புதன், 15 செப்டம்பர், 2021

நீட் தேர்வு: தனுஷ், கனிமொழியை தொடர்ந்து மேலும் ஒரு மாணவி உயிரிழப்பு!

செளந்தர்யா

நக்கீரன் " இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது.
சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை 18 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 224 மையங்களில் எழுதினார்கள். தேர்வுக்கு முந்தைய தினம் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் 14ஆம் தேதி கனிமொழி என்ற மாணவி தேர்வு எழுதிவிட்டு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீட் தேர்வு தொடர்பாக அடுத்தடுத்து உயிரிழப்புகள் நடைபெறுவதைக் கருத்தில்கொண்டு நீட் தேர்வெழுதிய அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று (15.09.2021) காலை முதல் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

 இந்நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியாக, வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவர்களின் அடுத்தடுத்த தற்கொலைகள் நீட் தேர்வு தொடர்பாக பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: