சனி, 2 மே, 2020

பார்ப்பன வலையில் சிக்கிய திமுக உடன்பிறப்புகள்..!

தமிழரிமா வனத்தையன் : சீமான் போன்றவர்கள் ஈழத்தை ஆதரித்துக்கொண்டே திமுக வை எதிர்ப்பது , சீமான் எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவை தமிழின விரோத கட்சியாக மாற்றவே..!
இந்த மிக நுட்பமான சதி வலையில் இப்போது திமுகவினர் விழுந்து விட்டனர் என்ற புள்ளியில் பார்ப்பன சூழ்ச்சி வென்று விட்டது என்றே நாம் கருதவேண்டியுள்ளது..!
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் திமுக மீது வன்மம் கக்குவது வெளிநாடு வாழ் பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு அவர்கள் பலியாகி விட்டார்கள் என்பதுதான்.
ஈழ இன அழிப்புக்கு திமுக தான் காரணம் என்று பரப்பியவர்கள் எல்லாம் சிவசங்கர் மேனன், மற்றும் சதீஷ் நம்பியாரின் வகையறாக்கள் தான்..!
பார்ப்பனியம் தான் ஈழத்தை அழிப்பதில் முன்வரிசையில் நின்றது. ஒரு யூகத்துக்கு ஈழ இன அழிப்புக்கு திமுக துணை போயிருந்தால் பார்ப்பனர்கள் திமுக வை கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசியலில் என்ன நடக்கிறது என்பது தமிழ் தேசிய போதையில் திரியும் மூடர்களுக்கும் புரியவில்லை..!
அண்ணா மற்றும் கலைஞர் ஊட்டி வளர்த்த இன உணர்வை நெஞ்சில் தாங்கியுள்ளதாக சொல்லிக்கொள்ளும் சில திமுகவினருக்கும் புரியவில்லை...!!
ஆரியத்தை முன்னிறுத்தி தமிழினத்தை வசியம் செய்வதும், திராவிடத்தை முன்னிறுத்தி தமிழினத்தை வஞ்சிப்பதும் பார்ப்பன சித்து விளையாட்டுகளில் ஒன்று. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..!!
நமக்கு மிகப்பெரிய அறிவாற்றல் இல்லாவிட்டாலும் பார்ப்பான் எதை தீவிரமாக ஆதரிக்கிறானோ அதை நாம் எதிர்த்து விட்டாலே நாம் சரியான முடிவை தான் எடுத்துள்ளோம் என்பதை புரிந்து கொள்ளலாம் என்று அய்யா பெரியாரே சொல்லி சென்றிருக்கிறார்..!!
ஆனால் பார்ப்பனர்கள் எதிர்ப்பதை நாமும் எதிர்க்கிறோம், அவர்கள் ஆதரிப்பதை நாமும் ஆதரிக்கிறோம்..! இது நம் இனத்தின் வீழ்ச்சிக்கு வித்திடும் மகா முட்டாள்தனம்.

கருத்துகள் இல்லை: