புதன், 5 செப்டம்பர், 2018

ஏப்ரல் 21...உண்மையான தினமாகக் கொண்டாட வேண்டியநாள்.. மகாத்மா_பூலே #சாவித்ரிபாய்_பூலே

Natarajan Rajakumar Rajkamal : மனசாட்சியோடு வரலாற்றை நோக்குபவர்களுக்குப்
புரியம். இந்திய வரலாறு பெரும்பகுதி துரோகத்தாலும் இருட்டடிப்பாலும் உருவானது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். எழுதப்பட்டுவிட்டதாலேயே ஒரு வரலாறை கட்டி அழவேண்டிய அவசியம் நமக்கு தலைவலியாய்தான் நாளும் பின்தொடரும்.
எழுதப்படாத வரலாற்றில் புதைந்துள்ள உண்மைகளை நாம் எப்போது கைப்பற்றி நடக்கிறோமோ அப்போதுதான் உண்மையான ஜனநாயகத்தையும் சோஷலிசத்தையும் நம்மால் படைக்கமுடியும்.
ஆம்! அப்படி இருட்டிப்புக்கும் துரோகத்திற்கும் ஆளானவர்கள்தான் "மகாத்மா ஜோதிராவ் பூலே-சாவித்ரிபாய் பூலே" ஆவார்கள். நான் இதை எழுதுவதற்கு முக்கியமான காரணம், செப்டம்பர் 5 சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுப்படுவதின் வரலாற்று பிழைகளைச் சுட்டிக்காட்டாவே..
பூலே பிறந்தது 1827 ஏப்ரல் 21 , இராதாகிருஷ்ணன் பிறந்தது 1888 செப் 5. பூலே பிறந்தது சரியாக 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ராதாகிருஷ்ணன் பிறக்கிறார். பூலே, ராதாகிருஷ்ணன் பிறந்த இரண்டாமாண்டே அதாவது 1890 லேயே இறந்துவிடுகிறார். அப்படியெனில் இராதாகிருஷ்ணன் பிறப்புக்கு முன்பே தன் வாழ்நாள் பணியை புரட்சிகரமாக செய்து முடித்துவிட்டார்.

1848-ல் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு தனிப்பள்ளி தொடங்கினார். பிறகு, 1851-ல் அனைத்து சாதி பெண்களுக்குமான பள்ளி என மாற்றினார். பல சவால்களுக்கிடையிலும், ஆதிக்க சாதி வெறியர்களுக்கிடையிலும் ஆசிரியர் கிடைக்காமல் தனது மனைவியை ஆசிரியராக பயிற்றுவித்து சமூகப் புரட்சியை செய்தார். இதையெல்லாம் பாராட்டும் விதமாக 1888-ல் புனேவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ஜோதிராவ் பூலேவுக்கு "மகாத்மா" என்ற பட்டம் வழங்கப்பட்டது. காந்திக்கு மாகாத்மா என்பது கொடுக்கப்பட்ட பட்டமல்ல சூட்டிக்கொண்ட பட்டம் என்பது நாம் பிற்காலங்களில் அறிந்து கொண்ட உண்மை.
அதுமட்டுமல்ல பூலே விதவை மறுமணம், குழந்தை திருமணம், சாதி ஒழிப்பு, மத எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு என பல தளங்களில் இந்திய முற்போக்காளர்களுக்கெல்லாம் தந்தையாக இருந்துள்ளார்.
இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் பூலே பிறந்து 60 ஆண்டுகளுக்கு பின்னால் பிறந்த ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக இந்திய அரசாங்கம் கொண்டாடுவது வரலாற்று இருட்டடிப்புதான் என்று சொல்லத்தோன்றுகிறது.
ராதாகிருஷ்ணன் பேராசிரியராக இருந்தார், தத்துவவாதியாக இருந்தார், துணைவேந்தராக இருந்தார், பல்கலைக் கழக ஆணையத்தின் தலைவராக இருந்தார், வேதநூல்களின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார், ஜனாதிபதியாக இருந்தார் என்பதால்தான் அவர் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக இந்திய அரசாங்கம் கொண்டாடுகிறது என்றால் அதைவிட சிறப்புக்குறியவர் மாகாத்மா பூலே ஆவார்.
காரல் மார்கஸ் சொல்வதைப்போல "உலகை ஆராய்வதல்ல வரலாற்றின் பணி, உலகை மாற்றுவது" என்பார். அந்த கூற்றை மெய்ப்பித்துக்காட்டியவர் மகாத்மா பூலே.
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு அதுவும் பெண்களுக்கு 1848 -லேயே பள்ளி தொடங்கி தன்மனைவியையும் ஆசிரியராக்கி சமூகமாற்றத்திற்கு வித்திட்டவர். இவர் பிறந்தநாள்தானே ஆசிரியர் தினமாக கொண்டாடியிருக்கவேண்டும்.
அவர் கல்விப்பணி மட்டுமா செய்தார். தீண்டாமை ஒழிப்பு, பெண் அடிமை, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, மத எதிர்ப்பு என பல தளங்களில் போராடியுமுள்ளார். இவருடைய பிறந்த நாள்தானே ஆசிரியர் தினமாக கொண்டாடியிருக்க வேண்டும்.
வராலாறை மாற்ற நினைக்கும் நாமும் சூழ்ச்சிக்கு இரையாகி போலியான ஆசிரியர் தினத்தைக் கொண்டாடலாமா?
#மகாத்மா_பூலே #சாவித்ரிபாய்_பூலே

கருத்துகள் இல்லை: