திங்கள், 27 ஏப்ரல், 2020

இலங்கை 28 ஏப்ரல் இல் போரை நிறுத்துவதாக அறிவித்த பின்பும் கூட புலிகள் போரை நிறுத்துவதாக அறிவிக்கவே இல்லை

கிளிமூக்கு அரக்கன் Kilimookku Arakkan:; போர் நிறுத்தம் என்றால் என்ன
சண்டை போடும் இரு தரப்பும் நிறுத்துவது
ஒரு தரப்பு மட்டும் போரை நிறுத்தி அடுத்த தரப்பு நிறுத்தாவிட்டால் அது போர் நிறுத்தமா
கண்டிப்பாக கிடையாது
14 அக்டோபர் 2008
போரை நிறுத்த உதவக்கோரி நடேசன் அவர்கள் திமுகவிற்கு கடிதம் எழுதுகிறார்
திமுக இந்திய அரசு மூலம் இலங்கை அரசிடம் பேசிய போது
இலங்கை தரப்பில் “புலிகள் தனி ஈழம் கோரிக்கையை கைவிடுவதாக” அறிவித்தால் இலங்கை போரை நிறுத்தலாம் என்று கூறினார்கள்
ஆனால்
புலிகள் அதை ஏற்கவில்லை
இது யார் தவறு
திமுகவின் தவறா, அல்லது புலிகளின் தவறா
பிறகு மார்ச் 30 அன்று நடேசன் மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறார்
போரை நிறுத்த உதவ வேண்டும் என்கிறார்
புலிகள் தனி ஈழ கோரிக்கையை கைவிடுவதாக கூறுகிறார்
கண்கெட்ட பிறகு பரிதி வழிபாடு
இலங்கை தரப்பில் “புலிகள் தனி ஈழம் கோரிக்கையை கைவிடுவதாக” அறிவித்தால் இலங்கை போரை நிறுத்தலாம் என்று 2008 அக்டோபரில் கூறினார்கள்
ஆனால்
கிளிநொச்சியை கைப்பற்றி பலமாக இருந்த இலங்கை இம்முறை தங்களின் கோரிக்கையை அதிகப்படுத்தியது
“தனி ஈழம் கோரிக்கையை கைவிட்டால் மட்டும் போதாது. புலிகள் ஆயுதங்களை துறக்க வேண்டும்” என்று கூறியது
திமுக தரப்பில் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் பிரபாகரன் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை

இப்பொழுது ஏற்றுக்கொள்ளுங்கள். இலங்கை மேலும் வலுவடைந்தால் உங்களை சரணடையச்சொல்வார்கள் என்று கூறியும்
பிரபாகரன் அதை புரிந்து கொள்ளவில்லை
இது யார் தவறு
பிரபாகரனின் தவறா, அல்லது கலைஞரின் தவறா
அதற்கு பதில்
பிரபாகரன் போரை தொடர்கிறார்
ஆனந்தபுரம் யுத்தத்தை துவங்குகிறார்
படுதோல்வியடைகிறார்
கீழ்க்கண்ட புலிகள் மரணமடைகிறார்கள்
Velayuthapillai Baheerathakumar alias Theepan (Overall commander of the LTTE northern front fighting formations)
Manickapodi Maheswaran alias Keerthi (Special commander of Jayanthan Infantry brigade)
Selvaratnam Sundaram alias Nagesh (Special commander)
Viduthalai alias Amuthan alias Gaddafi (Bodyguard of LTTE leader Velupillai Prabhakaran, later a commander of the Imran-Pandian regiment)
Gopith (Special commander the Charles Anthony infantry brigade)
Vidhusha (Special commander of Maalathi regiment)
Kamalini (Second-in-Command of Maalathi regiment)
Durga (Special commander of Sothia regiment)
Mohana (Second-in-Command of Sothia regiment)
Manivannan (Leader of the "Kittu" artillery regiment)
Gopal (Chief of the "Kutty Sri" mortar regiment)
Seralaathan (In-charge of the Tiger TV "Nitharsanam")
S. Thangan (Deputy-political commissar and administrative officer under S. P. Thamilselvan)
Senior leaders named Ruban, Panjan, Nehru, Anton, Maankuyil, Amudha, Iniyawan, Aadithyan, Chitrangan and Mahindan.[4]
கீழ்க்கண்ட புலிகள் பிடிக்கப்பட்டனர்
Anbu (Deputy-commander of Radha regiment)
Asmi (Leader of "Ponnamman" mining unit)
இந்நிலையில்
இலங்கை அரசு தரப்பு மேலும் வலுவடைகிறது
மனித கேடயமாக நிறுத்தப்பட்ட ஈழ மக்களின் உயிரை காக்க
போரை நிறுத்த திமுக வேண்டுகோள் வைக்கிறது
இலங்கை அரசோ,
புலிகள் சரணடைந்தால் மட்டுமே போரை நிறுத்த முடியும் என்கிறார்கள்
புலிகள் சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் என்றும் வேறு எந்த கோரிக்கையும் ஏற்கப்படாது என்று கூறுகிறது
திமுக தரப்பில் இருந்து புலிகளை தொடர்பு கொண்டு
தயவு செய்து சரணடைந்து உங்கள் மக்களை காத்துக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் வருகிறது
அதற்கு புலிகள் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்றால்
இலங்கை தொடர்ந்து சுட்டுக்கொண்டுள்ளார்களே
நாங்கள் எப்படி சரணடைய முடியும் என்கிறார்கள்
அப்படி என்றால் என்ன வேண்டும் என்ற கேள்விக்கு
இலங்கை சுடுவதை நிறுத்தினால் மட்டுமே நாங்கள் சரணடைய முடியும் என்கிறார்கள்
மத்திய அரசு மூலம் அழுத்தம் அளித்து இலங்கை போரை நிறுத்த ஏற்றுக்கொள்ளவில்லை
பிரபாகரன் என்பவர் கோழை, சொன்ன வாக்குறுதியை கடைபிடிக்காதவர்
புலிகளை சரணடையும் அறிவிப்பை சொல்லச்சொல்லுங்கள்
அவர்கள் சரணடைவோம் என்று சொம்மா; போரை நிறுத்துகிறோம் என்று இலங்கை அரசு சொல்கிறது
இப்படி இரண்டு தரப்பும் முறுக்கிக்கொண்டு இருக்கும் போது
அப்பாவி மக்களை காக்கும் பொருட்டு
இருவரும் போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன்
கலைஞர் உண்னாவிரதம் இருந்தார்
அவரது உண்ணாவிரதத்தை மதித்து 6 மணி நேரத்தில்
போரை நிறுத்துவதாக கூறியது இலங்கை அரசு
தொடர்ந்து புலிகளும் போரை நிறுத்துவதாக அறிவித்திருந்தால்
மக்கள் உயிர் பிழைத்திருப்பார்கள்
ஆனால்
இலங்கை 28 ஏப்ரல் அன்று போரை நிறுத்துவதாக அறிவித்த பிறகும் கூட
புலிகள் போரை நிறுத்துவதாக அறிவிக்கவே இல்லை
இலங்கை அரசு 27ஆம் தேதி முழுவதும் பொறுத்து பார்த்தது
28ஆம் தேதி முழுவதும் பொறுத்து பார்த்தது
29ஆம் தேதி முழுவதும் பொறுத்து பார்த்தது
புலிகள் தரப்பில் இருந்து போர் நிறுத்தம் என்ற சொல் வரவே இல்லை
இலங்கை மீண்டும் போரை துவக்குகிறார்கள்
இது யார் பிழை ?
கலைஞரின் பிழையா, பிரபாகரனின் பிழையா
மனித கேடயத்தில் இருக்கும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டே வருகிறார்கள்
சுமார் 30000 மக்கள் இறந்த பிறகு
அதாவது மனித கேடயத்திற்கு மேலும் மக்கள் இல்லை என்ற நிலை வந்த பிறகு
புலிகள் சரணடைகிறோம் என்று
பத்திரிகையாளர் மேலி கோல்வின் மூலம் சொல்கிறார்கள்
பிறகு சரணடைந்த புலிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்
முக்கிய விஷயம்
புலித்தலைவர்கள் யாரும் சயணைட் எல்லாம் சாப்பிடவில்லை
சயணைட் எல்லாம் குழந்தைகளுக்கும் தொண்டர்களுக்கும் தான்
புலித்தலைவர்கள் எல்லாம் சரணடைந்த பிறகு
சுடப்பட்டு அல்லது மண்டை பிளக்கப்பட்டு தான் இறந்தார்கள்
இப்பொழுது கேள்விகள்
1. அக்டோபரில் புலிகள் தனி ஈழ கோரிக்கையை கைவிடாதது யார் தவறு
திமுக 1970களிலேயே தனி நாடு கோரிக்கையை கைவிட்டு சுபிட்சமாக உள்ளதே
புலிகள் தவறான முடிவு எடுத்ததற்கு திமுக எப்படி பொறுப்பாகும்
2. 2009 மார்ச்சில் ஆயுதங்களை கீழே போடாதது யார் தவறு
திமுகவின் தவறா, புலிகளின் தவறா
3. 2009 ஏப்ரம் 27 அன்று சரணடைகிறோம் என்று அறிவிக்காதது யார் தவறு
திமுகவின் தவறா, புலிகளின் தவறா
கலைஞரின் உண்னாவிரதத்தை மதித்து இலங்கை போர் நிறுத்தம் அறிவித்தது
புலிகள் சரணடைந்திருந்தால் மக்களை காத்திருக்கலாம்
ஆனால்
அதை மதிக்காமல் தொடர்ந்து போர் செய்தது யார் தவறு
போர் நிறுத்தம் என்றால்
இரு தரப்பும் நிறுத்த வேண்டும்
புலிகள் போரை நிறுத்துவதா என்று சொன்னார்கள் ?
4. மனித கேடயமாக இருந்து 30000 பேரை பலி கொடுத்தபின் 2009 மே 15க்கு பின் சென்று சரணடைந்ததற்கு பதில்
2009 ஏப்ரல் 27 சரணடைந்து இருந்தால் மக்களை காத்திருக்கலாம் அல்லவா
இவ்வளவு தவறும் செய்து விட்டு
அந்த உண்னாவிரதத்தை கொச்சை படுத்துவது எந்த விதத்தில் நியாயம்
திமுகவை குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்
உடலாலும் மனதாலும் தளர்ந்த பின்னர் எந்தப் பதவியிலோ பொறுப்பிலோ இருக்கக்கூடாது என்பதும்
பதவி பொறுப்புகளில் இருக்கும்போது உறவுகள் சொந்தங்கள் குறித்து அதிக எச்சரிக்கை வேண்டும்
என்பதையும் தமிழ் கூறும் நல்லுலகு பட்டறிவு மூலம் உணர்ந்த நாள் இது.
பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்டன. உடலாலும் மனதாலும் தளர்ந்த பிரபாகரன் செய்த பல்வேறு பிழைகளால்
இன்று ஈழ மக்கள் அகதிகளாக உள்ளார்கள்.
கற்றுக்கொண்ட பாடங்களை மீளவும் நினைவுபடுத்துவோம்.
வெறுப்புகள் தேவையில்லை. கற்றுக்கொள்வோம். அது போதும்.
தமிழர்கள் அனைவரும்
இதை படித்து
ஈழ மாயை, பிரபாகர மாயையில் இருந்து வெளிவாருங்கள்
இதை படித்துவிட்டு பகிருங்கள்
உங்கள் நண்பர்களுக்கு வாட்சப்பில் அனுப்புங்கள்

கருத்துகள் இல்லை: