேண்டும். இது பூனையல்ல நரி என்று. நரியால் எவ்வளவு பலமான மிருகத்தையோ பெரிய மிருகத்தையோ இலகுவாக ஏமாற்ற முடியும். இப்போது பாராளுமன்றத்தில் இருப்பதோ பதவி வெறி பிடித்த மிருகங்கள் தான். அவைகளுக்கு எந்த எலும்புத் துண்டை போட்டு கட்டிப்போட வேண்டும் என்று நரிக்கு நன்றாகவே தெரியும்.

கருத்துகள் இல்லை: