திங்கள், 11 பிப்ரவரி, 2019

திருச்சியில் ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பிரத்தியேக விடுதி

Isai Inban : காதல் திருமணம் செய்தவர்களுக்காக திருச்சியில் ஒரு பிரத்யேக விடுதி திருச்சியிலுள்ள அண்ணா நகரின் போலிஸ் காலனியில் அமைந்துள்ளது.
 இது 345 சதுர அடி நில பரப்பில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஆதலினால் காதல் செய்வீர் என்ற அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சே.குணசேகர் பேட்டியளித்துள்ளார். 

அதில் இந்த விடுதி சாதி மறுப்பு திருமணம் செய்து பாதுகாப்பு இடம் இல்லாமல் தவிப்பவர்களுக்காக கட்டப்பட்டுள்ளது. ஏனென்றால் சாதி மறுப்பு திருமணம் செய்த மணமக்கள் அதிக நேரம் காவல்நிலையங்களில் தங்க முடியாது அதனால் அவர்களுக்கு இது பயன்பெறும் வகையில் இருக்கும்.
விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியை ஆதலினால் காதல் செய்வீர் என்ற அமைப்பு உருவாக்கியுள்ளது. இந்த விடுதி
மேலும் இங்கு வரும் மணமக்களுக்கு பாதுகாப்பான தங்கும் இடம் மற்றும் சட்ட உதவி ஆகியவற்றை தரவுள்ளோம். இந்த விடுதிக்கு உரிய அங்கிகாரம் கோரி மாவட்ட சமூக நலத் துறைக்கு விண்ணப்பித்துள்ளோம். இதேபோன்ற விடுதிகள் பிற மாவட்டங்களிலும் அமைத்தால் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு நல்ல பாதுகாப்பாக அமையும் எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: