


நேற்று இரவு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் உடுப்பியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
உடுப்பியில் உள்ள மடத்துக்கு சென்ற எடியூரப்பா சுவாமியின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு மாநில அரசின் சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையும் செலுத்தப்பட்டது.
பின்னர், சுவாமி விஷ்வேஷா தீர்த்தரின் உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு நகருக்கு கொண்டு வரப்பட்டது. பெங்களூருவில் உள்ள பசவனகுடி பகுதியில் அவரது இறுதிச்சடங்குகள நடைபெற்று வருகின்றன.
மறைந்த
சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் தீவிரமான இந்து மதப்பற்றாளராகவும் சிறந்த
பக்திமானாகவும் வாழ்ந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர்
அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இவரது சீடர்களில் ஒருவராக
இருந்தனர்.
கோசாலைகள் மூலமாக பசுக்கள் பாதுகாப்பு, பசுவதை தடுப்பு, அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் ராமஜென்ம பூமி இயக்கம் ஆகிய கொள்கைகளில் அவர் திடமாக நின்றாலும், ரம்ஜான் நோன்பு காலத்தில் மடத்தின் சார்பாக முஸ்லிம்களுக்கு ‘இப்தார் விருந்து’ படைத்து மதநல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக