சனி, 2 மே, 2020

இக்கால பெண்களுக்கு மொழியின் முக்கியத்துவம் புரிவதில்லை? கொளத்தூர் மணி வீடியோ


Devi Somasundaram : அரக்கர் டிவியில் திவிக தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் இயக்கமும் பெண்ணுரிமையும் என்ற தலைப்பில் ஒரு நீண்ட உரை தந்தார்
பொதுவா பெண்ணுரிமை பற்றி பேசும் போது எல்லோரும் பெரியார் என்ன எழுதினார், என்ன கூறினார் என்று தான் சொல்வார்கள் .மணி அண்ணன் பெரியார் இயக்கத்தில் பெண்கள் என்னவா இருந்தனர், என்ன செய்தனர் என்ற செயல்பாட்டு அடிப்படையில் தகவல் தந்தார் .
பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள், அவர்கள் அந்த காலத்திலயே ஆழ்ந்த ஆங்கில அறிவோடு எழுதிய கட்டுரைகள், நடத்திய மாநாடுகள் ..என்று பெண்கள் ஒரு இயக்கத்தின் முழு செயல்பாட்டையும் நடத்தி காட்டியதை அடையாளப் படுத்தினார் .
அதில் என்னை கவர்ந்த தகவல் .மொழிப்போராட்டத்தில் பெண்கள் ..இத்தனை வளர்ந்த இந்த காலத்தில் மொழியின் முக்கியதுவம் பல பெண்களுக்கு புரிவதில்லை .
அதை காக்க வேண்டிய அவசியம் புரிவதில்லை ..தன் தேவை தாண்டி சிந்திப்பதே இல்லை ..ஆனால் 1930 களில் ராஜாஜிக்கு எதிரா நடந்த மொழி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்கள் 73 பேர் .
அதில் ரொம்ப ஆச்சர்யமா 42 பேர் கைக் குழந்தையோடு கைது செய்யப் பட்டனர் . நல்லா யோசித்து பாருங்க ..மொழிப்போர்காக கைக் குழந்தையோடு இன்னிக்கு எத்தனை பெண்கள் வருவார்கள் .

அன்று கேமரா இல்லை, வீடியோ இல்லை ,வட்டம் போட்டு காட்டி விளம்பர்ம் செய்ய வாய்பபில்லை ..அத்துடன் ஜெயிலுக்கு வேறு போகனும் .
அத்தனை மொழி பற்று மற்றும் போராட்ட குணத்தோடு அன்று பெண்கள் வந்தது அத்தனை ஆச்சர்யமா இருந்தது..
இன்று நாம் பட்டாம் பூச்சிகளாய் பறக்கிறோம் என்றால் அதற்கு தன் தாய்மையை கூட கொண்டாடாமல் பல பெண்கள் நம்காக போராடியது தான் காரணம்.
நாம் இன்று நினைத்ததை பெறுகிறோம், நம் உரிமைகளோடு வாழ்கிறோம் என்றால் அது அத்தனை பெண்களின் தியாகத்தில் கிடைத்த பரிசு ..
நம் இறக்கைகளை தன் ரத்தம் வார்த்து வளர்த்த அந்த போராளிகளின் உழைப்புக்கு நாம் நன்றியோடு இருக்கனும் .
எனக்கு எல்லாம் கிடைச்சுடுச்சு நான் என் இஷ்ட்டத்துக்கு இருப்பேன்னு பெண்கள் வாழ்வது என் சாதி இருக்கு நான் இப்டி தான் இருப்பேன் என்ற பாப்பனியதிற்கு ஒப்பானது . .
அப்படி நம் முன்னோர்கள் நினைத்து இருந்தால் இந்த சுதந்திரம் நமக்கு சாத்தியமில்லை ..
நமக்கு நம் முன்னோர் பெற்று தந்த உரிமையை நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல உறுதி கொள்வோம்
அறிய தகவலை கொண்டு சேர்த்தற்க்கு நன்றி மணி அண்ணனுக்கு 🙏
நன்றி அரக்கர் டிவி

கருத்துகள் இல்லை: