வியாழன், 14 பிப்ரவரி, 2019

சாதி சான்றிதழில் "சாதியற்றவர்" ஒடுக்கப்பட்ட சமூகத்தை மேலும் இழிவுபடுத்தும்..

Shalin Maria Lawrence : கையால் மலம் அள்ளுபவர் "சாதியற்றவர்" என்று
சான்றிதழ் வைத்துக்கொண்டாலும் அவர் யார் என்று கண்டுபிடிப்பது பெரிய விஷயம் அல்ல.
ஊர் ,சேரி காலனி இருக்கும் வரை "சாதியற்றவர்" என்று சான்றிதழ் வைத்துக்கொண்டாலும் சாதியை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியும்.
"சாதியற்றவர் " என்று முன்னூறு சான்றிதழ் வாங்கி வைத்து கொண்டாலும் "ஏம்மா உங்க தாத்தா பாட்டி ஊரு எது?" என்று கேட்டே சடாரென்று சாதியை சொல்லிவிட முடியும்.
கோவிலுக்கு போனால் சாமிக்கு பூசை செய்பவனை வைத்து சாதியை சொல்லிவிட முடியும். அங்கே யாரும் சான்றிதழ் கேட்பதில்லை.
சுடுகாட்டில் பிணம் எரிப்பவர் "சாதி சான்றிதழ் " பார்க்காமல் அவர் யார் என்று சொல்லிவிட முடியும்.
ஆக இங்கே சாதியை கண்டுபிடிக்க ஓராயிரம் வழி முறைகள் இருக்க வெறும் பேப்பரில் சாதி ஒழிப்பது என்பது என்பது கண்ணை மூடி உலகம் இருண்ட கதை.
இங்கே தலித்துக்கள் தங்கள் உரிமைகளுக்காக சமூக சான்றிதழில் தங்கள் சமுக பெயர்களை போட வேண்டிய அவசியம் உள்ள நிலையில் சாதி சான்றிதழில் "சாதியற்றவர்" என்று போட்டு கொள்ளுவது ஒடுக்கப்பட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விஷயமாகும்.
இது காந்தி சொன்ன "அடுத்த ஜென்மத்தில் நான் தலித்தாக பிறக்க வேண்டும் " என்பதை போன்று அபத்தமானது.

கருத்துகள் இல்லை: