
கரோனாவால் தமிழகத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா உறுதியாகி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தரப்படும் உணவு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி காலை 4 மணிக்கு ரொட்டி, பிஸ்கட். 4.30 மணிக்கு கபசுரக் குடிநீர்.
இரவு 7 மணிக்கு பால்,வாழைப்பழம்.
இரவு ஒன்பது முப்பது மணிக்கு சாதம், சாம்பார், ரசம், பொரியல், முட்டை. இரவு 10 மணிக்கு சிறிது பூண்டுடன் பால்.
இதர நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கு காபி, பிஸ்கட் .காலை 8.30 மணிக்கு இட்லி சாம்பார் வழங்கப்படுகிறது. காலை 10 மணிக்கு கபசுரக் குடிநீர், காலை 11 மணிக்கு வேகவைத்த சுண்டல்/வேர்க்கடலை, எலுமிச்சைச்சாறு (உப்பு/சர்க்கரை) வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் ரமலான் நோன்பு கடைப்பிடிப்போருக்கு அதற்கு தகுந்தார்போல் உணவுகள் வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக