ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்! கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி

  மாலைமலர் : திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல் - அதிர்ச்சி அடைந்த பக்தர்கள்
உள்வாங்கிய கடல்
திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது திடீரென கடல் சில மீட்டர் தூரம் உள்வாங்கியதால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால் கடற்கரைக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து விலகிச்சென்றனர்.
திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியதற்கு என்ன காரணம் என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்செந்தூரில் இன்று காலையிலும் கடல் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியதில், பாறைகள் வெளியே தெரிய தொடங்கின. இதனால் கடற்கரையில் இருந்த பக்தர்கள் அச்சமடைந்தனர்.

கருத்துகள் இல்லை: