வியாழன், 2 ஜனவரி, 2020

நெல்லை கண்ணன் மட்டுமல்ல .... ஆர் எஸ் எஸ் பற்களின் நடுவே அமர்ந்திருக்கும் சூத்திரர்கள் ..

Kandasamy Mariyappan : நெல்லை திரு. கண்ணன்:!!!
2011 தேர்தல் நேரம், Channelஐ மாற்றும் பொழுது, நெல்லை திரு.கண்ணன் பேசுவதை கேட்க நேர்ந்தது. கலைஞரை அப்படி வசைபாடி கொண்டிருந்தார்.
அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் மிகவும் கன்னியமான வார்த்தை, "இந்த கருணாநிதி இருக்கானே மகா அயோக்கிய பய, திருட்டு பய" இதுமட்டுமே. மற்றவைகள் எப்படி இருந்திருக்கும். எனது கோபத்தில் TVஐ உடைக்க வேண்டும் என்று தோன்றியது. TVஐ Switch off செய்து விட்டேன்.
இன்று நெல்லை திரு. கண்ணனின் நிலை!!!???. யார் காப்பாற்றுவார்!!!???
RSSன் பின்னால் செல்லும் சூத்திர சங்கிகளின் கவனத்திற்கு,
நீங்கள் RSS மனது நோகாமல் நடந்து கொள்ளும் வரையில்தான் உங்களுக்கு ஏதோ மரியாதை கிடைப்பது போன்று இருக்கும். சற்றே விலகினால் அது உங்களை காலிலேயே போட்டு மிதிக்கும்.
சூத்திர சங்கி நடிகர் திரு. சிவக்குமார் இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் பற்றி சிலாகித்துக் கொண்டிருந்த வரையிலும், ஆகா ஓகோ பேஷ் பேஷ் என்று ஷொன்ன RSS கூட்டம்
ஒருமுறை, ஒரே முறை மாற்றிப் பேசியதும் சிவக்குமாரை வீதியிலேயே போட்டு மிதித்தது.
இன்னொரு சூத்திர ஷங்கி சஷுகி. சஷிவம், ஷெல்லுமிடமெல்லாம் RSS பஜனைதான். அதுவரையில் சுகி. சிவம் அவர்கள் RSSன் Chief Guest. ஒருமுறை, ஒரே ஒருமுறை மக்கள் பெரியாரை படிக்க வேண்டும் என்றார். பாவம், சுகி சிவம் அவர்களை RSS, மூத்திர சந்தில் வைத்து துவைத்து எடுத்தது.

மற்றுமொரு சூத்திர சங்கியான நேற்றைய ஹீரோ திரு. நெல்லை கண்ணன், கலைஞரை திட்டாத நாளே இல்லை. சமீபகாலமாக பார்ப்பனீயத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டினார். நெல்லை கண்ணனை, RSS சாக்கடையிலேயே முக்கி எடுத்தது. இப்பொழுது தமிழ் ஆட்சியாளர்களை வைத்தே கைது செய்து சிறையில் வைத்து துவைக்கப் போகிறது. அதாவது நமது கையை வைத்து நமது கண்ணை குத்துகிறது.

இதுபோல்தான் சூத்திர சங்கி பழ. கருப்பையாவின் நிலையும்!
எனவேதான் கூறுகிறேன், RSSக்கு அடியாட்களாக இருக்கும் வரையில்தான் பொ.ராதாகிருஷ்ணன், பா.ராதாகிருஷ்ணன், அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் அங்கே இருக்கலாம். சற்றே திமிரினால், அவர்களுக்குத் தேவையானதை கொடுத்து மூலையில் உட்கார வைக்கும்.
திரு. பன்னீர்செல்வம் மற்றும் திரு. பழனிச்சாமிகளுக்கும் அதே நிலைமைதான்.
சூத்திர பிண்டங்களே தயவுசெய்து புரிந்து நடந்து கொள்ளுங்கள். நமது உரிமைகளை நாளுக்கு நாள் நாம் இழந்து கொண்டே இருக்கிறோம்.
RSS தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்கான ஆள்பிடிக்கும் வேலைதான்
கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், அர்ஜுன் சம்பத், இளையராஜா, பொ.ராதாகிருஷ்ணன், ப. ராதாகிருஷ்ணன், ராமதாசு, வாசன், விஜயகாந்த், சண்முகம் எல்லாம்.
நீங்கள் திமுகவை எதிர்க்கிறேன் என்று சிங்கத்தின் வாயில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் அத்தனை நண்பர்களும், RSSன் இரை என்பதை மறந்து விடாதீர்கள்.