வியாழன், 30 ஏப்ரல், 2020

ஏன் மே 17 க்கு அரக்கர் டிவி ய பார்ததால் பயம் ?

Devi Somasundaram :; கார்த்திக் ராமசாமி அண்ணன் தன் பக்கத்தில எப்பவும்
நிறைய கேள்வி கேட்பார்.. உரையாடல் தான் அறிதலுகான தீர்வு என்பதில் அவருக்கும் நம்பிக்கை உண்டு...எல்லா டாபிக் பத்தி எல்லா அமைப்பு பற்றி கேள்வி கேட்பார், சம்பந்தபட்ட இயக்க நபர்களை டேக் செய்தும் கேட்பார்
இரண்டு நாள் முன்ன யாரை உங்க தலைவரா ஆதரிக்க்கிறிங்க .அண்ணா ? பிரபாகரனா ? அப்படின்னு கேட்டு இருந்தாங்க ..
அதுல பலர் பல பதில் சொன்னாலும் அந்த பதிவின் நோக்கம் நம் உரிமை தீர்வுக்கு ஆயுத வழியை ஏற்கிறோமா ? அரசியல் தீர்வை ஏற்கிறோமா ? என்பது தான்..
அதில் பலர் அண்ணாவ எப்படி பிரபாகரன் கூட ஒப்பிட்டன்னு பாய்ந்தார்கள் ..இது ஒரு வித பக்தி நிலை..நாம் நேசிக்கிற தலைவரை யாரோடும் ஒப்பிடாதே என்பது ஒரு வகையில் ஹீரோ ஒர்ஷிப் தான் ..பிரபாகரன பேசுனா அதை இனத்துரோகின்னு விமர்சுப்பதும் இதும் ஒன்று தான் ..அதை விட்றுவோம்.
கலைஞரே பிரபாகரனை விமர்ச்சதில்ல தெர்யுமான்னு பலர் பதிவ பார்த்தேன் ..அவர்களிடம் பிரபாகரனே திமுக விமர்சிச்சதில்ல தெரியுமான்னுலாம் அரசியல் பேசினா அது வாட்ஸ் வாதிகளின் அரசியலா தான் இருக்கும். கலைஞருக்கு இருந்த ஆழ்ந்த தமிழின பற்று அவரை பேச விடாமல் செய்து இருக்கலாம் ..அதனால நாங்களும் பேசக் கூடாது என்பது இல்லை .
கார்த்தி அண்ணன் அடுத்த பதிவில் அரக்கர் டிவியில் பேச மே 17 இயக்கத்தை அழைத்தார் ..மே மாதம் வந்துவிட்டதால் அடுத்து மேடை ஏறும் காட்சிகாக அவர் அழைத்து இருக்கலாம் .. மே 17 அரசியல் சிந்தனைகளை பொது சமூகம் அறியட்டும் என்ற அக்கறையில் அழைத்தார்...

அரக்கர் டிவி திமுக டி வி இல்லை .. திமுகவினர் யாரும் அதை நடத்த வில்லை ..திராவிட பற்றாளர்கள் தான் அதன் நிறுவனர்கள் ..மே 17 திராவிட கருத்தியலை தான் பேசுகின்றது .
பின் என்ன தயக்கம் ? ஏன் மே 17 க்கு அரக்கர் டிவி ய பார்ததால் பயம் ? .. வந்து உங்க பக்க நியாயத்தை பேசலாமே ? .
கார்த்தி அண்ணன் அடுத்த பதிவில் திமுக சார்பில் யார் பேச வரீங்கன்னு கேட்டார் ..எந்த எதிர்ப்பும் இல்லாம நான் நீன்னு ஆயிரம் பேர் ரெடின்னு கமண்ட் போட்டார்கள் .. அவர்களிடம் இருக்கும் பயமின்மை ஏன் மே 17 கிட்ட இல்லை.
அரக்கர் டிவில டிபேட்க்கு தான் அழைத்தார்கள் ...அஙக பேச பயந்து கொண்டு தன் வீட்டை பூட்டிகிட்டு திமுகவுக்கு எதிரா நாமலாம் ஒன்னா இருக்கனும்னு திவிக, தபதிகவுகுலாம் வேற அழைப்பு விடுகிறார்கள் ..
எனக்கு என்ன டவுட்டுன்னா நாமலாம் ஒன்னுன்னா ஏன் திவிக இல்லாம தனியா மே 17 அப்படின்னு ஒரு இயக்கம்.
தபெதிக இல்லாம மே 17 அப்படின்னு ஒரு இயக்கம்.. ஒன்னா திவிகலயே இருந்திருக்கலாமே ...அப்படி என்ன கொள்கை முரண் அவர்கள் கூட ? . ஒரு வேளை உஙக கிட்ட கொள்கையே இல்லன்றது தான் முரணா ? ..
#தேவி...
பின் குறிப்பு ...இப்டி நாமலே சண்டை போட்டா அது திமுகவுக்கு நல்லதில்ல டோலின்னு திமுக ஆதரவாளர்களுக்கு மட்டும் க்ளாஸ் எடுக்க வரும் அன்பர்களுக்கு ..திமுக ஜெயிச்சா அது எனக்கு தனிபட்ட வகையில் எந்த லாபமும் இல்ல ...யார் தோற்கடிக்கனும்னு நினைக்கிறார்களோ அவர்களுக்கு தான் திமுகவின் வெற்றி தேவை ..அவர்களே அவர்கள் நலன் பற்றி கவல படலன்னா ..நான் ஏன் படனும் . .டேக் டைவர்ஷன் ப்ளிஜ்


Karthick Ramasamy : நான் அதிமுகவை ஆதரிக்கிறேன் என்று சொல்பவனை நம்பலாம்.
நான் நாம் தமிழரை ஆதரிக்கிறேன் என்று சொல்பவனைக் கூட நம்பலாம்.
ஆனால் நான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை, எந்த இயக்கத்தையும் ஆதரிக்கவில்லை என்று அரசியல் பேசுபவர்கள், அதிலும் அரசியல் கட்சிகளை குறை சொல்பவர்கள் கோழைகள்.
இவர்களைப் பொறுத்தவரை தான் எந்த கட்சியையும் இயக்கத்தையும் சாராதவன் என்று சொல்வதற்கு காரணம ்அப்படி வெளிப்படுத்தினால் அந்த அமைப்பின் செயல்பாடுகளை கேள்விக்குட்படுத்துவோம். அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்றுகூட இந்த்க் கோழைகளுக்கு தெரியாது.
இணையத்தில் தான் திமுககாரன் என்று பெருமையாக வெளிப்படுத்தும் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். அவர்கள் திமுக மீது சுமத்தப்படும் அவதூறுகளைக் கொண்டு அஞ்சுவதில்லை. கேள்விகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். கேலி கிண்டலாக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
சரியோ தவறோ தான் ஆதரிக்கும் அமைப்பின் பெயரை வெளிப்படுத்தி அதன் மீதான கேள்விகளையும் எதிர்கொள்கிறவர்கள் பாராட்டுக்குரியவர்களே.
தான் எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்று வெளிப்படுத்த அஞ்சும் கோழைகளின் ஒரே இலக்கு திமுகதான்.
73 வருடமாக, திமுக தொண்டன் கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் அஞ்சியதில்லை. உலகின் எந்த மேடையிலும் பேசக்கூடியவைதான் திமுகவின் கொள்கைகள். அவை பேரறிஞர் அண்ணாவின் மாபெரும் சிந்தனையில் பார்த்து பார்த்து செதுக்கியவை.
திமுகவின் மீது எப்பொழுதும் வசைபாடும் மே 17 என்ற சிறு அமைப்பின் தொண்டர்கள் கொள்கை ரீதியான நேரலை விவாத்த்திற்கு அஞ்சுகிறார்கள் என்று கேலியாக ஒரு பதிவு போட்டேன்.அதற்கு பதில் அளிக்க பலர் வந்தார்கள்.
ஆனால் இந்த நிமிடம் வரை தான் அதன் உறுப்பினர் என்றோ ஆதரவாளர் என்றோ ஒருவர்கூட ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஆபாச வார்த்தைகளில் வசைபாடுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் பலர் முகப்பில் தந்தை பெரியாரின் படத்தை வைத்திருக்கிறார்கள்.
தான் இந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்று வெளிப்படையாக சொல்லவே தயங்கவேண்டிய நிலைமை இருந்தால் பிரச்சனை உங்கள் கொள்கைகளில்தான்.
அவற்றை எங்குமே வெளிப்படையாக பேச முடியாது.

கருத்துகள் இல்லை: